<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-35738787</id><updated>2012-01-26T17:21:32.977+05:30</updated><category term='ஆண்டாள்'/><category term='மயில்'/><category term='கருப்பூரம் நாறுமோ'/><category term='நிகழ்வுகள்'/><category term='*'/><category term='காதல் கவிதை'/><category term='தேசியப் பறவை'/><title type='text'>எண்ணிய முடிதல் வேண்டும்!</title><subtitle type='html'>நல்லவே எண்ணல் வேண்டும்!

திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்!
பண்ணிய பாவமெல்லாம்
பரிதி முன் பனியே போலே
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அம்மா! 

---மகாகவி பாரதியார்--</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>276</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-3472571582232077280</id><published>2012-01-23T15:35:00.001+05:30</published><updated>2012-01-23T20:29:21.548+05:30</updated><title type='text'>தேசத்தை நேசித்த நேதாஜி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Cb0S7LLzx34/Tx0iJUxn_kI/AAAAAAAAA7M/k3C8YitnKpE/s1600/397270_287360807989383_189960617729403_819615_312029813_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" nfa="true" src="http://2.bp.blogspot.com/-Cb0S7LLzx34/Tx0iJUxn_kI/AAAAAAAAA7M/k3C8YitnKpE/s1600/397270_287360807989383_189960617729403_819615_312029813_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாரத தேசத்தின் மறக்க முடியாத தேசீயவிடுதலைப் போராட்ட வீரரும் தலைவரும் ஆவார், நேதாஜி.1897 ஆம் ஆண்டு, ஜனவரி 23 ஆம் தேதி பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரைப்பற்றி சுருக்கமாய் சில செய்திகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளவயதிலேயே தேசப்பற்றும் மிகுந்த அறிவாற்றலும் கொண்டு இருந்தார் நேதாஜி. சிறு வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெட்ரிகுலேஷன் தேர்வில் வங்க மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்கட்டாவில் உள்ள ஸ்காட்டிஷ் சர்சஸ் கல்லூரியில் தத்துவவியல் படிப்பில் முதல் வகுப்பில் வந்து, பெற்றோரின் ஆசைக்கினங்க Indian Civil Services (ICS) தேர்வில் பங்கு கொள்ள 1919 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றார். தேர்வில் நான்காவதாக தேர்ச்சி பெற்றார் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த ஜாலியன் வாலாபாக் படு கொலை அவரை வெகுவாக பாதித்தது. அதனால் தனது அலுவல் பயிற்சியை பாதியிலேயே விட்டு விட்டு 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா திரும்பிய நேதாஜி, மகாத்மாவின் தலைமையில் தனது சுதந்திர போராட்டத்தை துவக்கினார். அதன் முதல் படியாக இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காந்திஜியின் அஹிம்சை தத்துவங்களை ஏற்காமல் சிறிது காலத்திலேயே கல்கட்டா சென்று அங்கே சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் தலைமையின் கீழ் தனது போராட்டத்தினை மேற்கொண்டார். பின்னர் அவரையே தனது ஆசானாகவும் வழி காட்டியாகவும் ஏற்றுக் கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1921 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வரவேற்பு ஏற்பாடுகளை கண்டித்து போராடி சிறை சென்றார். சிறையில் தனது ஆசான் சித்திரஞ்சன் தாஸ் அவர்களுக்கு பணிவிடை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1924 ஆம் ஆண்டு கல்கட்டா கார்ப்பரேஷனின் CEO வாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட மாத சம்பளம் 3000 ரூபாய். ஆனால் அவர் 1500 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் தீவிரவாதத்தை பரப்பிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1925 ஆம் ஆண்டு நடந்த சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் மரணம் அவரை வெகுவாக பாதித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1930 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். அதனால் மீண்டும் சிறை சென்றார். . பகத் சிங்கின் முடிவால் நாடே கொதித்துக் கொண்டிருந்த வேளையில், நேதாஜி சிறையில் இறந்தால் கலவரம் ஏற்படும் என்று பயந்தது ஆங்கிலேய அரசு. அதன் தொடர்ச்சியாக 1932 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நாடு கடத்தப் பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;1932 முதல் 1936 வரை அவர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயனம் செய்து பல தலைவர்களை சந்தித்தார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், முஸோலினி (இத்தாலி), ஃபெல்டர் (ஜெர்மணி), வலேரா (ஐர்லாந்து) மற்றும் ரோமா ரோலான்ட் (ஃபிரான்ஸ்). அவர் ஹிட்லரையும் சந்தித்ததாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில், 1936 ஆம் ஆண்டு அவர் தனது இந்திய வருகையை அறிவித்து விட்டு, பம்பாய் வந்தார். அதற்காக அவர் மீண்டும் கைது செய்யப் பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1937 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப் பட்டார். அதை தொடர்ந்து 1938 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். அந்நிலையில், அவர் முஸ்ஸோலினி போன்ற தலைவர்களை ஐரோப்பாவில் சந்தித்ததை அறிந்த காந்திஜி, அவர் காங்கிரஸின் தலைவராக இருப்பதை விரும்பவில்லை. அதற்காக 1939 ஆம் ஆண்டு மீண்டும் நடந்த தேர்தலில் நேதாஜியை எதிர்த்து போட்டி இட நேரு மற்றும் ராஜேந்திர பிரஸாத் இருவரின் விருப்பத்தையும் கேட்டார். அவர்கள் இருவரும் அதற்கு இனங்காததால், நேதாஜியை எதிர்த்து போட்டி இட திரு. பட்டாபி சித்தராமையாவை நிறுத்தினார். ஆனால் நேதாஜி 1580 - 1371 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திஜி "நேதாஜியின் வெற்றி எனது தோல்வி" என்று அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;. &lt;br /&gt;இந்நிலையில் 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணங்களின் தலைமைகளை கலந்து ஆலோசிக்காமல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை போரில் ஈடுபடுத்தினர். இதற்கு நேதாஜி கடும் கண்டனத்தை தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து அவர் இந்திய மக்களுக்கு போருக்கு ஆயத்தமாக வேண்டுமென ஒரு கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கைக்கு பல லட்சம் மக்கள் திரண்டெழுந்தனர். அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தால் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த நேதாஜி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. உலக யுத்தம் நடக்கும் நேரத்தில், நேதாஜி இறந்து இந்தியாவில் உள் நாட்டு கலவரம் நடப்பதை விரும்பாத ஆங்கிலேயர்கள், அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். 1941 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி அவரும் அவரது உறவினர் திரு. குமார் போஸும் காவலில் இருந்து தப்பினர். அவர் காவலில் இருந்து தப்பித்த செய்தியே அரசுக்கு, ஜனவரி 26 ஆம் தேதி தான் தெரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காவலிலிருந்து தப்பிய நேதாஜி, அஃப்கானிஸ்தான் பழங்குடியினரை போல் வேடம் திரித்து காபுல் வழியாக அஃப்கானிஸ்தானை கடந்து ரஷ்யா சென்றார். மாஸ்கோ சென்ற அவர் ரஷ்ய தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனால் அவர் எதிர் பார்த்த உதவியை ரஷ்ய தலைவர்கள் அளிக்கவில்லை. . &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், நேதாஜி இறந்து விட்டார் என்ற வதந்தியை BBC இந்தியா முழுதும் பரப்பியது. அதை இந்திய மக்களும் நம்பினர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது நேதாஜி அவர்களே ஜெர்மனியிலிருந்து அதாவது1941 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் ஜெர்மனியில் இருந்து உருவாக்கிய சுதந்திர இந்திய வானொலியில் உரையாற்றினார். "நான் இன்றும் உயிருடன் இருக்கும் சுபாஷ் சந்திர போஸ் பேசுகிறேன்." என்று தொடங்கும் அந்த உரையில் அவர், ஜெர்மணியில் இருந்தே சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். டாகூரின் "ஜன கன மன" கீதத்தை தேசிய பாடலாகவும், ஹிந்தியை தேசிய மொழியாகவும், காந்திஜியை தேச தந்தையாகவும் அறிவித்தார். "ஜெய் ஹிந்த்" என்ற பதத்தை முதன் முதலில் பயன் படுத்தியதும் அவர் தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் நேதாஜி உயிரோடு இருப்பதை அவரது உரை மூலம் அறிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் அவரை கொலை செய்யுமாறு உளவுத்துரைக்கு ஆணை பிறப்பித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1943 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினைத் தொடர்ந்து 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். அதனால் மனம் வருந்திய நேதாஜி வங்காள மக்களுக்கு பர்மிய அரிசியை தர முன் வந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு அதை ஏற்க மறுத்தது. மேலும் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வந்த உணவுப் பொருட்களை இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் நேதாஜியின் கோபம் பல மடங்கானது. &lt;br /&gt;&lt;br /&gt;1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பர்மாவை கைப்பற்றியது ஜப்பானிய இராணுவம். அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை இரங்கூனுக்கு மாற்றினார் நேதாஜி. அதைத் தொடர்ந்து கோஹிமாவிலும், இம்பாலிலும் நடந்த போரில் ஜப்பானியர்களுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. அதனால் அவர்கள் இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு அளித்த உதவியையும் ஊதியத்தையும் நிறுத்திக் கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானும் இந்திய தேசிய இராணுவத்திற்கு தணம், யுத்த தளவாடம் போன்றவற்றை தருவதுடன், யுத்தத்தில் கைப்பற்றப்படும் இந்திய நாட்டு பகுதிகளை நேதாஜியிடம் ஒப்படைக்க உருதி தந்தனர். 85000 வீரர்கள் இருந்த அந்த இராணுவத்தில், கேப்டன் லட்சுமியின் தலைமையில் தனி பெண்கள் பிரிவு படையும் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயத்தில் (ஆங்கிலேய) இந்திய இராணுவத்திலிருந்து பலர் இந்திய தேசிய இராணுவத்திற்கு வருவார்கள் என்ற நேதாஜியின் நம்பிக்கைக்கு மாற்றாக இந்திய தேசிய இராணுவத்திலிருந்து பலர் வெளியேறினர். இதனால் அவர் வீரர்களை ஊக்குவிக்க பல உரைகளை ஆற்ற வேண்டி இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது உரைகளில் மிகவும் 1944 ஆம் ஆண்டு பர்மாவில் இந்திய தேசிய இராணுவத்தினருக்கு அவர் ஆற்றிய "உதிரம்(ரத்தம்) அளியுங்கள் சுதந்திரம் அளிக்கிறேன்" என்ற உரை. நெகிழ்வானது."நமக்கு ஒரே ஒரு கனவு மட்டுமே இருக்க வேண்டும். அது மரணத்தைத் தழுவும் கனவு; ..ஆம் இந்தியா வாழ நாம் இறப்பது அவசியம். " என்றார் உணர்ச்சிவசப்பட...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;. அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் நேதாஜிக்கு சாதகமாக இல்லை. ஜெர்மனி ஜப்பான் மற்றும் இத்தாலியின் தொடர் தோல்விகள் நேதாஜியை மிகவும் சிந்திக்க வைத்தன. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது. உலகம் முழுவதும் 6 கோடி மக்களின் உயிரைக் குடித்த பிறகு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பான் சரணடைந்தாலும் தான் சரணடைய மறுத்து, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி பாங்காக் சென்றார். 17 ஆம் தேதி அங்கிருந்து சாய்கோன் சென்றார். அவருடன் அபிபூர் ரெஹ்மான், ப்ரீதம் சிங், அபித் ஹாஸன், S.A. ஐயர், தேப்நாத் தாஸ் ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்து தாய்பேய் செல்ல இருந்த விமானத்தில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருப்பதாகவும், அவர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மட்டும் தாய்பேய் சென்றார். அங்கிருந்து டாய்ரன் செல்ல திட்டமிட்ட அவர் 17 ஆம் தேதி காலை 5 மணிக்கு இரு பெரிய பெட்டிகளில் தங்கத்துடன் மேலும் 10 ஜப்பானியர்களுடன் விமானத்தில் ஏறினார். விமானம் கிளம்பி உயரே பறந்து 30 அடி உயரம் சென்றதும் வெடித்து சிதறியது. அவரது மரணத்தை பற்றி பலர் பலவித கருத்துக்களை தெரிவிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுதல் யார்க்கும்எளிதாம் அரிது சொல்லியவண்ணம் செயல் &lt;br /&gt;என்பார்கள். நேதாஜி சொல்லியதை செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசியவாதிகள் தேசத்தில் குறைந்து&lt;br /&gt;அரசியல்வாதிகள் அதிகமாகி விட&lt;br /&gt;தேசத்தை மீட்க தியாகம் செய்த&lt;br /&gt;நேசத்தலைவர்களை மறந்தே விட்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;தியாகங்களையும் செயற்கறிய செயல்களையும் செய்தவரை, அன்னாரது பிறந்த நாளிலாவது நினைத்து&amp;nbsp; நேதாஜியின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெய்ஹிந்த்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-qA74lO0nd1U/Tx11vn3aKII/AAAAAAAAA7U/XLTyFlAPPIY/s1600/bose.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="230" nfa="true" src="http://1.bp.blogspot.com/-qA74lO0nd1U/Tx11vn3aKII/AAAAAAAAA7U/XLTyFlAPPIY/s320/bose.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-3472571582232077280?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/3472571582232077280/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=3472571582232077280&amp;isPopup=true' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/3472571582232077280'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/3472571582232077280'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2012/01/blog-post_23.html' title='தேசத்தை நேசித்த நேதாஜி!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Cb0S7LLzx34/Tx0iJUxn_kI/AAAAAAAAA7M/k3C8YitnKpE/s72-c/397270_287360807989383_189960617729403_819615_312029813_n.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-6655796238382272477</id><published>2012-01-20T21:33:00.001+05:30</published><updated>2012-01-20T21:38:18.929+05:30</updated><title type='text'>வெள்ளை கோபுரம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-DAO-5bjupd8/TxmPCEXZZqI/AAAAAAAAA68/lkX9j3OlJ7Y/s1600/vellaigopura12vy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="296" nfa="true" src="http://1.bp.blogspot.com/-DAO-5bjupd8/TxmPCEXZZqI/AAAAAAAAA68/lkX9j3OlJ7Y/s400/vellaigopura12vy.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நத்தை ஊர்ந்தால்கூட சத்தம் கேட்கும், அத்தனை அமைதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனார் அகளங்கன்மண்டபத்தை அடைந்துவிட்டார். சுற்றும்முற்றும் பீதியுடன் பார்த்துவிட்டு முகத்தைதுடைத்துக்கொண்டார். மேலாடை நனைந்ததே தவிர முகம் உலரவில்லை. இடுப்பிலிருந்த சாவிக்கொத்தைத் துழாவிசரிபார்த்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரே திருமாமணி மண்டபம். ஆயிரங்கால்களும் வேத ரகசியம் பேச , நெய்ப்பந்தங்களின் குளிர் ஒளியில் இலக்கியவாதங்களும் தத்துவ விசாரணைகளும் நிகழும் இடமாகவா இருந்தது அது ?அந்த ஆயிரம் கால்களும் குறுகிப்புதைந்து நிற்கின்றன. அங்கே சுவர்க்கோழிகளுக்குக்கூட தொண்டை அடைத்துக்கொண்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனார் பெருமூச்சுவிட்டார். அது மூச்சாக இல்லை. தீ வீச்சாக இருந்தது. நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எண்ணிப்பார்க்க அமுதனாருக்கு விருப்பமில்லை. அவை துயரில் வெடித்தவை. பெரிய கோயிலுக்கு இந்த நிலை வரும் என்று யார் எண்ணினார்கள்! ஒன்றுமே அறியாதவர் போல் அறிதுயில் கொள்ளும் அரங்கப்பெருமானின் திரு உள்ளம்தான் என்ன? விதியின் சிரிப்பு அவர் செவியில் விழவில்லையா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சுவாமி!"&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனார் திடுக்கிட்டுப்போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுவாமி பயப்படவேண்டாம் நாந்தான் சிங்கன். நீங்கள் எப்போது ?சாவிக்கொத்துக்களைமறைத்துவிட்டீர்கள் அல்லவா?" என்று கேள்வியும்பதிலுமாய் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"சிங்கா! அதையெல்லாம் பிறகு பேசுவோம். நீ எப்போது வந்தாய் எப்படி வந்தாய் வெளியே நிலவரம் எப்படி அதைச்சொல் ?" என்றுபடபடத்தார் அமுதனார்&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கன் விட்ட பெருமூச்சில் அந்த மண்டபமே அதிர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"எதைச்சொல்வது சுவாமி? நம் கையே நம்கண்ணைக்குத்துகிறது. இதுதான் இப்போதைய செய்தி "என்றான் குரலுடைந்தவனாய்&lt;br /&gt;&lt;br /&gt;"புதிர்போடாமல் விளங்கும்படி சொல் சிங்கா"&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படிச்சொல்வேன்? சொல்ல நாக்கூசுகிறது. நம்கோவிலில் சேவகம் செய்கிறார்களே கனகம் வெள்ளை நாச்சியார் என்ற இரு கணிகை சகோதரிகள் ,அவர்களேதான் இப்போது நம் எதிரிகள் படையெடுத்துவந்திருக்கும் வ்டவர்கள் அல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;"நீ என்ன சொல்கிறாய்?"&lt;br /&gt;&lt;br /&gt;"கேளுங்கள் சுவாமி.இளையவள் வெள்ளைநாச்சியார் இருக்கிறாளே அவள் தளபதி அடில்கானின் மனையாட்டியாகப்போகிறாளாம் !ஊரே இந்தச்செய்தியில் வெந்துகொண்டிருக்கிறது."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்னால் நம்பமுடியவில்லை சிங்கா ! ஆனால் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்ற நிலை கடந்துபோய்விட்டது ,நல்லது ,இதற்கு ஒரு வழிகாண வேண்டும் இதோபார் சிங்கா! உயிரைப்பெரிதென்றுகருதாமல் எப்படியாவது பெரியகோயிலின் பொக்கிஷத்தை நாம்காப்பாற்றியாகவேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt;"சுவாமி! எனக்கென்னவோ பயமாக இருக்கிறதே."&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனார் மெல்லச்சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பயப்படாதே ! இது நமக்கு ஒரு சோதனை. இதில் வெற்றி பெற நெஞ்சுறுதி வேண்டுமடா !பெருமான் உன்னை ஆசிர்வதிப்பார்!"&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கன்பதுங்கிப்பதுங்கி ஓடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழக்கோபுரத்தருகே காலோசைகள் கேட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;காவலாள்கள் தன்னைகக்ண்டுகொள்வார்களோ என்ற பயத்தில் தூணோடுதூணாகச்சாய்ந்தார் அமுதனார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருகைவிளக்கு எட்டிப்பார்த்துவிட்டு மறைந்தது. சிறிதுநேரம் காத்திருந்துவிட்டு அமுதனார் மெல்ல மெல்ல திருமாமணி மண்டபம் நோக்கி நடக்கலானார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்டபத்தின் கோடியை அடைந்ததும் சுற்றுமுற்றும்பார்த்தார் நல்லவேளை இதுவரை தப்பி வந்தாயிற்று . இனி என்ன நேருமோ?&lt;br /&gt;&lt;br /&gt;அவசரம் அவசரமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் குழி பறித்தார். சாவிக்கொத்தை அதில் இட்டுமண்ணைமூடினார். ஓடிப்போய் நாலைந்து செடிகளைப்பறித்துவந்து அவைகளின்மீது மண் தெரியாமல் மூடினார்.அதிலும் திருப்தியின்றி ஒருகுத்துக்கல்லைக்கொண்டுவைத்தார்.அந்த இடத்துக்கு அடையாளமாக் மதிலில் ஒரு திருநாமக்குறி இட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிற்று! இனிபயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சமயம் மண்டபத்துக்குள் யாரோ நடந்துவரும் ஓசைகேட்டது.அமுதனாருக்கு ரத்தமேஉறைந்துவிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;"யார் அங்கே?"&lt;br /&gt;&lt;br /&gt;குரல் கணீரென்றுவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனார், மரத்தோடுமரமாகநின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அமுதனார் சுவாமிகளா?"&lt;br /&gt;&lt;br /&gt;குரலைஇப்போது அவர் அடையாளம் கண்டுகொண்டார் .&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைநாச்சியாரின்குரல்தான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்" என்றவர் "நீ எங்கே வந்தாய் இந்தவேளையில்?" எனக்கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லகேள்விகேட்டீர்கள்!" என்றுகூறி சிரித்தாள் வெள்ளையம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச்சிரிப்பை அமுதனாரால் ரசிக்கமுடியவில்லை. எரிச்சலுடன் "சிரிக்காதே வெள்ளையம்மா ! நன்றாக இல்லை " என்றார் பட்டென்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சிரிக்கக்கூடவா ஆட்சேபணை?"&lt;br /&gt;&lt;br /&gt;"வெள்ளையம்மா ! பெண் இனத்துக்கு உரித்தான பேதமைஉன்னைமறைத்திருக்கிறது. உன்னைச்சொல்லிப்பயனில்லை ,உன் விருப்பம் போல சிரி .இப்போதைய நிலையில்விதியோடு சேர்த்து நீயும் சிரிப்பதில் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை . சிரியம்மா சிரி."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஏன் சிரித்தேன் என்பதற்குக்காரணம்கேட்டால் நீங்கள் கோபிக்கமாட்டீர்களே?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை . ஏன் உன் மேல் எதற்கு கோபம் வரவேண்டும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லது.சொல்கிறேன்சாவிக்கொத்தைமறைத்துவிட்டால்மட்டும் எல்லாவற்றையும் காப்பாற்றி விட்டதாகி விடுமென்று நீஙகள் எண்ணுகிறீர்களே, அதை நினத்துத்தான்......"என்று சொல்லிமீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனார் பதைபதைத்தார் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியானால்...அப்படியானால் எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொண்டுதான்இருந்தாயா?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா தாயே! உனக்குப்புண்ணியமுண்டு. வெளியில்சொல்லிவிடாதே அரங்கப்பெருமான் மீது ஆணை, வெளியே சொல்லீ விடாதே."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் இப்படிபயப்படுகிறீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"வெள்ளையம்மா! என்ன கேள்விகேட்கிறாய்.?.. உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருக்கும்போது உன் கேள்வி சற்றும் சரியாக இல்லை .ஆனால் இதையும் தெரிந்துகொள். உயிரைப்பணயம் வைத்துதான் இந்தத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள்பக்தியின்பெருமை எனக்குதெரியாதா? நல்லது .நகைகளை எங்கே பதுக்கி வைத்திருக்கிறீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;சாவதானமாக் ஆனால் அழுத்தமாக இப்படிவெள்ளைநாச்சியார் கேட்கவும் அந்தக்கேள்வியின் உட்கருத்து அமுதனாருக்கு விளங்கிவிட்டது. மனதை திடப்படுத்திக்கொண்டு மீண்டும் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" வெள்ளையம்மா! யார்கண்ணிலும் படாமல் இதுவரை என் பொறுப்பை நிறைவேற்றுவதாய் எண்ணி இருந்தேன் ,ஆனால்,பெருமாள் உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். அவருடைய திரு உள்ளம் அதுவாக இருந்தால் நான் ஏன் உன்னிடம் மறைக்கவேண்டும்! நகைகள் நிலவறையில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு உன் சாகசத்தால் நீ எங்களைக் கவிழ்க்க நினைத்தால் உயிரைக்கொடுத்தாவது அவற்றைக் காப்பாற்றியே தீருவேன்"என்றார் படபடப்புடன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுவாமி ,மலைமீது மோதிக்கொளதில் அர்த்தமில்லை .பகைவர்கள் படைபலம் எங்கே உங்களது மனபலம் எங்கே ! என் வார்த்தையைக்கேளுங்கள். நிலமைகட்டுக்குமீறிவிட்டதால் நீங்கள் எப்படியாவது தப்பித்து ஒடிவிடுங்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அமுதனார் சிரித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"வெள்ளையம்மா! இப்போது உன் நிலமைக்கு வருந்துகிறேன் . உயிரை வெல்லமென்றுகருதி நீ உன்னையே இழந்து நிற்கின்ற கோலத்தைக்கண்டு வருந்துகிறேன் .ஆனால் உன்னிடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். உன் அழகும் அறிவும் இப்படிப்பாழாக வேண்டாம்!" என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;"சுவாமி!" அலறினாள் வெள்ளையம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனாரை ஏறிட்டவள் தொடர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான்பெண்தான் .ஆனால் உங்களைப்போல எனக்கும் எண்ணற்ற தாபங்கள் இருக்கின்றன அவற்றை எண்ணாமலேயே பேசுகிறீர்களே?"&lt;br /&gt;&lt;br /&gt;"உன் தாபம் புரிகிறதம்மா ..அர்த்தமற்ற பாவம் அது. தயவு செய்து என்னை உன்னோடு உவமானப்படுத்திப்பார்க்காதே... நான் வேறு,நீ வேறு" என்றார் எரிச்சலுடன்&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் திரும்பினார். மதிலின் அருகில் வளைந்திருந்த தென்னைமரத்தைப்பற்றித் தப்பிச்சென்றுவிட திட்டம் வகுத்திருந்தார். அதன்படி நடக்கமுனையும்போது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நில்லுங்கள் !என்னோடுவாருங்கள்!" என்றாள் வெள்ளையம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கென்ன பைத்தியமா ?கோபுர வாசல்பக்கம் பகைவர்கள் நிற்கிறார்கள். என்னை விடுவார்களா அவர்கள்,என்னைப்போய் உன்னோடுவரச்சொல்கிறாயே ?"என்றுகூறிமரத்தின்மீதுவேகமாக ஏறத்தொடங்கினார் அமுதனார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரத்தில்படபடத்த அவரதுகுரல் கீழ்க்கோபுரவாயிலில் இருந்த காவலர்களின் செவிகளில் விழுந்துவிட்டது. அடுத்தநிமிடம் திமுதிமுவென ஒருகூட்டம் மண்டபத்துக்குள் புகுந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனார் பருத்த சரீரமுடையவர் மன உறுதிக்கு ஏற்ற உடலுறுதி இல்லை அவரிடம் . தன் வாழ்நாளில் தென்னைமரத்தில் ஏறியும் அறியாதவர் எனவேபாதிமரத்திலிருந்து உருண்டுகிழே விழுந்தது விட்டார்.&lt;br /&gt;உடம்பெல்லாம் ஆடியது அமுதனாருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்னகூச்சல் இங்கே! வெள்ளையம்மா நீ இங்கேயா இருக்கிறாய் ?"என்றுகேட்டபடி தளபதி வந்தான்.அமுதனார் தமது இறுதிக்காலம் வந்துவிட்டது என்பதைஉணர்ந்தார் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இந்த வெள்ளையம்மா மட்டும், வந்திருக்காவிட்டால் எப்போதோதப்பித்துப்&amp;nbsp; போயிருக்கலாம்..ஹ்ம்ம்...'&lt;br /&gt;&lt;br /&gt;அவளைமானசீகமாக சபித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் காவல்காக்கிறலட்சணம் இதுதானா! இந்தமனிதன் எப்படி உள்ளே நுழைந்தார்? நான் வராவிட்டால் என்ன ஆகி இருக்கும்,ம்?" என்று வெள்ளையம்மா தளபதிக்குமேல் தன்குரலைஉயர்த்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீரர்கள் நடுங்கிக் குறுகினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தளபதி ஆத்திரம்தீர அவர்களை கடுமையாய்பேசிவிட்டு தனது நீண்ட சவுக்கினை எடுத்துக்கொண்டு அமுதனாரின் அருகில் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனார் கண்ணைமூடிக்கொண்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்பெரிதில்லை ஆனால்சித்திரவதையை அவரால்தாங்கமுடியாது இன்னும் என்னென்ன நடக்குமோ அரங்கா!&lt;br /&gt;&lt;br /&gt;"யார் இவர் ?"என்று சீறினான் தளபதி . சவுக்கினை ஒருமுறைகீழே காற்றில் சுழற்றி எடுத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;சிலிர்த்தது உடம்பு அமுதனாருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தளபதியோடு வந்திருந்த கோபால்நம்பிகுரல்கொடுத்தபோது அப்போதுதான் அவனைநிமிர்ந்துபார்த்தார் அமுதனார், உடனேமுகத்தைவேறுபுறம் திருப்பிக்கொண்டார் . அரங்கநகருக்காரனாய் இருந்துகொண்டு அந்நியனுக்குப்பல் இளிக்கும் பாதகன். பணத்தாசை காரணமாய் அரங்கச்செல்வத்தைத்துறந்து அந்நியன் ஒருவனிடம் அடிமையாகிப்போனவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்புல்லுருவியைமீண்டும் நான் பார்க்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;"தளபதியாரே! இவர்தான் பெரியகோயிலின்முக்கியஸ்தர்! பெயர் அமுதனார் ! கொத்துச்சாவிகளும் நகைகளும் அவர்பொறுப்பில்தான் உள்ளன "என்றான் கோபால்நம்பி&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா?" தளபதி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சவுக்கை சுருட்டிக்கொண்டபடி விழிகளைமலர்த்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா! பழம் நழுவிப்பாலில் விழுந்த கதைதான்!!!நமதுகாவலர்கள் அபாரபுத்திசாலிகள் !இந்த ஆளை இங்கே நுழையவிட்டு, பின்னர் பிடித்திருக்கிறார்கள்! ஏய், யாரங்கே இவரைக் காவலில் கொண்டுவையுங்கள்" என்றான் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனாருக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'நகைகளின் இருப்பிடதைச்சொல்லாதவரை இவர்கள் என்னைவிடமாட்டார்களே! இதுதான் விதியா ?இல்லை இல்லை வெள்ளயம்மா ரூபத்தில் வந்த சதி .ஏன் இப்படிச்செய்தால் என்ன ?வெள்ளையம்மாவை நம்பித்தானே ரகசியத்தை அவளிடம்சொன்னேன் !இப்போது அவளையே மாட்டிவிட்டுவிட்டால் என்ன?'&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனார் ஒருமுடிவோடு நிமிர்ந்தவர்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தளபதியாரே! இந்தவெள்ளையம்மாவிடம் நகைகள் இருக்குமிடத்தைக் கூறிவிட்டேன். அவளிடமேகேட்டுக்கொள்ளுங்கள் " என்றார் உறுதியானகுரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையம்மா திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள் . இதைஅவள் எதிர்பார்க்கவில்லை .ஆனலும் சிரித்தபடியே ," ஆமாம் எனக்கும்தெரியும் அவரைவிட்டு விடுங்கள்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தளபதிக்கு இன்னும் ஆனந்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதேது எல்லாம் மிக எளிதாகமுடிந்து விடும்போல இருக்கிறதே! சபாஷ்!&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையம்மா! நீ மிகவும் புத்திசாலி !இந்தக்கிழவரின் உடலைப்பதம்பார்த்து, பிறகுஅந்தரகசியத்தை வாங்கும் சிரமத்தைக்கூட நீ எனக்கு வைக்கவில்லை ! வா நாம்போகலாம்!நீயே அந்த இடத்தை எனக்குக்காண்பித்துவிடு! ஆடிப்பாடி அதனைக்கொண்டாடிக் களிக்கலாம்! அந்த நகைகள் உன் காலடியில் விழும்! நீமறுக்காமல்ஏற்றுக்கொள்ளவேண்டும் ! கோபாலநம்பி! பயப்படாதே !உனக்கும் ஏதும் பதக்கம் நிச்சயம் உண்டு! "என்றுபெருமையாகவும் கிண்டலாகவும் சொன்னான் தளபதி.&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனாரை வெளியே கொண்டுவந்து கழுத்தைபிடித்துவிரட்டினார்கள் காவலர்கள்ம்&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனார் வேதனையுடன் நின்ற்வர் யோசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'எப்படியாவதுநகைகளைக்காப்பாற்றியாகவேண்டும் ,சாவிக்கொத்தையும் நகைகளையும்வேறிடத்தில் அப்புறப்படுத்திவிட்டால் அது வெள்ளையம்மாளைப் பழி வாங்கியதுபோலாகும்.'&lt;br /&gt;&lt;br /&gt;மதிலின்மீது ஏறி யாரும் கண்டுகொள்ளாமல் கீழைக்கோபுரத்திற்கு எதிரேவந்தடைந்தார் .&lt;br /&gt;அங்கிருந்தபடியே காவலளர்களை நன்குகண்காணிக்கலாம் அவர்கள் சிறிது உறங்கினாலும் தப்பித்து உள்ளே ஓடிப்போய்விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபுரத்தின் உச்சியிலிருந்து பாட்டும் சிரிப்புமாய்கேட்டது. வெள்ளைநாச்சியாருக்கு இனிமையான குரல்தான் .ஆனால் அமுதனாரின் காதில் அது இப்போது நாராசமாக விழுந்தது&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்வாராதிகளும் சுவாமிதேசிகரும் மிதித்தமண்ணுக்குவந்த கேடுதான் என்ன இன்று? இதன் மகாபெருமையைப் பாழாக்கமுனைந்தாளே ஒருபெண்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனார் கோபுரத்தின் உச்சியைப்பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அங்கே தளபதியும் வெள்ளைநாச்சியாரும் சிரித்தபடி நின்றிருந்தார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-bo3EPkp1vaQ/TxmRXZ8UOAI/AAAAAAAAA7E/AKmmKr-iuF0/s1600/nl8rvn.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="396" nfa="true" src="http://4.bp.blogspot.com/-bo3EPkp1vaQ/TxmRXZ8UOAI/AAAAAAAAA7E/AKmmKr-iuF0/s640/nl8rvn.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்த இரவில் எந்த சாம்ராஜ்யத்தைப் பிடிக்க கோபுர உச்சிக்குச்சென்றார்களோ!&lt;br /&gt;&lt;br /&gt;கேளிக்கையும்பாட்டுமே சாசுவதம் என்று எண்ணிவிட்டார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கே காவிரிஅன்னைநடக்கிறாள் ! தெற்கே கொள்ளிடமங்கை நடக்கிறாள்!இடையே அதர்மம் நடக்கிறது! நடக்கிறதென்ன உச்சிமீது ஏறி சிரிக்கிறது!&lt;br /&gt;ஆனந்தத்தில் தலைகால் தெரியவில்லையா வெள்ளையம்மாவிற்கு? துரோகி!&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்துக்கொண்டே இருந்த அமுதனார் திடுக்கிட்டுப்போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆ' என்று அலற இருந்த வாயினை இருகைவிரல்களாலும் அழுந்த மூடிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விழிகுத்திட அப்படியேநின்றார்.ஆம், ஒருக்கணத்தில் அது நடந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தளபதி சற்று உல்லாசமாகக் கீழே குனிந்த நேரத்தில் அவனை அப்படியே கிழே தள்ளி உருட்டிவிட்டுவிட்டாள் வெள்ளையம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;உருண்டுதலைசிதறி &lt;br /&gt;&lt;br /&gt;கீழே&lt;br /&gt;&lt;br /&gt;கீழே &lt;br /&gt;&lt;br /&gt;கீழே&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே தலைகுப்புற ன்தாந்ழுவி தளபதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ!&lt;br /&gt;&lt;br /&gt;அலறல்புறப்பட குழப்பம் பெருகியது. கோபுரத்தின்கீழே குருதிவெள்ளமும் பெருக்கெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையம்மா சிரிக்கிறாள். கோபுரத்தின் மீதிருந்து சிரிக்கிறாள். விதியை வென்ற சிரிப்பு! கேவலம் பெண்ணா அவள்!அந்தப்பெண்மையையே அரணாக்கிக்கொண்டு போரிட்ட வீராங்கனை அல்லவா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதிலிலிருந்துகீழே குதிக்கப்பயந்து அமுதனார் மெல்ல இறங்கினார் . அதே சமயம் வெள்ளையம்மாவைப்பிடிக்க காவலர்கள்கோபுரம்மீது ஏறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர்கள் வரும் வரை அவள் காத்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்புறாவைப்போல அவளும் கீழே பாய்ந்தாள். கோபுரத்திலிருந்து கிழே குதித்துவிட்டாள்.&lt;br /&gt;அமுதனாருக்கு முச்சே நின்றுவிடும்போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய சாகசமும் இறுதியில் அலட்சியமாய் உயிரைவிட்ட கோலமும் அவரை சிலையாக்கிவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;அமளிதுமளியானது ஊர்.&lt;br /&gt;சிங்கன் ஓடிவந்தான்.அமுதனாரிடம் &lt;br /&gt;&lt;br /&gt;"வாருங்கள் இனி நாமிங்கே இருக்கவேண்டாம் . இங்கிருந்தால் ஆபத்து .நாம்பிழைத்துவிட்டோம் சுவாமி !வெள்ளையம்மா நம்மைக் காப்பாற்றி விட்டாள் "என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனார் கலங்கிய தன்கண்களைத் துடைத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிங்கா! நாம் பிழைக்க வில்லையடா ,பிழைத்தும் செத்து விட்டோம். வெள்ளையம்மா செத்தும் வாழ்கிறாள்! தர்மம் பிழைத்தது. இந்த அரங்கத்தின் மாணிக்கம் அவள்! உனக்கும் எனக்கும் உயிர்மேல் கண் .ஆனால் அவளுக்கோ உயிர் ஒருபொருட்டே இல்லை. உயிர் ஒருபொருட்டே இல்லை! தன் ரத்தம் சிந்தி அரங்கபொக்கிஷத்தைக்காப்பாற்றி இருக்கிறாள் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட மகாமகள்!"&lt;br /&gt;&lt;br /&gt;அமுதனாருக்குத்தொண்டை அடைத்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்கலங்க இருவரும் கோபுரத்தை ஏறிட்டபடியே புறப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில்புழுதிபடர்ந்தது. இரவு பகலானது. போர் ஆரவாரங்கள்கிளர்ந்தன. முரசுகொட்டியது .பகைவர்கள் சிதறி ஓடவும், கீழைகோபுரத்தில் வெற்றிச்சின்னம் பறந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் கம்பீரமாக நிற்கிறது வெள்ளையமாள் உயிர்துறந்த அந்தகீழைக்கோபுரம் !&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் வெள்ளைகோபுரம் என்றபெயரோடு, &lt;br /&gt;&lt;br /&gt;அவள் நினைவாக உடல்முழுவதும் வெள்ளைநிறம்பூசிக்கொண்டு அரங்கநகரின் அத்தனைவண்ணகோபுரங்களிலிருந்து தனித்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;சில பின் குறிப்புகள்!&lt;br /&gt;( வரலாற்றில் நடந்த உண்மைக்கதை இது!தன்உயிரைக்கொடுத்து அரங்கநகரின் செல்வத்தைக்காப்பாற்றிய வீரமங்கை வெள்ளையம்மாள் பற்றி சிலர் அறிந்திருக்கவில்லை என்றதால் மீள் பதிவாக இட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையம்மாளின் அரங்க தியாகத்துக்கும் பக்திக்கும் மெச்சி கோபுரம் "வெள்ளை" கோபுரம் ஆனது மட்டுமில்லை! கணிகையர் யாரேனும் தவறி விட்டால், அவர்களுக்கு வாய்க்கரிசியும், நெருப்பும் அரங்கன் மடைப்பள்ளியில் இருந்து தான் போகும்! இதுவும் வெள்ளையம்மாவின் தன்னலமில்லாப் பக்திக்குத் தந்த பரிசே&amp;nbsp; ஆகும்)&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை கோபுர வரலாற்றினை எனக்கு&amp;nbsp; சொல்லிய&amp;nbsp; என் அன்புத் தந்தைக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அநேகமாக&amp;nbsp; பலரும் ராஜகோபுரத்தை&amp;nbsp; அண்ணாந்துபார்த்து பிரமித்து படங்கள் எடுப்பார்கள்&amp;nbsp; நான் ஸ்ரீரங்கம்போனால் வெள்ளைகோபுரத்தை மனதில் மானசீகப்படம் எடுப்பது வழக்கம்! நேற்று அரங்கன் கோயில் சென்றபோது வெள்ளையம்மாள் மீண்டும் என் மனதை ஆக்கிரமிக்கவும்&amp;nbsp; இன்று இதை மீள்பதிவாக இட்டுவிட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-6655796238382272477?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/6655796238382272477/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=6655796238382272477&amp;isPopup=true' title='52 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/6655796238382272477'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/6655796238382272477'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2012/01/blog-post_20.html' title='வெள்ளை கோபுரம்!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-DAO-5bjupd8/TxmPCEXZZqI/AAAAAAAAA68/lkX9j3OlJ7Y/s72-c/vellaigopura12vy.jpg' height='72' width='72'/><thr:total>52</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-7719029069394631059</id><published>2012-01-16T09:33:00.001+05:30</published><updated>2012-01-16T09:53:29.418+05:30</updated><title type='text'>அன்புச்சகோதரர்களுக்கு.....</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&amp;nbsp;ஒரே சொல்தான் இந்த மாதத்திற்கு ஆனால்&amp;nbsp; ஆயிரம் காலப்பயிருக்கு வித்திடுவது இந்த மாதம்தான்.&amp;nbsp; அதனால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்கள்!&amp;nbsp;தை பிறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம் என்கிற&amp;nbsp; பழையபாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திங்களையும், மழையையும், ஞாயிற்றையும் போற்றி வாழ்த்திச் சிலப்பதிகாரக் காப்பியம் தொடங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு&lt;br /&gt;&lt;br /&gt;மேரு வலந்திரித லான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்கிறார் இளங்கோ அடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இயற்கையைப்போற்றுவோம் இயற்கைதான் தெய்வம்! ஆதவ வழிபாடு பொதுவானது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீர் இன்றி அமையாது உலகு. அந்த நீரையும் கிரகித்து மழையாக்கித்தருவது சூரியன் தான். மண்ணின் ஈர வளத்தை சூரியன் இயற்கை உரமாக்கித் தருகிறது சூரிய ஒளி உடலுக்கு வைட்டமின் சக்தியைக்கொடுக்கிறது. பற்பல விதங்களில் சூரியன் மனிதர்களுக்கு தாவரங்களுக்கு செய்யும் உதவிகள் அனைவரும் அறிந்ததே. ரிக் யஜுர் சாம வேதங்களில் சூரியன் திகழ்கிறான் என்பார்கள்&amp;nbsp; சான்றோர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சிவனின் வலது கண்&amp;nbsp; சூரியன் என்றும் சிவபுராணம் கூறும்.&lt;br /&gt;வேத காலத்திற்கு முன்னே சூரிய வழிபாடு இருந்ததாக ஞான நூல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உதயத்தில் செய்யும் சூரிய நமஸ்காரம் கண்களைப்பாதுகாக்கும். கண் கெட்டபின் செய்து பயனில்லை!&lt;br /&gt;காயத்ரி மந்திரம் உபாசனைபெற்றவர்கள்&amp;nbsp;காலை மதியம் மாலை என மூன்று வேளைகளிலும் கதிரவனுக்கு வந்தனம் செய்கிறார்கள். அவர்கள் முகத்திலேயே சூரிய தேஜஸ் அதனால் வந்துவிடுவதை நாம் தெரிந்துகொண்டுவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;முருகனின் அழகைக்கூறும்போது அருணகிரியார்,கனகரத சதகோடி சூரியனும் எனவும்,&amp;nbsp; தினகரன் என வரு பெரு வாழ்வே என்றும் பாடி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதிர் மதியம் போல் முகத்தான் என்பாள் ஆண்டாள். இறைவனின் கண்களில் ஒன்று சூரியன் இன்னொன்று சந்திரன். தீயவர்களை அழிக்க வலக்கண்னைத்திறப்பார் அருளாளர்களுக்கு அவரது இடதுவிழி இமைதிறந்தாலே இன்பமழை பொழியும்!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இந்திரனுக்கு போகி என்று பெயர் உண்டு. போக தேவேந்திரன் என்பார்கள். மழையைப்பொழியவைக்கும் தெய்வம் இந்திரன் என்பதால் அதற்கு நன்றியாக புதுப்பயிரைப்பறித்து அவனுக்குப்படைப்பார்கள் முன் காலத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-SrfjHsJNSO8/TxOg449_TBI/AAAAAAAAA6k/YLBV91fs7lE/s1600/Beautiful+Sunrise+Pictures+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" kba="true" src="http://3.bp.blogspot.com/-SrfjHsJNSO8/TxOg449_TBI/AAAAAAAAA6k/YLBV91fs7lE/s400/Beautiful+Sunrise+Pictures+%25281%2529.jpg" width="392" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;கிருஷ்ணர் அவதாரம் எடுத்தபோது அந்தப்படையலை சூரியனுக்கு வைக்க கட்டளையிட அதனால் கோபம் கொண்ட இந்திரன் மாமழையாய் பொழிய வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அசுரமழைகண்டு அஞ்சினர் மக்கள். நிலைகுலைந்தனர் மாடுகன்றுகள்&amp;nbsp; தவித்தன. கதறின அபயம் என கிருஷ்ணரிடம் அண்டின.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களையும் மாடுகன்றுகளையும் காப்பாற்றவேண்டி கருணாமூர்த்தி கோவர்த்தன மலையைக்குடையாகப்பிடித்தார்.&amp;nbsp; இந்திரன் தனது நிலைக்கு வெட்கம் அடைந்து கண்ணனிடம் மன்னிப்புகேட்டான். அந்த நிலையிலும் அவனை மன்னித்த பகவான் ‘போகியான உன்பெயரில் சூரியனை வழிபடும் பொங்கல் நாளுக்கு முதல் நாளை மக்கள் வழிபடட்டும்.உன் மனதிலிருந்த தீய எண்ணங்கள் அசுரசெயல்கள் அழிந்ததுபோல பழையன தீயாய்க்கழியட்டும் போகி என அந்த நாளை மக்கள் கொண்டாடட்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;காளிங்கன் என்ற கொடிய நாகத்தை அடக்க கண்ணபிரான் காளிங்க மடுவில் பாய்ந்தார். காளிங்கவிஷம் கண்ணனுக்கு ஏறாதபடி ஆயர்பாடி சிறுவர்கள் தீமூட்டினார்கள். பறைகொட்டியபடி இரவு முழுவதும் கண்ணனுக்காக விழித்திருந்தனர் இதனால்தான் போகியன்று பறைகொட்டும் பழக்கம் ஏற்பட்டது என்றும் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை பெரியாழ்வார்&lt;br /&gt;&lt;br /&gt;காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து&lt;br /&gt;&lt;br /&gt;மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்&lt;br /&gt;&lt;br /&gt;தோள்வலி வீரமே பாடிப் பற,&lt;br /&gt;&lt;br /&gt;தூமணி வண்ணனைப் பாடிப் பற &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;என்கிறார். &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;பொங்கலன்று பால்பொங்கியாச்சா என்றுகேட்கிறோம்&amp;nbsp; சுபதினங்களில் பால்காய்ச்சுதல் என்பதும் அது பொங்குவதும் முக்கியம்&amp;nbsp; புதுவீடு கட்டி குடியேறும்போது பால்காய்ச்சுவது இதற்குத்தான். பொங்குதல் என்பது மீறுதல்&amp;nbsp; நலமும் வளமும்&amp;nbsp; மீறிப்பொங்கினாற்போல பெருக வித்திடுவது தை மாதம்! &lt;br /&gt;&lt;br /&gt;கரும்பு மங்களகரமானது. கரும்பைத்தாங்கி நிற்பவள் பராசக்தி!&amp;nbsp;கரும்பு பிழியப் பிழிய இனிப்பைத்தான் தரும். எவ்வளவு கடித்தாலும் அது தன் வலிமறந்து நமக்குத்தருவது இனிப்பைத்தான்.அதுபோல நற்குடி பிறந்தவர்கள்&amp;nbsp; எப்போதும் இனிமையாகத்தான் பேசுவார்கள். நாலடியாரில்கூட ஒரு பாடல் வரும்(தற்போது மறந்துவிட்டது!! மன்னிக்க) &lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சளும் மங்கலச்சின்னம்.கிருமிநாசினியும் கூட நோயின்றி மங்கலமாய் வாழ மஞ்சளை பொங்கலில் படைக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;ராம ராவண யுத்ததின்போது ராமன் தளர்ச்சி அடைந்துவிட அப்போது அகஸ்திய மாமுனி உபதேசித்த மந்திரம் தான் ஆதிதய் ஹ்ருதய ஸ்தோத்திரம். இதைப்படிக்க ஆதித்யனின் பார்வைபட்டு நாம் எதிலும் வெற்றி அடைவோம்! &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காணும் பொங்கல் எனப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டுவார்கள் இல்லையா அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.(இப்பவும் இன்னிக்கு ஒருநாள் கண்டிப்பா மஞ்சள் பூசிக்கறோம் உண்மை!!:):)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணுப்பிடி இந்தநாளின் சிறப்பு.அதென்ன கணுப்பிடி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் அது ஒருவகை நோன்பு.உடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு.&lt;br /&gt;&lt;br /&gt;உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு என்பது பழமொழி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது கார்த்திகைமாதம் எண்ணைதேய்த்துக்குளித்து விளக்குவைப்பதும், பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும்பொங்கல்தினம் காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப்பழமொழியின் விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டுமஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள்பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5வகை அன்னங்களை தயாரிக்கவேண்டும்,ஒவ்வொன்றிலும் 5அல்லது 7பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,"காக்காப்பிடி வச்சேன் கணூப்பிடி வச்சேன் ... காக்கைக்கு எல்லாம் கல்யாணம்..கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்....கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய்வாழணும்" என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.. வீட்டிலென்றால் வாசலில் கொட்டவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து கலந்த சாதம் பாயசம் செய்து விருந்து போடணும்.அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால் இது காணும் பொங்கல் ஆகி இருக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புசகோதர்கள் பலருக்கும் இன்று வேண்டிக்கொண்டுவிட்டேன், நலம் வாழ! &lt;br /&gt;&lt;br /&gt;"எவ்வழி ஆடவர் நல்லவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே" என்று&amp;nbsp; இலக்கிய பாடல்வரிகள் உண்டு.&lt;br /&gt;&amp;nbsp;ஒரு நாட்டில் மன்னவர்- அதாவது-ஆடவர் நல்லவராக இருந்தால் அந்த நாடு நலம் பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் நல்வழி சென்று நன்மை அடைவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-7719029069394631059?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/7719029069394631059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=7719029069394631059&amp;isPopup=true' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/7719029069394631059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/7719029069394631059'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2012/01/blog-post_16.html' title='அன்புச்சகோதரர்களுக்கு.....'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-SrfjHsJNSO8/TxOg449_TBI/AAAAAAAAA6k/YLBV91fs7lE/s72-c/Beautiful+Sunrise+Pictures+%25281%2529.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-5929629566225967498</id><published>2012-01-13T14:30:00.001+05:30</published><updated>2012-01-13T14:31:26.800+05:30</updated><title type='text'>பனி மூடும் மார்கழியின் பின்னே....</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பனிமூடும் மார்கழியின் பின்னே-பொங்கல்&lt;br /&gt;&lt;br /&gt;பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணே!&lt;br /&gt;&lt;br /&gt;இனிதான தமிழர்திருநாளாம் இதற்கு&lt;br /&gt;&lt;br /&gt;ஈடுண்டோ வேறேதும் சொல்வாய் பெண்ணே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைவயல் முழுதும் காண் செந்நெல்மணிகள்- அங்கு&lt;br /&gt;&lt;br /&gt;பகலவனை சேவிக்கும் பலதலைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;இச்சகத்தில் உழவர்கள் உழைப்பதுவேயின்றி நம்&lt;br /&gt;&lt;br /&gt;உணவுக்கு வழியுண்டோ சொல்வாய் பெண்ணே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருடத்தில் ஒருநாளாய் வருமிந்தத் திருநாள்!&lt;br /&gt;&lt;br /&gt;தரும் வாழ்வில் என்றுமே இன்பம் பலநாள்!&lt;br /&gt;&lt;br /&gt;திருவெனவே திகழும் மாதருடன் பலரும்&lt;br /&gt;&lt;br /&gt;பெருமையுடன் வரவேற்கும் பொன்னாள் இந்நாள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மங்கலத்தமிழர்கள் மனம் மகிழ்ந்திடவே&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் அன்பும் ஆனந்தமும் நிறைந்திடவே&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கலோபொங்கல் என்றே கூவிடுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;தங்கிடும் பொலிவுடன் நாம் வாழ்ந்திடுவோம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-3XmuQD6inoA/Tw_x3lk-xeI/AAAAAAAAA6c/EKrxXyw0uTU/s1600/pongal1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" kba="true" src="http://2.bp.blogspot.com/-3XmuQD6inoA/Tw_x3lk-xeI/AAAAAAAAA6c/EKrxXyw0uTU/s400/pongal1.jpg" width="293" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-5929629566225967498?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/5929629566225967498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=5929629566225967498&amp;isPopup=true' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/5929629566225967498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/5929629566225967498'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2012/01/blog-post_13.html' title='பனி மூடும் மார்கழியின் பின்னே....'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-3XmuQD6inoA/Tw_x3lk-xeI/AAAAAAAAA6c/EKrxXyw0uTU/s72-c/pongal1.jpg' height='72' width='72'/><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-4353115887704899597</id><published>2012-01-08T06:56:00.000+05:30</published><updated>2012-01-08T06:56:56.933+05:30</updated><title type='text'>தேனே அமுதே கரும்பின் தெளிவே!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-lcqb7n093ao/Twhqa9it3bI/AAAAAAAAA6U/aUhIQkJ5zqg/s1600/shiva++lingam++padam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" rea="true" src="http://1.bp.blogspot.com/-lcqb7n093ao/Twhqa9it3bI/AAAAAAAAA6U/aUhIQkJ5zqg/s400/shiva++lingam++padam.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’அன்பும் சிவமும் வேறென்பார் அறிவிலார்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’&lt;br /&gt;&lt;br /&gt;என்பார் திருமூலர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பான அண்ணல் இனியனும் கூட.எப்படி என்றால் நமக்கு பிறப்பை வாய்ப்பாகத்தருகிறான், முக்தியை வெகுமதியாகத்தருகிறான் இடைப்படும் தடைகளை களைந்தருளுகிறான். சிவம் என்றாலே சுபம். சிவம் என்றாலே மங்கலம். சிவம் என்றாலே பரிவு.’பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து..என்கிறார் சிவனடியார்.. அந்த&amp;nbsp; மகா பரிவினில் தான் உரிமையாய் யானுனை சிக்கெனப்பிடித்தேன் எங்கெழுந்தருள்வது இனியே என்று முடிக்கிறார், இறைவனிடம் நெருக்கம் வேண்டும். அப்போதுதான் உரிமையாய் இழையமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;வாழ்வு என்பதுநிலையற்றதுஎன்பதைப்புரிந்துகொண்டுவிட்டால் நம் மனக்கதவு மெல்லத்திறந்துவிடுகிறது. அங்கே&amp;nbsp; இறைவன் நம்மை அழைப்பதும் கேட்கிறது. வாழ்வைத்தேடி நெடிய பயணம் போய்விட்டு ஏமாந்து மீண்டு உணர்ந்துகொள்ளும்போதுதான் சித்ததில் சிவன் இருப்பது தெரிகிறது.அவன் எப்போதோ நம்மை அடைந்துவிட்டான் நாம்தான் அவனைத்தேடி எங்கெங்கோ அலைந்து விட்டு இறுதியில் உணர்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனைப்பெறுவது ஒன்றும் கடினமில்லை கடுந்தவம் தேவை இல்லை விரதமில்லை வேண்டுதல்கள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யானே பொய் என் நெஞ்சும் பொய்&lt;br /&gt;&amp;nbsp;என் அன்பும் பொய்&lt;br /&gt;ஆனால் வினையேன் அழுதால் &lt;br /&gt;உன்னைப்பெறலாமே&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;மணிவாசகப்பெருமான் சொல்வது இதுதான். அற்பமாகிய நான் பொய் என் மனம் பொய் அன்பும் பொய் ஆனால் இறைவா&amp;nbsp;&amp;nbsp; என் வினையும் பொய் இல்லையொ மெய்யோ உன்னை மறைப்பதால்தானே? உன்னை மறைப்பதை பொய் என்று என்னால் ஏற்க இயலவில்லை அதனால் அழுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தேனே அமுதே கரும்பின்&lt;br /&gt;தெளிவே தித்திக்கும்&lt;br /&gt;மானே அருளாய் அடியேன்&lt;br /&gt;&amp;nbsp;உன்னை வந்து உறுமாறே &lt;br /&gt;&lt;br /&gt;(உறுமாறே=பெறும் வழி)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; என்று முடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேறேதும் தெரியவில்லை உன்னைப்பெறுவதற்காக அழுகிறேன் ஆனால் பாருமய்யா அந்த அழுகை இனித்துவிட்டது உன் பொருட்டு அழுவதால் அது இனிக்கிறது அதனால் நீ தேனாக அமுதாக கரும்புச்சாற்றின் தெளிவாக தெரிகின்றாய் என்னுள் இருக்கும் நான் எனும் பொய் &amp;nbsp;இந்தக்கண்ணீரில் கரைந்து&amp;nbsp; மெய்யோடு&amp;nbsp; உன்னைவந்து சேர அருளவேண்டும் என்கிறார்.கரும்புச்சாறு அடில&amp;nbsp; கொஞ்சமேகொஞ்சம் சக்கை இருக்கும்&amp;nbsp; அதனால் தெளிவே என்கிறார் பாருங்கள் அன்புத்தெய்வத்தை!&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்ம உருக்கம் இந்தப்பாடலில் நிரம்பி வழிகிறது. மனம் வெளுத்தபின் அது பிழிந்த நீர் கண்ணீராய் வெளியே&lt;br /&gt;&amp;nbsp;வருகிறது.&amp;nbsp; கண்ணீரைவிட இறைக்கு நாம் செலுத்தும் காணிக்கைதான் என்ன!&lt;br /&gt;&lt;br /&gt;உருக்கமான இந்தப்பாடலைப்போல திருவாசகத்தில் எத்தனை எத்தனை பாடல்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சித்தவானில் சிவனொளி கண்டு தில்லையில்&amp;nbsp; அவனோடு கலந்தவர் மாணிக்கவாசகப்பிரான். பெயரையே பாருங்கள் மாணிக்க வாசகர்! நவரத்தினங்களில் உயர்ந்தது மாணிக்கம் .அது மாமணி! மாணிக்கம் உதிர்க்கும் வாசகங்கள் ஒளி நிறைந்திருப்பதில் ஐயமென்ன!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; ஆதிரை நன்னாளில்&amp;nbsp; இறைவனின் அடியாரை நினைக்கும் நம்மைச் சிவம் காக்கும்.&amp;nbsp;சிவமே உயிர் எனும் சிந்தை&amp;nbsp;&amp;nbsp; இருக்கும்போது அந்த ஜீவனே சிவமாக தீரூம் என்பார்கள் !&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் &lt;br /&gt;அவன் அருளாலே அவன் தாள் பணிந்து.. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;என்ற&amp;nbsp; மனத்தை உருக்கும் சிவனடியாரின் வரிகளின் படி அவன் தாள் வணங்கிப்போற்றுவோம்! &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;ஓம் நமசிவாய!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-4353115887704899597?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/4353115887704899597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=4353115887704899597&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/4353115887704899597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/4353115887704899597'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2012/01/blog-post_08.html' title='தேனே அமுதே கரும்பின் தெளிவே!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-lcqb7n093ao/Twhqa9it3bI/AAAAAAAAA6U/aUhIQkJ5zqg/s72-c/shiva++lingam++padam.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-6807961616171426493</id><published>2012-01-05T20:24:00.000+05:30</published><updated>2012-01-05T20:24:21.182+05:30</updated><title type='text'>நல்லதோர் தாமரைப்பொய்கை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&amp;nbsp;உலகில் பெண்ணைப்பெற்ற ஒவ்வொருவரும் பெரியாழ்வார் அல்லர். &lt;br /&gt;&lt;br /&gt;பிறந்து&amp;nbsp; பின் புகுந்த வீடு &amp;nbsp;போகும் ஒவ்வொரு பெண்ணும் ஆண்டாளும் அல்லள். &lt;br /&gt;&lt;br /&gt;உலகியல் விடுத்து&amp;nbsp; இறை அடியே&amp;nbsp;&amp;nbsp;தேவை &amp;nbsp;என்று&amp;nbsp; புகுந்தவீடு போனவள் ஆண்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியொரு பரம சந்தோஷமும், பரிதவிக்கும் துக்கமும் கலந்து பறிகொடுத்தவர் பெரியாழ்வார்.செங்கண்மால்தான் கொண்டுபோனான் என்று மனதை சமாதானம் செய்துகொண்டாலும் பிரிவாற்றாமை அவரையும் சூழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார்!வேதியர்க்கே பெருமைதந்த மாணிக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;அரியவைரம் ஆண்டாளை அவனிமண்ணில் கண்டெடுத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள் மீது பெரியாழ்வார் கொண்ட பாசத்தினைப்போல வேறெந்த தந்தை-மகளுக்கிடையே இப்படி ஒரு பாசப்பிணைப்பு இருக்குமா என்றால் அது சந்தேகமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாளைப்பற்றிப்பாடும்போது ’பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!’ என்கிறார்கள். இத்தனைக்கும் அவர் துளசிக்குவியலில்தான் ஆண்டாளைக்கண்டுபிடித்திருக்கிறார். பெற்ற பெருமை இல்லாதவருக்குக்கிடைத்த பேற்றினைப்பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலைமுப்பதும் தப்பாமே’ என்கிறாள் ஆண்டாளே தான் வடித்த திருப்பாவைப்பாடலில். அப்பாவும் பெண்ணும் மாறிமாறி அன்பைப்பரிமாறிக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தான் சூடிய மாலையை இறைவனுக்குச்சூட்டிட அதனை தந்தையிடம்கொடுத்த துணிச்சல்காரியான பெண் ஆண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாளிலேயே பெண் சுதந்திரம் இருந்திருக்கிறதென்பதற்கு ஆண்டாளின் நாச்சியார் திருமொழி வாசகங்களே போதும். அப்படி ஒரு சுதந்திரத்தை அவளுக்கு அளித்தவர் பெரியாழ்வார் என்றால்மிகை இல்லை.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-UwFCUxmkcqw/TwW4BFXpwoI/AAAAAAAAA50/LW2m5_NY4TI/s1600/untitled.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" rea="true" src="http://4.bp.blogspot.com/-UwFCUxmkcqw/TwW4BFXpwoI/AAAAAAAAA50/LW2m5_NY4TI/s400/untitled.bmp" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகளின் ஆசையைபூர்த்தி செய்து அவளை திருமாலுடன் சேர்த்துவைத்து வீடுவந்தவர் மகளின் பிரிவில் மனம் தவிக்கிறார். செங்கண்மால்தான் கொண்டுபோனான் என மனதைத்தேற்றிக்கொள்ள பிரயத்தனப்படுகிறார்.ஆனாலும் பாசம் மனசை வழுக்கிவழுக்கி நினைவுகளை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது.மகளோடு கூடிக்கழித்த நாட்களை அசை போடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’நல்லதோர் தாமரைப்பொய்கை&lt;br /&gt;&lt;br /&gt;நாண்மலர் மேல்பனி சோர&lt;br /&gt;&lt;br /&gt;அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு&lt;br /&gt;&lt;br /&gt;அழகழிந்தாலொத்ததாலோ&lt;br /&gt;&lt;br /&gt;இல்லம் வெறியோடிற்றாலோ&lt;br /&gt;&lt;br /&gt;என்மகளை எங்கும் காணேன்&lt;br /&gt;&lt;br /&gt;மல்லரையட்டவன் பின்போய்&lt;br /&gt;&lt;br /&gt;மதுரைப்புறம் புக்காள்கொலோ’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-VNbI65BcDPc/TwW5BtftxFI/AAAAAAAAA6M/iHjlGpg6xn0/s1600/kampuchea_lotus-dsc01709-a1-wp.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" rea="true" src="http://2.bp.blogspot.com/-VNbI65BcDPc/TwW5BtftxFI/AAAAAAAAA6M/iHjlGpg6xn0/s400/kampuchea_lotus-dsc01709-a1-wp.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் நீர்மல்கப்பாடுகிறார் பெரியாழ்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்பனித்தது என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் பெரியாழ்வாருக்கு மகள் மணமாகிசென்றதும் கண்பனித்துத்தான் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது விழிகளாகிய தாமரைக்கு மகள் எனும் சூரிய ஒளி இல்லாமல்போய்விட்டதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பனிவந்து தாமரையைச் சூழ்கிறதாம். பனிகண்டமலர் விரியுமோ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணிருந்தவரை இல்லம் தாமரைப்பூத்த பொய்கையாய் அழகாக இருந்ததாம்.இப்போது பனிபெய்வதால் இதழ்கள் உருகிக்கருகிவிட்டதாம்,கொடி மொட்டையாய் நிற்கிறது இதுபோல வீடு அழகழிந்து வெறியோடிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் மனதிற்குப்பிரியமானவர்கள் பிரிந்துவிட்டால் இல்லமென்ன நம் உள்ளமே ’வெறிச்’ என்றுபோய்விட்டதாய் சொல்கிறோம் அல்லவா? அதைத்தான் ஆழ்வார் இந்தப்பாடலில் சொல்லி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொய்கையின் படம் பெரியாழ்வாரின் சொற்சித்திரத்தில் மனதில் பதிந்துவிடுகிறது.கவிதைக்கென்று தனி வார்த்தைகள் இல்லையென்று காட்டிவிட்டார் பெரியாழ்வார், ஆமாம் உலகத்தில் வழங்கிவரும் சொற்களை வைக்கிற இடத்தில் வைத்தால் அவைகளுக்கு அபூர்வ சக்தி ஏற்பட்டுவிடுகிறது என்பது உண்மைதானே!&lt;br /&gt;&lt;br /&gt;(வைகுண்ட ஏகாதசி சிறப்புப்பதிவுகள் இத்துடன் நிறைவுபெறுகின்றன)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-6807961616171426493?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/6807961616171426493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=6807961616171426493&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/6807961616171426493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/6807961616171426493'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2012/01/blog-post_7760.html' title='நல்லதோர் தாமரைப்பொய்கை.'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-UwFCUxmkcqw/TwW4BFXpwoI/AAAAAAAAA50/LW2m5_NY4TI/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-6436064907438544526</id><published>2012-01-05T10:04:00.000+05:30</published><updated>2012-01-05T10:04:32.619+05:30</updated><title type='text'>புண் நகை என்ன விலை?:)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ESdnCLrjKx4/TwUmg-RfpgI/AAAAAAAAA5c/TL3OU1LNEec/s1600/shankaratv_logo.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="354" rea="true" src="http://3.bp.blogspot.com/-ESdnCLrjKx4/TwUmg-RfpgI/AAAAAAAAA5c/TL3OU1LNEec/s400/shankaratv_logo.gif" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒருவாரமாய் ஆனந்தவிகடன் கல்கி குமுதம் இன்னபிற பத்திரிகைகள் என்று எதுவுமே படிக்காமல், இணையக்குழுக்களில் கவிதை கதை&amp;nbsp;எழுதி துன்புறுத்தாமல், சாட்டில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமல் ஆழ்வார்களைத்தேடினேன் ...அரங்கநகர்ப்பெருமை மிகும் கதைளைப்படித்து பரணிலிருந்த பழையஆன்மீகபுத்தகங்களை ஹச் என்றுதும்மிக்கொண்டே தூசிதட்டிப்பிரிச்சிக் குறிப்பெடுத்து ஊர் உலகத்துகெல்லாம் போன் ,மெயில்&amp;nbsp; முக நூல் அக நூல் எஸ் எம்&amp;nbsp;எஸ்&amp;nbsp;என்று தகவல் சொல்லி ஆர்வமாய் காத்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”என்னது! சங்கரா டிவில் ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் ராப்பத்து உற்சவ நேரிடை ஒளிபரப்புக்கு நீ மூணுமணிநேரம் வர்ணணை செய்யப்போறியா? பாவம் அரங்கன்!” என்று கிண்டல் செய்தாள் ஆத்ம சிநேகிதி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”வாவ் க்ரேட்! பட் பாத்துகவனமா பேசு , செல்போனை ஆஃப் பண்ணி வச்சிட்டு மைக்கிலிருந்து கொஞ்சம் எட்டவே இரு ..சில டைம் லைவ் ல பேசறவங்க மூச்சுக் காத்தெல்லாம் காதுல விழும் அதை தவிர்க்கணும் அப்றோம்குறிப்பு நோட்டை தவறவிட்டுடாதே, ” என்றார் முன் ஜாக்கிரதை முத்தண்ணா(என் பதி).&lt;br /&gt;&lt;br /&gt;”சங்கரா டிவியா அதெல்லாம் இங்க எங்களுக்கு வராதே அப்பாடி தப்பிச்சேன்!”...உடன்பிறப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோடிவீட்டு தாத்தா என் நாவல்களைப்படித்துபலமுறை கண்கலங்கி(எதுக்கோ?:) வாழ்த்துவார் அவரிடம்&amp;nbsp; முத முதல்ல டிவிக்கு நேரடி ஒளிபரப்புக்கு காம்பியரிங் செய்யப்போற விஷயம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடி அட்சதையைக் கையிலெடுத்துதலையில் போட்டவர் அப்படியே குனிந்த என் சிரசை நிமிர்ந்தவிடாமல் கையைஅழுத்தி வைத்து தன் கண்களை மூடிக்கொண்டு ஏதோ வாழ்த்து சுலோகம் சொல்லஆரம்பித்தார் ...இதோமுடிச்சிடுவார் அதோமுடிச்சிடுவார்னு க‌ஷ்டப்பட்டு குனிஞ்சிட்டே இருந்தேன் அப்படிஇப்படி 6நிமிஷம் கழிச்சி&amp;nbsp; ஒருவார்த்தைல வாழ்த்தி&amp;nbsp;முடிச்சி கண்ணைத்திறந்தார் அப்பாடி இதை முதல் அரை வினாடில என்னை அனுப்பி இருக்கலாமேன்னு நினச்சாலும்” சுலோகம் திவ்யமா இருக்கு”ன்னு சொல்லி வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராப்பத்துவிழாவின் கடைசி நாளில் பேசவேண்டியதில் பிரதானமாய் சொல்லவேண்டியது நம்மாழ்வாரின் கீர்த்திகள் அவரது மோட்சப்பெருமை வரலாறு முதலியன.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மாழ்வார் மோட்சம் என்பது ஸ்ரீரங்கத்தில் நடுஇரவுக்குபிறகு ஆரம்பமாகும் நிகழ்ச்சி .அதனால் ஒலிப்பதிவு. இப்படி நடு நிசியில் செய்யவேண்டியதாகிப்போனது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 6மணிவரை ஒழுங்காக இருந்த என் திருவாய்க்கு என்ன ஆச்சோ சட்டென நாக்கெல்லாம் குடிகுட்டிக்கொப்பளங்கள். சின்ன சிவப்பு மாதுளைமுத்துக்களாய் வந்து ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருக்க வேண்டும்போல ஆகிவிட்டது. வீடல் எல்லார்கிட்டயும் ஜாடைலபேச ஆரம்பிச்சேன்.(அப்பாடா என்று என் கணவர் உள்ளூற மகிழ்ந்திருக்கலாம் யார் கண்டா?!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;. ஐய்யோ எப்படிஅங்கே போய் சொற்பொழிவாற்றுவது? இதுக்குத்தான் அதிகமா ஆசைப்படக்கூடாது ஒழுங்கா அப்பப்போ ஏதோ அஞ்சுபத்துநிமிஷம் கால்மணி என்று விளம்பரப்படத்தோடு இருந்திருக்கலாம் குறும்படமும் அதிகபட்சம் நாப்பது நிமிஷம்தான் இப்படி ரெண்டரைமணிநேர நிகழ்ச்சிக்கு வந்து சொல்றீங்களான்னு கேட்டதும் பறந்திட்டு மகிழ்ச்சியாய் தலையை ஆட்டிவிட்டு இந்த அரங்கப்ரியாக்கு வந்த சோதனையைப்பாருங்க!&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கா உனக்கு சொல் அலங்காரம் செய்யகூட நான் லாயக்கில்லைன்னு என்னை இப்படிசெய்துட்டியா என்று மனம் வருந்தினேன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும்இடையில் மின் தமிழ் நம்பிக்கைகுழும உறுப்பினரும் குடும்ப நண்பருமானமோகனரங்கனிடமும் பிரபல ஆன்மீகப்பதிவர் கேஆரெஸிடமும்&amp;nbsp; நம்மாழ்வார்பற்றிய அதிகப்படி தகவல்களை வாய் சரி இல்லைன்னா என்ன காது நன்றாக இருக்கென்று போனில் பேசி அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ப்புண் வலி அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்லைனில் சாட்டில் வந்த முத்தமிழ் உறுப்பினரும் குடும்ப நண்பருமானடாக்டர் சங்கர்குமாரிடம், இந்தப்பெண்லைன்(ச்சும்மா ஒருபேச்சுக்கு பெண்சிங்கம்!) ”டாக்டர் டாக்டர்!வெளிலபோக அவகாசமில்லைசீக்கிரம இதுக்கு ஒருவழி சொல்லுங்கனேன் ” என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வென்னீரில் உப்புபோட்டு வாயைக்கொப்பளிக்கச்சொன்னார் பிறகு டிஸ்ப்ரின் மாத்திரை வைத்தியம் சொன்னார். அது என் ஏராள வாய்ப்புண்ணின் நிலைமையை 5% காப்பாற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கம்பக்கம் மாமிகள் சொன்னார்கள் இப்படி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நல்லெண்னை விட்டுக்கோ தேங்காண்ணை விட்டுக்கோ வாய்ல”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் செய்தேன் எண்ணைதான் வேஸ்ட் ஆனது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;:”நெய் அல்லது தேன் தடவிக்கோ”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டும் பயங்கர&amp;nbsp; ருசியாய்&amp;nbsp; இருக்கவே தடவினதை&amp;nbsp; சாப்பிட்டுவிட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”தேங்காயை மசிய அரைச்சி பாலெடுத்து வாய்ல விட்டு சுழட்டினாப்ல வச்சிக்கோ”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி .....தேங்கா உடச்சி அரைச்சி பாலெடுத்து..ஓ மை காட் அதுக்கு&amp;nbsp;ஏது&amp;nbsp;&amp;nbsp;நேரம்னு அட்வைஸ் பண்ணினவஙக்ளுக்கு மொழி படத்து ஜோதிகாவா மாறி ஜாடைல நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ ழையோ ழெப்படி பேயபோயேனோ?’என்று வாய்குளறினதை நானே சகிக்கமுடியாமல்கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணி 8 45 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் சங்கரா டிவி என்றுமூணுபக்கமும் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு ஜென் கார் ஜம் என்று வந்துவிட்டது அக்கம்பக்கம் எல்லாரும் வேடிக்கைப்பார்க்க&amp;nbsp; வாய்ல புண் என்றாலும் மனசில் பெருமை பொங்க ஏறினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெகார்டிங் ரூமில் பாதிபேர் கன்னடக்காரர்கள்.” ராப்பத்து ஏனு பகல்பத்து ஏனு?” என்று ஏற்கனவே பேசத்தவித்த என் வாயைக்கிண்டினார்கள். “அப்றோமா சொல்றேன்” என்று மட்டும் சொல்லவும் அவர்கள்”ஆமா இப்பவே&amp;nbsp; ரொம்ப பேசினா அப்றோம் வாய்ஸ் கட் ஆகிடும் .நோ ப்ராப்ளம்” என்றார்கள் பாவம் அவர்களுக்கு நான் வாய்ஸ்லெஸ் உமன் என்று தெரிய வாய்ப்பில்லைதான்!&lt;br /&gt;&lt;br /&gt;மணி 12வரை ஸ்ரீரங்கமிருந்து நேரடி ஒளிபரப்பு கனெக்‌ஷன் சங்கராடிவிக்காரர்களுக்குவரவே இல்லைஏதோ சிக்கல் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஒருமணிக்குஎனக்கு தூக்கம் கண்களை இறுக மூடவைக்க, அப்படியே அந்த குஷன் நாற்காலியில்சாய்ந்து விட்டேன் !திடீரென ”மேடம் வந்தாச்சு வந்தாச்சு லைவ் டெலிகாஸ்ட்! சக்ஸஸ் சக்ஸஸ்!”என்றது ஒரு குரல்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடி மணி என்ன என்றுபார்த்தால் இரண்டே கால்..சரிதான் இன்னிக்குத்தான் வைகுண்ட ஏகாதசிபோல் இருக்குனு சிரித்துக்கொண்டே ஆரம்பித்தேன் எனது வர்ணணையை. என்ன அதிசியம்! தூங்கி எழுந்ததும் கொஞ்சம் வாய்ப்புண் சரியாகி நாக்கு புரண்டு கொடுக்க ஆரம்பித்தது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் ரெடிபண்ணி குறிப்பு எடுத்து வைச்சதையும் கொஞ்சம் சொந்த சரக்கும் சேர்த்து அந்த சிற்றஞ்சிறுகாலைல நான் அந்த லைவ் ரிலேயில் சொன்னதை யாரும் பார்த்திருக்கலேன்னாலும் கேட்லைனாலும்அரங்கன் கண்டிருப்பார்! கேட்டிருப்பார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டரைமணிநேரம் முடித்ததும் அந்த ஒலிப்பதிவு அறையில் எல்லாரும்” அருமை! ”எனப் புன்னகைத்தார்கள் ,நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்! ஆனால் அது ’புண்’னகை’ என யார் அறிவார்கள்?! &lt;br /&gt;&lt;br /&gt;(இரண்டுவருஷம் முன்பு நடந்த அனுபவம்&amp;nbsp; வைகுண்ட ஏகாதசிக்கு&amp;nbsp; மீள் பதிவு...இதுபோல&amp;nbsp; பழைய காப்பி அல்லது புது ரிலீஸ் இன்று முழுக்க இன்றைய வைகுண்ட ஏகாதசி&amp;nbsp; ஸ்பெஷலாக வந்துகொண்டிருக்கும்...:))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-6436064907438544526?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/6436064907438544526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=6436064907438544526&amp;isPopup=true' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/6436064907438544526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/6436064907438544526'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2012/01/blog-post_05.html' title='புண் நகை என்ன விலை?:)'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ESdnCLrjKx4/TwUmg-RfpgI/AAAAAAAAA5c/TL3OU1LNEec/s72-c/shankaratv_logo.gif' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-641391115287495025</id><published>2012-01-04T20:38:00.001+05:30</published><updated>2012-01-04T20:40:39.468+05:30</updated><title type='text'>அந்த-ரங்கம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;அந்த ரங்கம் ஆனந்த ரங்கம் அதுவே ஸ்ரீரங்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;வைகுண்ட ஏகாதசியும் சொர்க்கவாசலும் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கத்தோன்றும். ஆம் அதற்குவிடையாக அரங்கனே நமக்கு நடித்துக்காட்டுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்காக அவன் சொர்க்கவாசலைத்திறந்து வைத்து தான் முன் சென்று நமக்கு அதை வழிகாட்டித்தருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-WUE3JHaAtOs/TwRqbRwYrBI/AAAAAAAAA5E/E4XOrtU67Og/s1600/152.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" rea="true" src="http://2.bp.blogspot.com/-WUE3JHaAtOs/TwRqbRwYrBI/AAAAAAAAA5E/E4XOrtU67Og/s400/152.JPG" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;பரமபத வாசல்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வைகுண்ட ஏகாதசிதினத்தின் மகிமையை அறியும் முன்பாக நாதமுனிகள் என்னும் வைணவம்தந்த வைரமணியைப்பற்றி சில வரிகள் கூறவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தின் மாற்றத்தால் ஆழ்வாரின் பாசுரங்களும் திருவாய்மொழியும் நாதமுனிகள் காலத்தில் காணாமல்போயிருக்க கவலைகொண்டவர் நம்மாழ்வாரின் சந்நிதிமுன்பு நின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-PNNhEHDWQyc/TwRq3ovIA1I/AAAAAAAAA5Q/H5K2WYcti14/s1600/180.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" rea="true" src="http://1.bp.blogspot.com/-PNNhEHDWQyc/TwRq3ovIA1I/AAAAAAAAA5Q/H5K2WYcti14/s640/180.JPG" width="480" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;சேஷராய மண்டபத்து சிற்பங்கள்.(ஆயிரம் கால் மண்டபம் எதிரில்- வெள்ளைகோபுரம் அருகில்_&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோகத்தில் ஆழ்ந்தவர், ஆழ்வார்கள் ஆண்டாள் முதலியோரின் பாடல்களை நம்மாழ்வாரிடமிருந்து க்ரஹித்துக்கொண்டார் ஸ்ரீரங்கம் வந்தவர் அவைகளை இசை என்றும் இயல் என்றும் பிரித்து தாள் சகிதம் பண்ணுடைய இசைப்பாக்களை சேவிக்க மார்கழி சுகல்பட்ச ஏகாதசிக்கு முந்தின பத்துநாட்கள் திருவாய்மொழி தவிர மற்ற ஆழ்வார்களுடைய இசைப்பாக்களையும் ஏகாதசிமுதல் அடுத்த பத்துநாட்களில் இராப்பத்து பொழுதில் திருவாய்மொழியையும் இராபத்து முடிந்த மறுநாள் இயற்பா முழுவதையும் சேவிக்க வேண்டுமென்றும் சிலமுக்கியபாடல்களை அபிநயித்துக் காட்டவேண்டும் என்றும் ஹிரண்யவதம் ராவணவதம் வாமன க்ருஷ்ணாவதாரங்கள் போன்ற சிலமுக்கிய அம்சங்களைப் பாமரர்கள் எளிதில்புரிந்துகொள்ளும்பொருட்டு நாடகரூபமாய் அபிநயித்துக்காட்ட வேண்டுமென்றும் ஏற்பாடு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிச்செய்ததும் நம்மாழ்வாரின் திரு உள்ளத்தை அனுசரித்தே செய்யப்பட்டதாய் தெரிகிறது எப்படியென்றால் நம்மாழ்வார் பாடின ’தடங்கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பாடிநடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே ’ என்னும் பாசுரத்தை அனுசரித்து இருப்பதால் என்கிறார்கள் பெரியோர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைகுண்டம் என்பது ஸ்ரீரங்கமே என்று சொல்லுகிறபடி வைகுண்டத்தில் உள்ள எல்லாம் ஸ்ரீரங்கத்தில் அமைந்திருக்கிறது என்பதைக் காட்டிக்கொடுக்கவே இந்தத்திருநாள் நடக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைகுண்டஏகாதசி ஏன் வருஷாவருஷம் வருகிறது? அந்த தினம் எதற்கு சொர்க்கவாசலைத்திறக்கிறார்கள் ஏன் முதலில் நம்பெருமான் செல்கிறார் பின்னர் நம்மையும் அதே வழியில் அழைத்துச்செல்கிறார்? இதற்கான தத்துவம் தான் என்ன என்பதை கொஞ்சம் பார்க்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே என்று சொல்லி திருமங்கையாழ்வார் பகவானுடைய தரிசனம் பெற்றதைப்பேசும் திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தம் பெருமாள்முன்பாக முதலில் சேவிக்கப்படுகிறது ஒரு நூலுக்கு முன்னுரை இருப்பதுபோல ஏகாதசி உதசவத்திற்கு இந்த திருநெடுந்தாண்டகம் உள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உற்சவத்தில் முக்கியமான அரையர்சேவை பகல் நாட்களில் நடக்கும்போது பகல்பத்து என்கிறார்கள் இந்த பகல்பத்துஉற்சவத்தில் அரங்கன் காலையில் சந்நிதியைவிட்டுப்புறப்பட்டு கிழக்கில் உள்ள அர்ஜுனன் மண்டபத்திற்கு எழுந்தருளி ராத்திரி எட்டுமணீக்கு திரும்ப மூலஸ்தானம் வருகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மோகினி அலங்காரம்&amp;nbsp; வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாள்/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராப்பத்து உத்சவதில் ஆயிரங்கால் மண்டபத்தின் மையத்தில் திருமாமணி மண்டபத்தில் பரம்பதத்தில் பெருமாள் எழுந்தருளி இருக்கும் வைகுண்டத்து திருமாமணிமண்டதின்படி கட்டப்பட்டுள்ளதால் அதே பெயர் இதற்கும்! இந்தப்பத்துநாட்கள் அரையர் சேவை ராத்திரியில் நடக்கப்படுவதால் இது இராப்பத்து என்றாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தவிர வைகுண்டம் செல்லும் மார்க்கத்தைப்பற்றியே பேசும் திருவாய்மொழியில் ஒருபாசுரமாகிய;சூழ்விசும்பணிமுகில் ;எனும் பத்துபாசுரங்களின் தாத்பர்யங்கள் இந்த நாட்களில் நாடகம் போலக் காட்டப்படுகின்றன. பரமபதத்திற்கு செல்லும்&amp;nbsp; நபராக &amp;nbsp;ரங்கநாதனே நடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைகுண்ட ஏகாதசித் திருநாளில் கர்ப்பக்ரஹத்திலிருந்து புறப்படுமுன்பாக ஆர்யபடாள்வாசல் நாழிகை கேட்டான் வாசல் முதலானதுமூடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவெனும் தான் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவென்னும் திண்கதவம் செம்மி மறையென்னும் நன் கோதி நன்குணர்வார் காண்பரே நாள்தோறும் பைங்கோத வண்ணன்படி என்ற பாசுரப்படி இந்தக்கதவுகள் மூடப்படுகின்றன. பகவானை சிந்தித்து அவனருளைப் பெற இச்சிக்கும்&amp;nbsp; மனிதம் &amp;nbsp;தன் இந்திரியங்களால் இழுக்கப்பட்டு கண்காதுமூக்கு துவாரங்கள் வழியாக வெளிச்செல்வதை தடுக்க முதலில் அவைகளைமூடவேண்டும் என்பதை குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருமாள் புறப்படும்முன்பாக கர்ப்பக்ருஹத்தில் வேதபாராயணமும் திருவாய் மொழியும் தொடங்கப்படுகின்றன அதனபின் ரத்ன அங்கி சார்த்திக்கொண்டு பெருமாள் புறப்படுவார் அப்போது சந்நிதிவாசல்திறக்கப்படும் சிம்மகதி(ஆண்டாளின் மாரிமலை முழஞ்சில் பாட்டில் வருமே அதேதான்) பிறகு ஒய்யார நடையிட்டு பரம்பதவாசல் செல்லும்வழியில் சில நெறிமுறைகளை நடத்தியபடி செல்வார் இதையெல்லாம் நம்மாழ்வார்பாடல்களில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரமபதவாசலுக்கு வந்ததும் வடக்குமுகமாய் நின்று வாசல்கதவுகளைதிறக்கும்படி நியமித்தவுடன் அவைதிறக்கப்படும் சொர்க்கவாசல் என்பது இதுதான். சொர்க்கப்படி மிதித்து வெளியே வந்ததும் இந்தவாசலுக்குப் பக்கதில் விரஜா நதியின் ஸ்தானத்தில் சந்திரபுஷ்க்ரணி இருக்கிறது. நதிக்கரை மணல் கொண்டதுதானே?&amp;nbsp;ஸ்ரீரங்கத்திலும் சந்திரபுஷ்கரணியைக்கடந்தால் நீங்கள் மணல்வெளியில்&amp;nbsp;தான் கால் பதிக்கவேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சொர்க்கப்படி&amp;nbsp;தாண்டியதும் உடனே வரும்&amp;nbsp;நாலுகால் மண்டபத்தில் வேதவிண்ணப்ப்பமாகி பெருமாள் இந்தவாசலுக்குப்போனவுடன் அதுவரை சார்த்தி இருந்தபோர்வை களையப்பட்டு புதுமாலைகள் சம்ர்ப்பிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;(இதையெல்லாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.கண்டிப்பாகக் கண்பனிக்கும் மனம் நெகிழும் காட்சிகள் இவை. இவைகளை நமக்காக&amp;nbsp; இறைவனே நடத்திக்காட்டுவது அவனுக்கு நம் மேல் உள்ள அக்கறையைக்காட்டுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;பரமபதத்திற்குப் பக்கத்திலுள்ள விரஜா நதியை அடைந்து அதில் ஸ்னானம் செய்து முக்தனுக்கு பழைய சரீரம் போய் புதுசரீரம் ஏற்படும் தத்துவத்தை இது உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதசி தினம் ரத்ன அங்கியோடு பெருமாள் பரமபதவாசல் நுழைந்து செல்வதால் ,விரஜா நதியில் மூழ்கி எழுந்த ஒருவன் பரிசுத்தமான ஒளி கொண்ட முகத்தோடுவருகிறான் ,’ ஒளிக்கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆழ்வார் அருளியபடி விரஜைக்கு அப்புறமுள்ள முகதர்களோடு கூடுவதுகாட்டப்படுகிறது ஆதிகாலத்தில் பரமபதவாசலுக்குவெளியே ஆழ்வார்கள் நின்றுகொண்டிருந்ததாய் சொல்லப்படுகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரங்கால் மண்டபத்தின் திருமாமணிமண்டபத்தில் அண்ணல் அமர்ந்ததும் அவர் எதிரில் ஆழ்வார்கள் வீற்றிருப்பது மாமணிமண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை என்கிறபடி முக்தன்(முக்திஅடைந்தவன்) பரமபதத்தில் உள்ள திருமாமணி மண்டபதை அடைந்து அங்குள்ள நித்ய முக்தர் மத்தியில் ஆனந்தமாய் இருப்பதைக்காட்டுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக ,அரங்கன் ’வைகுண்டம்’ என்றதலைப்பில் நடத்தும் நாடகம் தான் இந்தவைகுண்ட ஏகாதசி. ! இறைவன் நமக்கு உய்ய வழிக்காட்ட முன்னின்று செல்கிறான் நாமும் ’உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வு அரிது உயிர்காள் ’என்ற திருவாய் மொழிக்கு ஏற்ப அவனை அறிந்து உணர்வோம், உன்னதம் அடைவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கன் திருவடிகளே சரணம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-641391115287495025?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/641391115287495025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=641391115287495025&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/641391115287495025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/641391115287495025'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2012/01/blog-post_04.html' title='அந்த-ரங்கம்!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-WUE3JHaAtOs/TwRqbRwYrBI/AAAAAAAAA5E/E4XOrtU67Og/s72-c/152.JPG' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-886785575640949910</id><published>2012-01-02T16:16:00.001+05:30</published><updated>2012-01-06T09:11:54.736+05:30</updated><title type='text'>தென்றல் தந்த  பரிசுக்கதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ் மாத இதழ்&lt;br /&gt;தென்றல் நடத்திய சிறுகதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதையை இங்கே பதிவிடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;தென்றல் பத்திரிகைக்கு&amp;nbsp; நன்றி. இந்தச்சுட்டியில்&amp;nbsp; கதையைப்படிக்கலாம்..குரல்பதிவில் கூட&amp;nbsp; இட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://www.tamilonline.com/thendral/morecontentnew.aspx?id=134&amp;amp;cid=13&amp;amp;aid=7635"&gt;http://www.tamilonline.com/thendral/morecontentnew.aspx?id=134&amp;amp;cid=13&amp;amp;aid=7635&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்றமாதம் இப்படி விவரம்&amp;nbsp; இட்டிருந்தார்கள்.இடமின்மை காரணமாய் என் கதையை இந்த ஜனவரி இதழில் பிரசுரித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 640px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td align="left" valign="top" width="160"&gt;&lt;/td&gt;&lt;td align="left" valign="top" width="160"&gt;&lt;/td&gt;&lt;td align="left" valign="top" width="160"&gt;&lt;/td&gt;&lt;td align="left" valign="top" width="160"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td align="center" style="font-size: 10px;" valign="top" width="160"&gt;&lt;/td&gt;&lt;td align="center" style="font-size: 10px;" valign="top" width="160"&gt;&lt;/td&gt;&lt;td align="center" style="font-size: 10px;" valign="top" width="160"&gt;&lt;/td&gt;&lt;td align="center" style="font-size: 10px;" valign="top" width="160"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;தென்றல் சிறுகதைப் போட்டி 2011க்கு அமெரிக்கா, இந்தியா, மலேசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாலந்து என்று உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளனமானவர்கள் வாழ்வின் எல்லா வண்ணக் கலவைகளையும் பிரதிபலிக்கும் சிறுகதைகளை உற்சாகத்தோடு அனுப்பியிருந்தார்கள். வந்தவை மொத்தம் 79. அறிவிப்பில் கூறியிருந்தபடி தமிழ்நாட்டிலிருந்து வந்தவற்றை மிகுந்த வருத்தத்தோடு விலக்க வேண்டியதாயிற்று. ஆயினும் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து சிறுகதைகள் வந்தன. சிலர் சளைக்காமல் நான்கைந்து கதைகள் கூட எழுதி அனுப்பினர்.&lt;br /&gt;நிதானித்து கருத்துப்புலம், நடை நேர்த்தி, மொழிச் சிறப்பு என்ற அளவுகோல்களை வைத்து, விருப்பு வெறுப்பின்றி ஆசிரியர் குழு பரிசீலித்து பரிசுக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முதல் பரிசு:&lt;/b&gt; &lt;a href="http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=133&amp;amp;cid=13&amp;amp;aid=7571"&gt;உயர்ந்த மனிதன்&lt;/a&gt; - இரத்தினம் சூரியகுமாரன், சான் ஹோசே, கலிஃபோர்னியா.&lt;br /&gt;&lt;b&gt;இரண்டாம் பரிசு:&lt;/b&gt; &lt;a href="http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=133&amp;amp;cid=13&amp;amp;aid=7572"&gt;செலவுக்கடை&lt;/a&gt; - அம்புஜவல்லி தேசிகாச்சாரி, சான் ஹோசே, கலிஃபோர்னியா.&lt;br /&gt;&lt;b&gt;மூன்றாம் பரிசுகள் (2):&lt;/b&gt; &lt;a href="http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=133&amp;amp;cid=13&amp;amp;aid=7573"&gt;மடி நெருப்பு&lt;/a&gt; - ஆனந்த் ராகவ், பெங்களூரு, இந்தியா., &lt;br /&gt;&lt;div style="margin-left: 144px;"&gt;&lt;a href="http://www.tamilonline.com/thendral/MoreContentnew.aspx?id=134&amp;amp;cid=13&amp;amp;aid=7635"&gt;மாடு இளைத்தாலும்&lt;/a&gt; - ஷைலஜா, பெங்களூரு, இந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ****,,.............................................****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாடு இளைத்தாலும்..&lt;br /&gt;***************************&lt;br /&gt;முப்பாட்டன் காலத்தில் புதுப்பிச்சிக் கட்டின வீடாம் - சொல்வார்கள். கொஞ்சம் காலை வீசி நடந்தால் முழு வீட்டையும் பார்த்து முடிக்க அரைமணி ஆகும் .நிதானமாக நடந்தால் கேட்க வேண்டியதில்லை, .ஒருமணி நேரம்கூடஆகலாம், அம்மாம் பெருசு! நெல் உலர்த்த,சோளம்- கம்பு-உலர்த்த என்று நாலு முற்றம். கால்பந்து விளையாடற க்ரவுண்ட் மாதிரி ,காக்கைகுருவி எல்லாம்கொத்தணும்னு தெறந்த வெளி முற்றம்! முப்பாட்டனுக்கு கட்டிடக் கலையிலே ஆர்வம் அதிகமாஇருந்திருக்கணும். அவருக்கு எல்லாமே பெருசா இருக்கணும் (மூணு பொண்சாதிகளாம் அவருக்கு) ஒரு விசேசம் வீட்டுல சாப்பாடுன்னா , எட்டு ஊரு கூடிரும். அத்தோடவா. சாப்பிட்ட அம்புட்டு பேருக்கும் கையிலே ஒரு அணா தட்சணை வேற! அந்த காலத்து ஓரணா.இன்னித்து மதிப்புக்கு அது எத்தினி ரூவான்னு நீங்களே கணக்கு போட்டுக்குங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அதெல்லாம் அந்தக்காலத்தோட போச்சு. இப்போ இந்தக்கட்டிடத்தை மராமத்துப்பாக்கவே வக்கில்லை அதான் நெலமை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருமூச்சுவிட்டபடி'அப்பனே...தண்டபாணி' எனக்கூவினார் நாச்சிமுத்துக்கவுண்டர். பட்டாசாலைக்கு வந்து நின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலது பக்கம் பிரும்மாண்டமாய் , மூன்றடுக்காய் நீண்டிருக்கும் வீச்சுக்கு மன்றம்னு பேரு. அங்கேதான் கவுண்டரின் மூதாதையர்கள்- பரம்பரைப்பட்டையக்காரர்கள்- சிம்மாசன நாற்காலியில் உட்கார்ந்து நீதிபரிபாலனம் செய்வாங்களாம்! அது ஒரு காலம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’அப்பனே தண்டபாணீ!’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவரில் குலதெய்வம் தண்டபாணி காட்சி தருகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரத்தைப்பார்த்தால் நம்மைப்பார்த்து சிரிப்பதைப்போல, நம்மோடு பேசுவது போல அப்படி ஒரு தத்ரூபம் . பல இடங்களில் வண்ணங்கள் பெயர்ந்துபோன அந்தக்காலத்து சித்திரம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டர் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக இந்த மன்றத்தில் உள்ள சாய்வு நாற்காலிக்குத்தான் வருவது வழக்கம். அந்த நாற்காலிக்கு வெள்ளியில் கால்கள்.சாய்மானங்களில் வெள்ளிப்பூண்கள். இப்போ நசுங்கி, தேய்ந்து,பல்லை இளிக்கிற வெள்ளி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாற்காலியில் சாய்ந்தவர் சற்றுத்தான் கண் அயர்ந்திருப்பார். ஏதோ அரவம் கேட்கவே விழிப்பு கொடுத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மணி வந்து நின்றாள். நின்ற தோரணை, நின்ற இடம் இரண்டையும் பார்த்தபோது ஏதோ பிராது கொடுக்க வந்த மாதிரி இருந்தது. அங்ஙன நின்றுதான் பட்டையக்காரர் கிட்ட அந்தக்காலத்திலே பிராது, விண்ணப்பம் எல்லாம் கொடுப்பாங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்னா?" கவுண்டரின் குரல் சொடுக்கிற்று சாட்டை போல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதடுகள் அசைந்தபோது மேல் உதடுகளில் ஆரோகணித்திருந்த கொடுவாள்மீசை பக்கவாத்தியம் போல உடன் அசைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம மாரிமுத்து விஷயமாத்தான்.." அம்மணியின் குரல் மெல்ல தொண்டைகுழிக்குள்ளிருந்து வெளிவர முயற்சித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;" ஏன் அவனுக்கு என்னா?" &lt;br /&gt;&lt;br /&gt;"தெரியாத மாதிரி என்னயக் கேட்டா....? " இப்போது அம்மணியின் குரல் தீர்க்கமாகவே வந்து வெளியே விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சமயம் சொல்லிவைத்தாற்போல மாரிமுத்து அங்கே வந்து கவுண்டச்சியின் பக்கம் நின்று கொண்டுஅப்பனைப்பார்த்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாளும் பையனும் நிக்கிற விதத்திலேயே கவுண்டருக்கு புரிந்துபோயிற்று. ஒத்திகை பாத்துட்டுத்தான் ஆயியும் மகனும் வந்திருக்காங்கன்னு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மாரிமுத்து பி.ஏ. பாஸ்பண்ணி வருசம் மூணாயிட்டுது... ஊரு முச்சூடும் கம்பூட்டர் படிச்சவங்களுக்குத்தான் ஜோலின்னு போயிட்டாங்க நம்ம பையன் தான் பாவம் சொம்மாவே கெடக்குறாரு..”&lt;br /&gt;கவுண்டர் தலையை அசைத்து ஆமோதித்தார், அனுசரணையுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னமும் ஒருவேலையும் கெடச்சபாடில்ல...நீங்க ஒருவார்த்த சொல்லப்போடப்புடாதா?' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"யார்ரா இவ? நான் சொன்னா எவண்டி வேலை கொடுக்கக் காத்திருக்கான்? "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்களே நேராச் சொல்லணுமா? உள்ளூருலயே பேங்கிலே வேலைக்கு ஆளு எடுக்கிறாங்களாம். அந்த பாங்குக்கு நம்ம சோலமுத்துதான் சேர்மேன் ..நீங்க அதுகிட்ட ஒரு வார்த்த சொன்னா போதும்.."&lt;br /&gt;&lt;br /&gt;அட...விவரமாத்தான் ஒத்திக பாத்திருக்காங்க..எதனை எதனாலே எப்படி முடிக்கலாம்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரில்ல, அந்தக்கதையா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோலமுத்து அவரால் ஆளானவன் தான். அனாதையாக்கிடந்தவனை அவர் தான் படிக்க வச்சி, துணிமணி வாங்கிக் கொடுத்து, செலவுக்கு காசு கொடுத்து சொந்தக் காலை ஊனி, முன்னேறுவதுக்கு பண உதவி, எல்லாம் செய்து உதவினார். இப்போ நல்ல நெலமைக்கு வந்துட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பாங்கும் பேர் சொல்லும்படியா பத்துவருஷத்திலே நூறுகிளைவிட்டு பெரிய ஆலமரமா வளர்ந்திருச்சி.. சோலைதான் அந்த பாங்க் வளர்ச்சிக்கும் காரணம் என்பது அவருக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன யோசிக்கிறீங்க?' அம்மணி உசுப்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா, நீங்க ஒருவார்த்தை சொன்னா போதும்ப்பா..எனக்கும் வயசு ஏறிக்கிட்டே போவுதுப்பா" என்றான்.மாரிமுத்து. அருமை மகன்!மூணு பெண்குழந்தைகளுக்குப் பின்னே காரமடை ரங்கநாதருக்கு வேண்டிக்கொண்டு பின்பு பிறந்தவன். தாத்தா பெயரை வைத்துக்கொண்டிருந்தாலும் அரங்கராசன் என்ற இன்னொரு பெயரும் அவனுக்கு உண்டு. பெண்களைக் கரையேற்றியதில் மகனுக்கு இந்தபழையநாள்வீட்டைத்தவிர கொடுப்பதற்கு வேறு எந்த சொத்தும் இல்லாத தன் மீது கவுண்டருக்கு சற்றே ஆயாசமாய் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டர் இருவரையும் பார்த்தார். அவர்கள் சொல்வது நியாயம். சோலமுத்துவால் இது ஆகக்கூடிய்துதான். ஆனா இதுவரை அவருடைய ஆயுசில் , யாரிடமும் ஒரு சிபாரிசுக்குப் போய் நின்றதில்லையே!அவரை நாடித்தான் எல்லோரும் சிபாரிசுக்கு வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ ஓடம் வண்டியிலே ஏறுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"யோசிக்காதீங்கப்பா.."&lt;br /&gt;&lt;br /&gt;"சரிப்பா.." கவுண்டர்பெருமூச்சு விட்டார். "நாளைக்கே சோலமுத்துவப் பாத்துடுவோம்": என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிக்கும் மகனுக்கும் வேலையே கிடைத்துவிட்ட சந்தோஷம். அங்கிருந்து அகன்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோலைமுத்துவைப்பார்க்க கவுண்டர் சென்ற பொழுது சோலைமுத்துவே மனைவி பர்வதம் சகிதம் தனது பங்களாவின் முன் பரப்பில் தெரிந்த புல்வெளியில் நின்று கொண்டிருந்தான் .&lt;br /&gt;&lt;br /&gt;அவரைக்கண்டதும் அவனுக்கு வியப்பு தாளவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா! வாங்கய்யா! ஒரு வார்த்தை சொல்லி அனுப்பி இருந்தீங்கன்னா நானே வந்திருப்பேனே என் கண்களையே என்னால நம்ப முடியல்லியே.. நீங்கதானா வந்திருக்கிறது?... பர்வதம் வா.. அய்யாவை நமஸ்காரம் செஞ்சி ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்.."&lt;br /&gt;&lt;br /&gt;வாசல் என்றும் பாராமல் கணவனும் மனைவியும் கவுண்டரின் காலில் விழுந்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும், பர்வதம் பெயருக்கு ஏற்ப பெருத்த சரீரத்துடன் தரையில் உருள்கிறமாதிரியே சாய்ந்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டருக்கு கணம் உடம்பு ஆடிவிட்டது. எத்தனை மரியாதை, எத்தனை பக்தி இவனுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்கய்யா! என்ன இருந்தாலும் நம்ம வீட்டு பட்டாசாலைக்கும் மன்றத்துக்கும், இந்தவீடெல்லாம் ஈடாகாது " என்றான்,சோலைமுத்து பவ்யமாக.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கையெடுத்து அவனை அமர்த்தியவாறு ஹாலை ஒரு நோட்டம் விட்டார், பின் அமர்ந்தார். சோலைமுத்து நின்றுகொண்டுதான் இருந்தான் . அவருக்கு எதிராக எந்தக்காலத்தில் அவன் உட்கார்ந்திருக்கிறான்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாரிமுத்து நிற்பதை கவனித்த சோலைமுத்து, "அடேடே! சின்னப்பட்டயக்காரர் நிக்கலாங்களா? உக்காருங்க தம்பி!" என்று உபசரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பர்வதம் தட்டு நிறைய இனிப்பு வகைகளையும் காரவகைகளையும் பழவகைகளையும் கொண்டுவந்து பரப்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோலைமுத்து நின்ற தோரணை, அவனைப்பார்த்தால், ஏதோ விண்ணப்பம் கொடுக்க வந்தவனைப்போல கவுண்டருக்குத்தோன்றிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரம்பரைப்பட்டயாக்காரர் ரத்தமாச்சே, விண்ணப்பம் வாங்கின வம்சமாச்சே,,,தவிர யாரிடமும் விண்ணப்பம் கொடுத்த வர்க்கம் அல்லவே!&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா! "&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சோலமுத்து?"&lt;br /&gt;&lt;br /&gt;சோலைமுத்து தலையைச் சொறிந்தான்"நீங்க ஒரு வார்த்தை சொல்லிப்போடணும் அப்புறமா எல்லாம் நடந்துடும்யா.."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா சொல்ற சோலே?"&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த தபா எம் எல் ஏ எலெக்க்ஷன்ல போட்டி இடலாம்னு இருக்கேன் ஆதரவும் நிறைய இருக்குது...நம்ம பூங்காவனம் செட்டியார்தான் தேர்வுக் கமிட்டில முக்கியமானவரா இருக்காரு..."&lt;br /&gt;&lt;br /&gt;"அட நம்ம ஊத்துக்குளி பூங்காவனமா?"&lt;br /&gt;&lt;br /&gt;" ஆமாய்யா..உங்க சிஷ்யப் பிள்ளேன்னு தன்னை அவரே அடிக்கடி சொல்லிக்குவாரே , அவரேதான்"&lt;br /&gt;&lt;br /&gt;இதைக்கேட்டதும் கவுண்டருக்கு சிரிக்க வேண்டும் போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மாரிமுத்துவுக்கோ தன் கனவுகள் எல்லாம் பொசுங்கிப்போனாற்போல் பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டுவிட்டது."இதென்னடா வம்பா போச்சு? நாம சிபாரிசுக்கு இவரு கிட்ட வந்தா இவரு நம்ம அப்பாகிட்ட சிபாரிசுக்கு கையை ஏந்தறாரே? நல்ல நாளிலேயே நாளிப்பாலு.,இப்போ கேக்கணுமா? அட அப்படியே நம்ம சிபாரிசை எடுத்து வச்சாலும் ஒரு சிபாரிசுக்கு இன்னொரு சிபாரிசை வெலை பேசற மாதிரி அல்லவா ஆயிப்போயிரும்?" மனசுக்குள் முணுமுணுத்தபடி கைகளைப் பிசைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டர் எழுந்து நின்று சோலமுத்துவின் தோள்களைத்தட்டிக்கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கவலைப்படாதே..உன்னை சிபாரிசு செய்யறது எனக்குப் பெருமைதான் .பூங்காவனத்துக்கும் தராதரம் எல்லாம் தெரியும் உண்மையாவும் கட்சிக்கு விஸ்வாசமாயும் மக்களுக்கு உழைக்க உன்னைவிட்டா வேற யாரப்பா இருக்காங்க..? பார்க்கபோனா இது சிபாரிசே இல்லப்பா. சரி நான் கெளம்புறேன்" என்றார் கவுண்டர் இருக்கையை விட்டு எழுந்தபடியே..&lt;br /&gt;&lt;br /&gt;சோலைமுத்துவும் பர்வதமும் வாசலில் சேவித்தது போதாது என்று ஹாலிலும் ஒருமுறை வணங்கி எழுந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;***** *********************************************** &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்வளவு ஆனபிறகு எதிர்பாராதது நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்! மாரிமுத்துக்கு வங்கியிலிருந்து வேலைக்கு உத்தரவு வந்தே விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;'அப்பனே தண்டபாணி!'&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டர் பெருமூச்சுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'"கடைசிவரைலே நான் யார்கிட்டவும் சிபாரிசுக்கு போககூடாதுங்கறது அப்பன் தண்டபாணியின் சித்தம்போலிருக்கு! எப்படியோ வேலைகிடைச்சிடிச்சி இல்ல! நல்லபடியா ஒளுங்கா வேலையக் கத்துக்கிட்டு நல்லபேர் வாங்கோணும் " என்றார் மகனிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***********************************************&lt;br /&gt;&lt;br /&gt;“நல்லவேள பருவதம்.. கவுண்டரய்யாக்குத் தெரியாமலேயே நான் என் நன்றிக்கடனை அடைச்சிட்டேன்.. அவரு அன்னிக்கு வூடு வர்ரப்போ வாசல்ல மகன் மாரிமுத்துகூட பேசிட்டு வந்ததை நான் கேட்டுக்கிட்டது அவருக்குத் தெரியவாய்ப்பு இல்ல. அதனாலத்தான் அவரு அன்னிக்கு வாயத்துறக்கிறதுக்கு முன்னாடி நான் சிபாரிசுக்கு என் வாயைத்துறந்து கேட்டுகிட்டேன்.” என்றான் நெகிழ்ந்தகுரலில் சோலமுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லீங்களா பின்ன, மாடு எளைச்சாலும் கொம்பு தேயுலாமுங்களா? நாமதான் தேய விட்டுடுவோமாங்க? நீங்க செஞ்சிப்போட்டது சர்தாங்க மாமா ” என்றாள் பர்வதம் . *********************** *********************** *******&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-886785575640949910?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/886785575640949910/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=886785575640949910&amp;isPopup=true' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/886785575640949910'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/886785575640949910'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2012/01/blog-post.html' title='தென்றல் தந்த  பரிசுக்கதை.'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-1562964723860404361</id><published>2011-12-31T19:22:00.001+05:30</published><updated>2012-01-02T09:12:54.436+05:30</updated><title type='text'>புத்தாண்டே வருக!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Bw-86A5Taxk/Tv8SCnxiW3I/AAAAAAAAA4U/VzGHsqTM3R4/s1600/image005.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="219" rea="true" src="http://1.bp.blogspot.com/-Bw-86A5Taxk/Tv8SCnxiW3I/AAAAAAAAA4U/VzGHsqTM3R4/s320/image005.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாடையும் பனியும் சூழ்ந்த&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழித்திங்கள் நாளில்&lt;br /&gt;&lt;br /&gt;நாடெல்லாம் புதுமை செய்ய&lt;br /&gt;&lt;br /&gt;காடெல்லாம் விளைந்து செழிக்க&lt;br /&gt;&lt;br /&gt;தேடிவந்ததிங்கு தேன்சுவைப் புத்தாண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;வீடெல்லாம் நிறைந்த தூசி&lt;br /&gt;&lt;br /&gt;ஓடிடப் பெருக்கித்தள்ளி&lt;br /&gt;&lt;br /&gt;பாடி நாம் பரவசமாய் &lt;br /&gt;&lt;br /&gt;ஆடிக் கொண்டாடியே வரவேற்கும் புத்தாண்டு!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செந்தமிழ் நாட்டிற்கென்றே &lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புற அமைந்தபொங்கல்&lt;br /&gt;&lt;br /&gt;வந்ததும் விளைவுபொங்கத் &lt;br /&gt;&lt;br /&gt;தருவதும் புத்தாண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாரணியில் நாம் என்றும் இனிதே வாழ&lt;br /&gt;&lt;br /&gt;புத்தாண்டில் உறுதிமொழி இப்படியே எடுப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அறிவெனும் நீரைப்பாய்ச்சி&lt;br /&gt;&lt;br /&gt;அன்பெனும் பயிரை நடுவோம்&lt;br /&gt;&lt;br /&gt;நெறி எனும் வேலி போட்டு&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்செனும் நன்னிலத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;வெறி என வளரப் பார்க்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வேற்றுமை களைந்திட்டு&lt;br /&gt;&lt;br /&gt;அறுவடை நாம் செய்வதெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;அளவிலா மகிழ்ச்சி தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-1562964723860404361?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/1562964723860404361/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=1562964723860404361&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/1562964723860404361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/1562964723860404361'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/12/blog-post_31.html' title='புத்தாண்டே வருக!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Bw-86A5Taxk/Tv8SCnxiW3I/AAAAAAAAA4U/VzGHsqTM3R4/s72-c/image005.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-3552292977748947527</id><published>2011-12-30T07:43:00.001+05:30</published><updated>2011-12-30T17:43:14.379+05:30</updated><title type='text'>நானும் 2011ம்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நானும் 2011ம்&amp;nbsp; என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுத&amp;nbsp; &lt;a href="http://pesalamblogalam.blogspot.com/" target="_blank"&gt;அனந்து&amp;nbsp; &lt;/a&gt;அழைத்துள்ளார்.&amp;nbsp; கேள்விகள் சிக்கலாக இல்லை ஆகவே தைரியமாய் களத்தில் குதித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-u90RK8P5xUo/TvspOHjFhlI/AAAAAAAAA3w/HzFm_1tLR1k/s1600/2011.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://2.bp.blogspot.com/-u90RK8P5xUo/TvspOHjFhlI/AAAAAAAAA3w/HzFm_1tLR1k/s1600/2011.jpg" /&gt;&lt;/a&gt;ம்&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-sd-1Mq2L5kQ/Tv2qvhL-l0I/AAAAAAAAA4I/q-N-bLQOFrE/s1600/DSC00274.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" rea="true" src="http://4.bp.blogspot.com/-sd-1Mq2L5kQ/Tv2qvhL-l0I/AAAAAAAAA4I/q-N-bLQOFrE/s320/DSC00274.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;நானும்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படித்ததில் பிடித்தது :&amp;nbsp; சமீபத்தில் படித்ததில் பிடித்தது என்று நெம்பர்40 ரெட்டைத்தெரு ..இராமுருகன் எழுதிய நாவலை சொல்வேன். பொதுவா கேட்டா&amp;nbsp;&amp;nbsp; பெரியலிஸ்ட்டே இருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிய பொருள் .....குளீர் நடுக்குதே பெங்களூர்ல&amp;nbsp; விருந்தாளிங்க வந்தால்&amp;nbsp; கம்பளி புதுசு தேவைன்னு&amp;nbsp; க்வில்ட் ஒண்ணு வாங்கினோம்,.&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற இடம் :&amp;nbsp;&amp;nbsp; மேலைநாடுகள் சில.&amp;nbsp; ஆனாலும் சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரசித்த படம் : காஞ்சனா&amp;nbsp; பயமா இருந்தாலும் பிடிச்சது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உருகிய படம் :&amp;nbsp; படம் பார்த்து உருக மெழுகுவர்த்தியா என்ன?::) கொஞ்சம் ஒன்றிப்போனது எங்கேயும் எப்ப்போதும் படத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்த படம் ... முழுநீள சிரிப்புப்படம்&amp;nbsp; இப்போ ஒண்ணும் பார்க்கலயே!&amp;nbsp; விவேக் வடிவேலு காமெடி பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த பாடல் : எம்மா எம்மா ( ஏழாம் அறிவு ) எப்பவும் பிடிச்சது&amp;nbsp; ரன் படத்து பொய் சொல்லக்கூடாது காதலி. அப்புறம் மாலையில் யாரோ&amp;nbsp; என்கிற ஷத்ரியன் படப்பாடல்,&amp;nbsp; காற்றினிலே வரும் கீதம் இப்படி பல..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிகப்பெரிய சந்தோசம் :&amp;nbsp;எழுத்தாளர்களுக்கு வேற என்னங்க பெரிய சந்தோஷம்?&amp;nbsp; படைப்புகள் வெளிவந்தால் அதுதான்.&amp;nbsp; தென்றல் இதழ்ல&amp;nbsp; பரிசுக்கதை&amp;nbsp; தேர்வானது&amp;nbsp; சந்தோஷம்.(கதை&amp;nbsp; ஜனவரி ல வலைப்பூவில்&amp;nbsp; ரிலீஸ்!)&lt;br /&gt;&lt;br /&gt;புதிய நண்பர்கள் :&amp;nbsp; சிலர் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதனை : ஆஹா அதெல்லாம்&amp;nbsp; பெரிய வார்த்தை! miles to go before i&amp;nbsp; sleep..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருத்தம் : குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளைப்பற்றிக்கேள்விப்பட்டால்&amp;nbsp; மனம் மிக வருத்தம் அடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சர்யம் .. &lt;a href="http://minminipoochchigal.blogspot.com/" target="_blank"&gt;ஷக்திப்ரபா&lt;/a&gt; (எனது பெங்களூர் தோழி) வரவர வலைப்பூவில்&amp;nbsp; ஆழ்ந்து நிறைய எழுதுவது ..ஆனால்&amp;nbsp; மகிழ்ச்சிகலந்த ஆச்சர்யம் அது!!!&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;அவ்வ்வளோதான் முடிச்சிட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-3552292977748947527?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/3552292977748947527/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=3552292977748947527&amp;isPopup=true' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/3552292977748947527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/3552292977748947527'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/12/2011.html' title='நானும் 2011ம்.'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-u90RK8P5xUo/TvspOHjFhlI/AAAAAAAAA3w/HzFm_1tLR1k/s72-c/2011.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-1454442862996163094</id><published>2011-12-24T20:13:00.000+05:30</published><updated>2011-12-24T20:13:45.734+05:30</updated><title type='text'>அன்புப்பூ ஒன்று வந்தது!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-OSqt3efTHrc/TvXgZPWjEnI/AAAAAAAAA20/CdM42mUsbFM/s1600/image005.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" rea="true" src="http://4.bp.blogspot.com/-OSqt3efTHrc/TvXgZPWjEnI/AAAAAAAAA20/CdM42mUsbFM/s320/image005.jpg" width="224" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகிலத்தைக்காத்திட்டு அன்பினைப் பரப்பிட&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது- அது&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரையும் கவர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-iK6W1if67X0/TvXhPLqYOpI/AAAAAAAAA3A/KZt0GoQfP7A/s1600/Christmas+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="226" rea="true" src="http://4.bp.blogspot.com/-iK6W1if67X0/TvXhPLqYOpI/AAAAAAAAA3A/KZt0GoQfP7A/s320/Christmas+%25281%2529.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதாபிமானத்தை மக்களுக்குச் சொல்லி&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று -நல்&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது,&lt;br /&gt;&lt;br /&gt;மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-6IhP9pHbe7E/TvXiX2CHlGI/AAAAAAAAA3M/qdB0PQpwq8U/s1600/image002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="310" rea="true" src="http://4.bp.blogspot.com/-6IhP9pHbe7E/TvXiX2CHlGI/AAAAAAAAA3M/qdB0PQpwq8U/s320/image002.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னிரு கரங்களில் சிலுவையைத்தாங்கிடினும்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணிரண்டில் கருணையே காட்டி நின்றது- அந்த &lt;br /&gt;&lt;br /&gt;எண்ணிலாப்பெருமை கொண்ட இறைவன் யேசு&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணில் உதித்த நாள் இன்று!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-8M6T97aWhQk/TvXi9X4XfLI/AAAAAAAAA3Y/96_vgedZdZo/s1600/image001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="205" rea="true" src="http://4.bp.blogspot.com/-8M6T97aWhQk/TvXi9X4XfLI/AAAAAAAAA3Y/96_vgedZdZo/s320/image001.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-1454442862996163094?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/1454442862996163094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=1454442862996163094&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/1454442862996163094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/1454442862996163094'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/12/blog-post_24.html' title='அன்புப்பூ ஒன்று வந்தது!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-OSqt3efTHrc/TvXgZPWjEnI/AAAAAAAAA20/CdM42mUsbFM/s72-c/image005.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-1253704727186013093</id><published>2011-12-22T22:03:00.000+05:30</published><updated>2011-12-22T22:03:16.027+05:30</updated><title type='text'>வாரணம் ஆயிரம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;கனவா கனாவா?&lt;br /&gt;எது சரியான சொல் என்ற ஆராய்ச்சியில் இரண்டுமே சரி என்பதுபோலத்தெரிகின்றன. மங்கியதோர்நிலவினிலே கனவினிது கண்டேன் என்கிறார் பாரதி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்பக்கனா ஒன்று கண்டேன்&amp;nbsp; என்ற பாடலில் கனா தான் வருகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள் கனா என்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள் கண்ணனை நினைத்துப்பாடிய பாடல்கள் நாச்சியார் திருமொழி என்ற பெயரில் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாரணமாயிரம் எனத்தொடங்கும் பத்து பாசுரங்களில் கண்ணனுடன் தனக்குக் கல்யாணம் ஆனதாகக் &lt;br /&gt;கனாக்கண்டதை தோழியிடம் கூறுகின்றாள்..இதில் நிச்சயதார்த்தம் கையில் காப்பு கட்டுதல் பாணிக்ரஹண்ம் எனதிருமணச் சடங்குகள் அனைத்தும் சுருக்கமாக வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கைத்தலம் பற்றக்* கனாக்கண்டேன் தோழிநான்.... என்று ஆண்டாளும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;வந்தென்னைக் *கரம்பற்றிய* வைகல்வாய் &lt;br /&gt;&lt;br /&gt;இந்தஇப் பிறவிக் கிருமாதரைச் &lt;br /&gt;&lt;br /&gt;சிந்தையாலும் தொடேன் என்று செவ்வரம் &lt;br /&gt;&amp;nbsp;தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;என்று கம்பனுடைய சீதையும் சொல்லும் கரம்பற்றும் வைபவத்தை&amp;nbsp; பாரதி தனது புரட்சிகரமான கண்ணோட்டத்தில் பெண்ணிற்கு அவன் தரும் முக்கியத்துவத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;காதல் ஒருவனைக் &lt;strong&gt;*கைப்பிடித்தே&lt;/strong&gt;* - அவன் &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;காரியம் யாவிலும் கைகொடுத்தே &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று அழகாக&amp;nbsp;&amp;nbsp; திருப்பிப்போட்டுவிட்டான்!&lt;br /&gt;தேர்ந்தெடுக்கும் உரிமையை பெண்ணிற்குத்தருகிறான் எங்கள் பாரதி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பாணி-கிரஹணம் தானே? பற்றுகிற காரணத்தால்தானே சூரிய சந்திர கிரஹணங்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;மாங்கல்ய தாரணம் பாணிகிரஹணத்தின் ஒரு பகுதி&amp;nbsp;யாக&amp;nbsp; இருக்கவேண்டும்&lt;br /&gt;மாங்ல்ய தாரணம் செய்வதாய் என்று பேசும் திருமண அழைப்புகள் எங்கும் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பாணிகிரஹணம் செய்துகொள்வதாய் என்றுதானே திருமண &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அழைப்பில் இருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;பாணிக்ரஹணம் பிறகு பார்க்கலாம்&amp;nbsp; வாருங்கள் முதலில் மாப்பிள்ளை அழைப்பிற்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; முதல் பாடல் ஜானவாசம்(மாப்பிள்ளை அழைப்பு) என்று கொள்ளலாம். அந்தகாலத்தில்&amp;nbsp; யானை&amp;nbsp; குதிரை&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-D76u1B3_R80/TvNaXnFViYI/AAAAAAAAA2o/GLio1U8xRK8/s1600/elephantdecor.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" rea="true" src="http://4.bp.blogspot.com/-D76u1B3_R80/TvNaXnFViYI/AAAAAAAAA2o/GLio1U8xRK8/s400/elephantdecor.jpg" width="283" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;மீது மாப்பிள்ளை வருவது&amp;nbsp; இருந்திருக்கிறது இன்றும் வட இந்தியாவில் குதிரை மீது மணமகன் அம்ர்ந்துவரும் ஊர்வலம் அமர்க்களமாய் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலப்போக்கில்&amp;nbsp; தென்னகப்பக்கங்களில்அன்னம் அல்லது தோகை மயில் முகப்பினைக்கொண்ட கார் என்றாகிவிட்டது.:)&lt;br /&gt;&lt;br /&gt;வாரணமாயிரம் சூழ வலம் செய்து &lt;br /&gt;நாரணன் நம்பி நடக்கின்றானென்றதிர்&lt;br /&gt;பூரண பொற்குடம் வைத்துப்புரமெங்கும்&lt;br /&gt;தோரணம் நான் கட்ட கனாக்கண்டேன் தோழீ&amp;nbsp; நான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Ms1r1H9dw7Y/TvNUlJjziNI/AAAAAAAAA2c/ytwBolcP1BM/s1600/untitled.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" rea="true" src="http://1.bp.blogspot.com/-Ms1r1H9dw7Y/TvNUlJjziNI/AAAAAAAAA2c/ytwBolcP1BM/s400/untitled.bmp" width="296" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இதுதான் பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பிரிய தோழியே! ஆயிரம் யானைகள்(வாரணம்) சூழ்ந்துவர வீதிகளில் நாராயணன் ஊர்வலமாக வருகின்றான். இதை அறிந்து அவனைக்காணவும் வணங்கவும் ஒவ்வொரு வீடுகளும் பூரணபொன்கும்பங்களாலும்(நீர் நிறைந்த பொன்குடங்கள்) தோரணங்கள் கட்டியும் அலங்கரிக்கப்படுவதை நான் கனவில் அனுபவித்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாரணம் என்றால்யானை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பன்மையில் சொல்லவேண்டுமானால் யானைகள்.,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடலில் வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் (,யாப்பிற்காக எண் வழுவமைதி) ஆயிரம் சூழ வலம் செய்து, என்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே&lt;br /&gt;எனும் திரைப்பாடல் நினவுக்கு வருகிறதா?&lt;br /&gt;&amp;nbsp;ஒவ்வொரு கதவாய் தட்டினான் மன்னன்&lt;br /&gt;என்பது சரியா ஒவ்வொரு கதவுகளாய் தட்டினான் மன்னன் என்பது சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி அதை விடுங்கள்!&lt;br /&gt;இந்தப்பாடலைப்பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாரணநம்பி ( சிறந்த கல்யாண குணங்களை உடைய நாரணன்) எதிரில்நடக்கின்றான் &lt;br /&gt;&lt;br /&gt;(எனவே எதிர்கொண்டழைக்க)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீர் நிறைந்த தங்கக்குடங்களை பூரண கலசங்களாய்வைத்தபடி அவ்னை வணங்க மக்கள் காத்திருக்க,&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் அலங்காரத் தோரணம் நட்டிருப்பதாக கனவுகண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழீ ( தோழியின் மீதான விழிப்பு தோழீ) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஆண்டாள் சொல்வதாக பாடல் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாளின் அறிவுக்கூர்மைதான் வாரணம் , அதுவும் ஆயிரம் வாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பெருகிய அறிவுக்களம். (யானை அறிவுக்கு உருவகம், விலங்குகளின் நல்ல அறிவுடையது யானை) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியெங்கும் விரிகிறது. அவள்பார்வை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விரிதலின் முடிவு ( இதற்கு உருவகம் நாரணன் நம்பி) உணர்வுகளுக்கு அருகிலேயே,எதிரிலேயே உள்ள தளத்தில், ஆனால் அந்தத் தளமும் இயங்கிக்கொண்டேயுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேரானந்தவெளியில் அகமிருக்க, அவள் புறமெங்கும் வெளியாய், ஆனந்தம் விரிகிறது.புறத்திலும் ஆனந்த வெள்ளம்!&lt;br /&gt;&lt;br /&gt;எதிரில் மனம் கவர்ந்த மதுசூதனன் வருகின்றான். ஆனந்த எல்லை அது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தன் அனுபவத்தைசொல்லெடுத்து சேர்த்து வார்த்தைகளாக்கி சொல்லவேண்டியதால் - வார்த்தைகளின் உட்பொருளாய்-மனக்கண்ணின் தரிசனமாய்- அவளுடைய கனவுக்காதலை தோழியிடம் சொன்னாள் என்பது நேரடிப் பொருளானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள் உலாவிய தளங்கள் வித்தியாசமானவை. அதில் அவள் பெற்ற அனுபவங்கள் வித்தியாசமானவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகத்தின் ஆனந்தமே புறத்தில்பேரானந்தமாக அதன் பூரணத்தை அலங்காரத்தோரணங்களான வார்த்தைகள் வழியாக தோழியிடம் கூறுவதாக நம் கற்பனையும் விரிகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-1253704727186013093?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/1253704727186013093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=1253704727186013093&amp;isPopup=true' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/1253704727186013093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/1253704727186013093'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/12/blog-post_22.html' title='வாரணம் ஆயிரம்!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-D76u1B3_R80/TvNaXnFViYI/AAAAAAAAA2o/GLio1U8xRK8/s72-c/elephantdecor.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-6533923016998904967</id><published>2011-12-16T06:49:00.001+05:30</published><updated>2011-12-16T23:15:41.703+05:30</updated><title type='text'>மார்கழித் திங்கள் அல்லவா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர். எண்ணிக்கைகளுள் வேர்போன்றது என்பது இந்த சொல்லின் பெயர். மற்ற எண்களுக்கு இல்லாத மகிமை இந்த எண்ணுக்கு உண்டு. இந்த எண்ணின் பெருக்கலினால் கிடைக்கும் எண்களை மேலும் கீழுமாய் வைத்துக்கூட்டினால் ஒன்பது என்னும் மூலாதார எண் வந்துவிடும்.அதனால் நவம் எனும் ஒன்பதிற்கு சிறப்பு அதிகம் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-DD9xDhFPSdk/TuqYqM0ZEJI/AAAAAAAAA1o/jk2Lt5EYoK8/s1600/p75a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" oda="true" src="http://2.bp.blogspot.com/-DD9xDhFPSdk/TuqYqM0ZEJI/AAAAAAAAA1o/jk2Lt5EYoK8/s1600/p75a.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தமிழ்மாதங்கள் பன்னிரண்டில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது மார்கழிமாதம். எண்களில் ஒன்பதிற்கு எப்போதுமே பெரும் சிறப்பு உண்டு. நவராத்திரி நவரத்தினம் நவக்ரஹங்கள் இப்படி பலப்பல. மும்மதங்களுக்கும சிறப்பு இறைவழிபாட்டு மாதமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாதங்களில் நான் மார்கழி என்றார் க்ருஷ்ணபகவான்.கண்ணன் மேல் கொண்ட பக்தியில் அவருக்கு&amp;nbsp; தாசனான கண்ணதாசனும் மாதங்களில் அவள் மார்கழி என்று பெண்ணை சிறப்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-34WJWLyBkUM/TuqbD1MAH9I/AAAAAAAAA2Q/C3pBcxQg8d4/s1600/16vm10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" oda="true" src="http://4.bp.blogspot.com/-34WJWLyBkUM/TuqbD1MAH9I/AAAAAAAAA2Q/C3pBcxQg8d4/s320/16vm10.jpg" width="240px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;திருவரங்கத் திருநகரத்திற்கும் அருகே உள்ள&amp;nbsp;&amp;nbsp;ஆனைக்கா நகருக்கும்&amp;nbsp;மார்கழியில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வருவார்கள். இவ்விடங்களில்&lt;br /&gt;திருப்பாவையும் திருவெம்பாவையும்&amp;nbsp; ஒலித்துக்கொண்டே இருக்கும்.&lt;br /&gt;ஊரே விழாக்கோலம் கொண்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழிமாதத்தில் மட்டும் திருவரங்கம் கோயிலில் விஸ்வரூப தரிசனம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழியில் மட்டும் அனந்தசயனத்திலிருக்கும் பெருமாளுக்குத் துயில் எழுப்ப வேண்டி அதிகாலை முன்றரை மணிக்கே திருப்பள்ளியெழுச்சிப்பாடல்களாக ஆண்டாள் பாசுரங்களைப்பாடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி உற்சவக்காலத்தில்அரையர் சேவையில் நாலாயிரதிவ்யப்ரபந்தப்பாடல்கள் அபிநநயத்துடன் அரங்கேற அதை அரங்கன் செவிமடுத்துக்கேட்பது கண்கொள்ளாகாட்சியாகும். தமிழுக்குப் பெருமையும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உற்சவதினத்தின் எட்டாம் நாள் அரங்கர் குதிரைவாகனத்தில் கோயிலின் கிழக்குப்பகுதியில் இருக்கும் மணல் வெளிக்கு வருகை தருவார். அங்கு நடைபெறும் நிகழ்வுக்கு வேடுபரி என்று பெயர். அப்போது முத்தரையர் இன மக்களுக்கு கோயிலில் மரியாதை செய்யப்படுகிறது. வருடத்தின் ஒவ்வொரு உற்சவ காலங்களிலும் இதுபோல ஒவ்வொரு சாதியினருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலில்&amp;nbsp; மரியாதை செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழிமாதத்தில்மட்டுமே கோயிலில் சம்பாரதோசையும், செல்வரப்பமும் கூடுதல் பிரசாதங்களாய் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்பெற்றுக்கொள்ள பக்தர்கள் ஆவலுடன் காத்துநிற்பார்கள். இவைகளின் மணமும் சுவையும் அலாதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-f5aiaan_fq4/TuqZDGz-j-I/AAAAAAAAA14/Ujg5OZx3At4/s1600/andal2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" oda="true" src="http://2.bp.blogspot.com/-f5aiaan_fq4/TuqZDGz-j-I/AAAAAAAAA14/Ujg5OZx3At4/s1600/andal2.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் இன்று இப்படி முதல்வரியோடு திருப்பாவை பாடிய ஆண்டாளின்&amp;nbsp; இன்னொரு பாடலைப்பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;’கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே!’&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கற்பூரம் என்றால் மகா விஷ்ணுவுக்கு உகந்த பச்சை கற்பூரம். &lt;br /&gt;&lt;br /&gt;கமலப்பூஎன்றால் கமலப்பூ தான்.கமலம் என்றால் தாமரை.&lt;br /&gt;&lt;br /&gt;பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம்சந்தேகம் கேட்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்! &lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாளின் திருவாய்மொழியில் நட்சத்திர அந்தஸ்து கொண்டபாடல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாவை முப்பதும் பாடும் போது ஆண்டாள் சிறுமியாய் இருந்திருக்கவேண்டும்&amp;nbsp; செல்வச்சிறுமீர்காள்&amp;nbsp; என்பாள் தனது தோழிகளை ஆனால்&amp;nbsp; கற்பூரம் நாறுமோ பாடலின்போது அவள் பருவ மங்கையாக இருந்திருக்கவேண்டும் அந்தப்பருவத்தில் மனத்தில் தோன்றுவதை அந்த காலத்தில் ஒரு பெண் இப்படி துணிவோடு கேட்கிறாள் என்றால் ஆண்டாள் எப்படிப்பட்ட புரட்சிப்பெண்ணாக இருந்திருப்பாள்?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே! ' என்று எல்லோரும் வாழ்த்தியிருந்தும் அவளுடைய நாச்சியார் திருமொழி பரவலாகக் கொண்டு செல்லப்படவில்லை.நாச்சியார் திருமொழியில் மொத்தம் நூற்று நாற்பத்து மூன்று பாடல்கள்.அதைக் குறிப்பிட்டு வாழ்த்தியபோது திருப்பாவை என்ற ஒன்றை அவள் செய்ததே மறந்துவிட்டது பரவசப்பட்ட பாவலருக்கு.அதனால் தான் 143 மட்டுமே அவள் செய்தது என்று சொல்லிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-KcIPb5YcO0Q/TuqaIpLazKI/AAAAAAAAA2A/Ur9Nup9fQ9U/s1600/shy_krishna_conch.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="214px" oda="true" src="http://2.bp.blogspot.com/-KcIPb5YcO0Q/TuqaIpLazKI/AAAAAAAAA2A/Ur9Nup9fQ9U/s320/shy_krishna_conch.jpg" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஏழாம் திருமொழியில் 'கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச்செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ என்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்&lt;br /&gt;&lt;br /&gt;கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே&lt;br /&gt;&lt;br /&gt;பெண்படையருன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் '&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று காதலன் கையிலிருக்கும் பொருளிடம் அவன் அணுக்கத்துக்குப் பொறாமை தெரிவித்துப் பாடுவதில் 'வாயமுதம் ' என்கிற பதத்தில் ஒலிக்கிற வேட்கையை &lt;br /&gt;கொள்கிறாள் ஆண்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;மானிடவர் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துணிந்து பாடிய ஆண்டாள் அந்த நாளிலேயே தோன்றிய ஒரு பெண் நவீனகவிஞர்!&lt;br /&gt;&lt;br /&gt;காதல் என்று வந்து விட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல் தானே பெரிய புனிதம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதைகள் எப்போதும் சுவாரசியமானவைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆண்டாள் விஷயத்தில் கதையைவிட அவளது பாடல்கள் ரொம்ப சுவாரசியமானது,சுவையானது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு இலக்கியத்தின் பின்னும் அதை எழுதியவன் மறைந்து நிற்கிறான் என்கிறார் ஹட்ஸன்.( ...behind the every book that is writer lies the Personality of man who wrote it.... =Hudson .."An introduction to the study of literature" அவ்வாறே ஆண்டாளின் ஒவ்வொரு பாடலுக்குப்பின்னும் அவளது மனநிலை மறைந்திருக்கும்.! &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதி நவீன சங்கதிகளை மட்டும் தான் அவள் தன் பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு சாட்சி இந்தப்பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாளுக்கு, அவளது காதலனான மாலவன் உதட்டில் முத்தமிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'செய்ய வாய் ஐயோ என்னைசிந்தை கவர்ந்ததுவே' என்று அமலனாதிபிரானே அலறி இருக்கும்போது ஆண்டாள் எம்மாத்திரம்?&lt;br /&gt;&lt;br /&gt;யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது. அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதை வைத்து தானே எப்போதும் வாயில் வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவை தெரிந்திருக்குமே!(புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை?&amp;nbsp; அதைப்பிறகு பார்க்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;{சரி பெரியபிராட்டியிடம் கேட்கலாமா என நினைக்கிறாள். திருப்பாவையிலேயே "மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய் காண்" என்று விரட்டியவள் ஆண்டாள்.இப்போதும் அவளிடம்போய்"என் பிரியக்காதலனின்உன் அருமைக்கணவனின் சிவந்த அதரசுவை எப்ப்டியம்மா இருக்கும்?" எனக்கேட்டால் சக்களத்தி சண்டைக்கு வரமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?}&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் சங்கிடம் கேட்டுவிடுவதே நல்லது எதுக்கு வம்பு என நினைக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;புல்லாங்குழலை ஏன் கேட்கவில்லை தெரியுமா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணர் மருதம்சாய்த்து ஈர்த்தான் கரத்தில் இருந்ததாம் சங்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அதனால் புல்லாங்குழல் பிறகுதான்.புல்&amp;nbsp; &lt;strong&gt;லாங்&lt;/strong&gt;&amp;nbsp; கா இருந்தாலும் சிக்கென்ற சங்கு மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது!&lt;br /&gt;&lt;br /&gt;சக்கரமானது பகைவரை அழிப்பதற்காக அவ்வப்போது பகவானின் கையை விட்டு நீங்கி, தன் செயலை முடித்து, மீண்டு வந்து பகவானின் கையைச் சேரும். இப்படி, கண நாழிகை நேரமேனும் பகவானை விட்டு நீங்கியிருக்கும்படி நேர்கிறது சக்கரத்துக்கு. ஆனால், சங்கின் நிலை அப்படி அல்ல. அது, பகவானின் கையை விட்டு எப்போதும் நீங்காதது. எந்த நேரமும் பகவானின் கையிலேயே இருக்கும். 'அகலகில்லேன் நிறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்' என்று நம்மாழ்வார் பாடியபடி, பரந்தாமன் மார்பிலிருந்து அகலாமல் எப்படி மகாலட்சுமி உறைகிறாளோ அப்படி, ஒரு நொடிப்பொழுதும் பகவானின் கரத்தை விட்டு நீங்காத வரம் பெற்றது வெண்சங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பாஞ்சஜன்யப் பெருஞ் சங்கம், இன்னொரு பேறும் பெற்றது. எதிரிகளைக் கலங்கடிக்க, இந்த சங்கத்தினை தன் வாயில் வைத்து ஊதி, பேரொலி எழச் செய்வான் கண்ணன். இப்படி, கண்ணனின் திருப் பவளச் செவ்வாயில் படும் பேற்றினைப் பெற்றது, வெண்சங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாயமுதம் கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே என,&lt;br /&gt;&lt;br /&gt;ஊனும் உறக்கமும் இந்த சங்குக்காரருக்கு அவன் இதழ் மீதே இருப்பதால் சங்கே ...ஐயா&amp;nbsp; சங்கையாவே... பெரியவர்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள்&amp;nbsp; புத்திசாலிப்பெண் அல்லவா அதனால்தான், பெரிதினும் பெரிது கேட்டிருக்கிறாள்!&lt;br /&gt;&lt;br /&gt;(மார்கழியில்&amp;nbsp; மேலும் ஆண்டாளை வாரணம் ஆயிரம் சூழ&amp;nbsp; கொண்டுவருவோம்!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-6533923016998904967?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/6533923016998904967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=6533923016998904967&amp;isPopup=true' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/6533923016998904967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/6533923016998904967'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/12/blog-post_16.html' title='மார்கழித் திங்கள் அல்லவா?'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-DD9xDhFPSdk/TuqYqM0ZEJI/AAAAAAAAA1o/jk2Lt5EYoK8/s72-c/p75a.jpg' height='72' width='72'/><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-5634197115389453552</id><published>2011-12-14T19:38:00.001+05:30</published><updated>2011-12-14T23:37:30.792+05:30</updated><title type='text'>வானும் கடலும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;மேகத்திரள்கள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுகின்ற அலைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திரங்களோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-4EpxJDQ1XPw/TujlbCvKhGI/AAAAAAAAA1g/sob8PMh8qPI/s1600/sky.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="312px" oda="true" src="http://1.bp.blogspot.com/-4EpxJDQ1XPw/TujlbCvKhGI/AAAAAAAAA1g/sob8PMh8qPI/s400/sky.jpg" width="400px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஆழ்கடல்முத்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறைநிலாதான்&lt;br /&gt;&lt;br /&gt;கவிழும் படகு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாயம் இழக்கா&lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திர வர்ணம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைகீழ்கடல்தான்&lt;br /&gt;&lt;br /&gt;இரவுவானம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-zQawQrOEBSI/TuitacC3EvI/AAAAAAAAA1Y/pHw-kt9-Vlg/s1600/night_sky1280.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="512px" oda="true" src="http://3.bp.blogspot.com/-zQawQrOEBSI/TuitacC3EvI/AAAAAAAAA1Y/pHw-kt9-Vlg/s640/night_sky1280.jpg" width="640px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-5634197115389453552?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/5634197115389453552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=5634197115389453552&amp;isPopup=true' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/5634197115389453552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/5634197115389453552'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/12/blog-post_14.html' title='வானும் கடலும்!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-4EpxJDQ1XPw/TujlbCvKhGI/AAAAAAAAA1g/sob8PMh8qPI/s72-c/sky.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-1700008493586751388</id><published>2011-12-10T19:48:00.000+05:30</published><updated>2011-12-10T19:48:05.384+05:30</updated><title type='text'>பாரதி நீ இன்றிருந்தால்..?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-6I3wtL9KWQM/TuNntQCRhWI/AAAAAAAAA0Q/1OBGQ-fb8Vo/s1600/manathil-uruthi-bharathiar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="373px" mda="true" src="http://4.bp.blogspot.com/-6I3wtL9KWQM/TuNntQCRhWI/AAAAAAAAA0Q/1OBGQ-fb8Vo/s400/manathil-uruthi-bharathiar.jpg" width="400px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பாரதி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ இன்றிருந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வாய்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேமதுரத்தமிழோசையினை &lt;br /&gt;&lt;br /&gt;உலகமெலாம் பரவச்செய்ய வேண்டும் என்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தொலைக்காட்சிகளில்&lt;br /&gt;&lt;br /&gt;தடுமாறும் தமிழினைக்கேட்டுவிட்டால்&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப்பார்க்காமல் போய்விடுவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியின் கவிதைத்தோட்டத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதிபத்தியக்கழுகுகள்&lt;br /&gt;&lt;br /&gt;அமர்ந்து ஆட்சிஒலியை இசைத்தாலும்&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றில் ஒன்றால்கூட&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப்போல் &lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மாவைத்தொடமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கந்தல்கோட்டணிந்தகவிஞனே&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;&lt;br /&gt;பாரதவீணையின்&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரத்தந்திகளைப்&lt;br /&gt;&lt;br /&gt;பாழாக்கிய வெள்ளைக்கரங்களை&lt;br /&gt;&lt;br /&gt;எரிமலை எழுதுகோலால்&lt;br /&gt;&lt;br /&gt;தகர்த்து எறிந்தவன்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அந்த நல்லதோர் வீணையில்&lt;br /&gt;&lt;br /&gt;நலிந்துகிடக்கின்ற&lt;br /&gt;&lt;br /&gt;ஊழல் புழுதிகளைக்கண்டால்&lt;br /&gt;&lt;br /&gt;உன் நாடிநரம்புகள் துடிக்குமையா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணியமுடிதல்வேண்டும் என்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’என்றும் அதுபகல்கனவு’ என &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாக்கியம் அமைத்திருப்பாய்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் யாரும் இங்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-_hOB5gayf8I/TuNoE2JT6WI/AAAAAAAAA0Y/pqsGDFunzWI/s1600/bharathi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" mda="true" src="http://3.bp.blogspot.com/-_hOB5gayf8I/TuNoE2JT6WI/AAAAAAAAA0Y/pqsGDFunzWI/s320/bharathi.jpg" width="235px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;எண்ணுவதே இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வணங்குதல் என்போம் என்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்தே மாதரம் என்பது&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;‘வந்து ஏமாத்தறோம்’ அல்லது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்து மாத்தறோம்(ஆட்சியை)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;என்றாகிவிட்டதை அறிவாயா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம்கிடைக்குமுன்னே&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாய்&lt;br /&gt;&lt;br /&gt;களி நடனம்புரிந்தாயே!&lt;br /&gt;&lt;br /&gt;வா பாரதி,வந்து எங்கள் சட்டசபைக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;பார்வைக் கணைகளைஓடவிடு.&lt;br /&gt;&lt;br /&gt;கூச்சல் இரைச்சல் கொட்டாவி குழப்பம்&lt;br /&gt;&lt;br /&gt;சிலநேரம் கைகலப்பு&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்ற வெளிநடப்பு &lt;br /&gt;&lt;br /&gt;இவைகளோடு முன்னெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;பாதரட்சை கூட பறந்திருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் இந்நாட்டுமன்னர் என்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாண்டுக்கு ஒருமுறை&lt;br /&gt;&lt;br /&gt;வாக்குச்சாவடியில்மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் மன்னர்கள்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டுகேட்கும்போது&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிகளின் ஒத்திகைக்கே&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்கார்விருதுகொடுக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் நாடகத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சை எடுப்பதுபோல கைகுவிப்பார்,&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;எங்கள் முன்னே!&lt;br /&gt;&lt;br /&gt;இச்சையாய் அவருக்குப்&amp;nbsp;பதவி &lt;br /&gt;&lt;br /&gt;கிடைத்தபின் நன்கு குவிப்பார் பொன்னே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்&lt;br /&gt;&lt;br /&gt;.. ஜன்மம்இத்தேசத்தில் எய்தின ராயின்&lt;br /&gt;&lt;br /&gt;வேதிய ராயினும் ஒன்றே - அன்றி&lt;br /&gt;&lt;br /&gt;.. வேறு குலத்தின ராயினும் ஒன்றே’ &lt;br /&gt;&lt;br /&gt;என்றஎங்கள் பாரதியே!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இன்றைய அரசியல்வாதிகளோ&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதி-மதங்களைப் பார்ப்பார் ! - அதைச்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சாற்றியே தேர்தலில் வெற்றியைச் சேர்ப்பார்!&lt;br /&gt;&lt;br /&gt;நித்தம் மாறுவார்&amp;nbsp;கட்சி! - அதில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-dBM6YETK_Ps/TuNoPsCRMmI/AAAAAAAAA0g/Mm_GBZX1v_0/s1600/220px-Subramanya_Bharathi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" mda="true" src="http://2.bp.blogspot.com/-dBM6YETK_Ps/TuNoPsCRMmI/AAAAAAAAA0g/Mm_GBZX1v_0/s1600/220px-Subramanya_Bharathi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;.. நேர்த்தியாய் செய்வார்புரட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிச்சாலைகள் செய்வோம் என்றாயே பாரதி!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று&lt;br /&gt;&lt;br /&gt;கல்விச்சாலையிலெல்லாம்&amp;nbsp;பணம் தான் ஆட்சி&lt;br /&gt;&lt;br /&gt;.கையில் &amp;nbsp;காசிருந் தால்தான்&amp;nbsp; மனிதனுக்கு&amp;nbsp;மாட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்&lt;br /&gt;&lt;br /&gt;திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால் &lt;br /&gt;&lt;br /&gt;செம்மை மாதர் திறம்புவதில்லையாம்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;என்றுபுதுமைப்பெண்களை நிலைநிறுத்தினாய்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாரதி நீ&lt;br /&gt;&lt;br /&gt;விருப்பியதுஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;ஆனல் இன்றுநடப்பதே &lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களில்&lt;br /&gt;&lt;br /&gt;வேறொன்று!&lt;br /&gt;&lt;br /&gt;உடைகளில்மட்டும் &lt;br /&gt;&lt;br /&gt;புதுமை செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;சிலபெண்களைக்கண்டால்&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கி எழுந்திடுவாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எட்டயபுரத்து முண்டாசுக்கவிஞனே&lt;br /&gt;&lt;br /&gt;நீ ஒருதீர்க்கதரிசி!&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மாவிலிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;ஆகாயத்திற்கு விடியல்களை&lt;br /&gt;&lt;br /&gt;வினியோகித்தவன்!&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் சிங்களத்தீவினுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;பாலம்அமைக்கச்சொன்னாய்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இலங்கைத்தீவின்&lt;br /&gt;&lt;br /&gt;எம்இன மக்களுக்காய் &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீர் வடித்தபடி&lt;br /&gt;&lt;br /&gt;மனத்தாலேயே ஒரு&lt;br /&gt;&lt;br /&gt;துயரப்பாலம் கட்டிவருகிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே - நம்மில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே&lt;br /&gt;&lt;br /&gt;நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த&lt;br /&gt;&lt;br /&gt;ஞானம் வந்தால் பின்நமக் கெது வேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;என்று நீ பாடினாய்&lt;br /&gt;&lt;br /&gt;ஞானம் இன்னும் வராததால்&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுக்கும் நதிக்குமாய்&lt;br /&gt;&lt;br /&gt;அடித்துக்கொள்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிதைக்கண்டால்&lt;br /&gt;&lt;br /&gt;உன் கண்கள்தான் கடலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இன்றுசென்று விடு&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;என்றாவது&lt;br /&gt;&lt;br /&gt;அன்பினால் பாரதம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றாகி ஒற்றுமையாய்&lt;br /&gt;&lt;br /&gt;வென்று உயரும்போது&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டு(ம்)&amp;nbsp; வா பாரதி!&lt;br /&gt;****************************&lt;br /&gt;&lt;br /&gt;(டிசம்பர்11..மகாகவியின் பிறந்தநாளுக்கு கவிதை சமர்ப்பணம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-1700008493586751388?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/1700008493586751388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=1700008493586751388&amp;isPopup=true' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/1700008493586751388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/1700008493586751388'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/12/blog-post_10.html' title='பாரதி நீ இன்றிருந்தால்..?'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-6I3wtL9KWQM/TuNntQCRhWI/AAAAAAAAA0Q/1OBGQ-fb8Vo/s72-c/manathil-uruthi-bharathiar.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-5663497630689409549</id><published>2011-12-08T00:58:00.001+05:30</published><updated>2011-12-08T05:38:02.444+05:30</updated><title type='text'>அரங்கபவன்.(சிறுகதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நீண்ட நாளாய் ஓர் ஆசை. சொன்னால் சிரிப்பீர்கள். அதனாலேயே மனைவி, மகனிடமும் ’தெற்கு வாசல்’ வரை போய் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பி வந்து விட்டேன். ஏனென்றால் நீங்களெல்லாம் என் ஆசை என்னவென்று கூறிச் சிரித்துவிட்டுப் போய் விடுவீர்கள். ஆனால், என் மனைவி ஆனந்தியும் மகன் பரத்தும் மானம் போய்விட்ட மாதிரி கூச்சல் போடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“உங்கப்பாக்கு&amp;nbsp; புத்தி கெட்டுப் போயிடுத்துடா பரத்! ஊர் சுத்திப் பாக்க வந்த இடத்தில் இவர் ஆசையைப் பாரேன். கர்மம், கர்மம்!’’ என்று கண்டிப்பாய் தன் ’டை’ அடித்த தலையில் ஓங்கி கையை வைத்து அடித்துக்கொள்வாள்&lt;br /&gt;&lt;br /&gt;பரத், “டாட்! இட்ஸ் டூ மச். ஒரு ஸாப்ட்வேர் நிறுவனத்தில் பெரிய பதவியில இருக்கற எனக்கு, அப்பாவா லட்சணமா நடந்துக்குங்க, ப்ளீஸ்’ என்று அதட்டலுடன் கெஞ்சுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாய் நான் பொய் சொல்பவனல்லன்.&amp;nbsp;&amp;nbsp;இன்றைக்குத்தான் மனைவி, மகனிடம் ’பொய்’ சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டேன். என்ன செய்வது? சில நேரங்களில் ’உண்மை’யை ஒதுக்கத்தான் வேண்டியிருக்கிறது, சில நன்மைகளின் பொருட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாம்பலத்திற்கு ரங்கநாதன் தெரு போல ஸ்ரீரங்கத்திற்கு தெற்கு வாசல், ஏறக்குறைய நூறு கடைகள் இருக்கலாம். நீண்ட தெரு. ராஜ கோபுரத்தின் வாயிலில் ஆரம்பமாகி, இடையில் இரண்டு நான்கு கால்மண்டபங்கள் இரண்டு கோபுரங்கள் என்று பெரிய கோயில் வாசலோடு தெரு முடிவடைந்துவிடும். அரை கிலோ மீட்டர் தான் மொத்தத் தெருவுமே. இதற்குத் ’தெற்கு வாசல்’ என்று பெயர்.&amp;nbsp; அப்போது&amp;nbsp;இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில கடைகள் மட்டுமே காலத்திற்கு ஏற்ற மாதிரி சற்றுக் கோலம் மாறி நாகரிகமாய்க் காட்சியளிக்கின்றன. மொட்டை கோபுரம், ராசக் கோபுரமானதும் ஊருக்கே மவுசு அதிகமாகித்தான்விட்டது. முன்பு ஜனத்திரள் இத்தனை இல்லை. தெற்கு வாசலில் கையை வீசிக்கொண்டு காலாற நடக்கலாம். சைக்கிள் ரிக்ஷாக்கள்தாம் இடித்துக்கொண்டு போகிற மாதிரி வரும். இப்போது நிறைய ஆட்டோக்களும் சொற்பக் கார்களும் வலம் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’சுந்தரா லஞ்சு ஹோம்’ என்ற ஹோட்டல் கோபுரத்தடியில் அந்த நாளில் புகழ் பெற்றது. நானும் பட்டாபியும் காலை நேரத்தில் இங்கு வந்து ஒரு காபி குடிக்காமல் போனதில்லை. இப்போதும் ஹோட்டல் அப்படியேதான் இருக்கிறது, பெயர் மட்டும் மாறிவிட்டது. வாசலில் பெரிய போர்டுவைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’இட்லி, பொங்கல் – கொத்சு, பூரி – கிழங்கு டிபன் ரெடி!’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டை கொட்டையாய் சாக்பீஸினால் எழுதப்பட்ட எழுத்துகளே சாப்பிட்டு விட்டுப் போயேன் என்று சொல்கிற மாதிரி இருந்தது. எனக்கும் காலை நேரப் பசி வேளைதான். ஆனால், என் ஆசையை அல்லது பசியைத் தீர்த்துக்கொள்ள நான் சொல்ல வேண்டிய இடம் இதுவல்லவே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாலை நடுவே நாலுகால் மண்டபம் வருகிறது. அதன் மேல் சின்னதாய் கோபுரம். ஸ்ரீரங்கத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கோபுரம். கால் தடுக்கிற பக்கமெல்லாம் வாய்க்கால்கள். ஆனால், வாய்க்கால்களெல்லாம் வறண்டு கிடப்பது தான் வேதனையாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காவிரியில் கூட நீரைக் காணோம். டவுனிலிருந்து பேருந்தில் வருகிற போது பாலத்தடியில் நூலாய் ஓடிக் கொண்டிருந்தது நீர். அதிலும் நாலு பேர் குளித்து, துணி துவைத்துக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி நாள்களில் ஸ்ரீரங்கத்திலிருந்து டவுனுக்குப் பயணிகள் ரயிலில் வரும்போது ஆடி மாதம் பெருக்கெடுத்தோடும் காவிரியாற்றில், ரயில் பெட்டியிலிருந்து ஒரு முறை தாவிக் குவித்த அனுபவத்தை நினைத்துக்கொள்கிறேன். என் வீர தீர சாகசத்தை பெண்கள் பெட்டி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி ரசித்ததாய் பின்ன்ர் உத்தரவீதி &amp;nbsp;ஜலஜா சொன்னபோது உச்சி குளிர்ந்து போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜலஜா இப்போது எங்கிருக்கிறாளோ? . அந்த நாளில் அவளிடம் ஓர் ஈர்ப்பு இருந்தது வாஸ்தவம். அவளுக்கும் இருந்தது என்பதை அந்த ஓரக்கண் பார்வையும் வெட்கச் சிரிப்பும் தெரிவித்திருக்கின்றன. ஒரே ஊர், ஒரே தெருவாக இருந்தாலும் அந்த நாளில் எல்லாம் வயதுப் பையன்கள், வயசுப் பெண்களிடம் லேசில் பேசி விட முடியாது. கதை கட்டி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைகுண்ட ஏகாதசி கூட்ட நெரிசலில் கோயிலில் என் அருகிலேயே வந்து நிற்க வேண்டி வந்த போது, ஜலஜா மெல்ல என் கை விரல்களை அழுத்தி, “ரங்காச்சு உனக்கு இந்த ஸ்கை ப்ளூ ஷர்ட் நன்னாருக்குடா’’ என்ற போது அந்தக் கணமே அவளை எங்காவது கடத்திக்கொண்டு போகலாம் போல இருந்தது. இப்போதைய நாள்கள் மாதிரி செல்போனா… ஒன்றா, அப்போதெல்லாம் காதல் நெஞ்சங்கள் மனம் விட்டுப் பேசிக்கொள்ள?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல எத்தனையோ காதல் விதைகள் உள்ளே பூமியோடேயே அழுந்திப் போனதுண்டு! விருட்சமானவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தெற்கு வாசல் தெருவில் எங்காவது நரைத்த தலையும், தடித்த மூக்குக் கண்ணாடியுமாய் இடுப்பு பெருத்த ஜலஜா சிக்கமாட்டாளா என்று பார்வை அலைவதைத் தடுக்க முடியவில்லை. என்னை மாதிரி அவளும் ஊர் ஞாபகத்தில் இங்கு வரக்கூடாதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முப்பது வருஷமாச்சு, ஊரை விட்டு வெளியே போய், முதலில் டெல்லி, பிறகு மும்பை, கடைசியில் இப்போது பெங்களூர் வாசம். ஆனந்தியின் ஆணைப்படி ரிடையர் ஆன பணத்தில் பெங்களூரு&amp;nbsp;புறநகர்ப்பகுதியில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஃப்ளாட் வாங்கி குடி போயாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரத்திற்கு மகாத்மா காந்தி சாலையில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணி. பெங்களூரு டிராபிக் ஜாமில் தன் கார் அடிக்கடி மாட்டிக்கொள்வதாக பரத் அன்றாடம் வந்து புலம்புவான். இப்போது சேர்ந்தாற்போல் நாலு நாள் லீவு கிடைக்கவும் ஆனந்தியின் அரை மனச் சம்மதத்திற்குப் பிறகு திருச்சி டூர் போடப்பட்டது. இன்று விடியற்காலை டவுனில் இறங்கி, பிரபல ஹோட்டல் ஒன்றில் அறையெடுத்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு மணிக்கெல்லாம் நான் டவுனில் ஒன்றாம் எண் பேருந்தைப் பிடித்து ஸ்ரீரங்கத்துக்கு வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதோ இன்னும் ஐந்து நிமிடத்தில் நான் ஆசைப்பட்ட இடத்திற்குப் போய்விடலாம். அதற்குள் பழைய நண்பர்கள் கிச்சு, ரங்கமணி, பட்டாபி, வேணு என்று யாராவது ஒருவராவது கிடைக்க மாட்டார்களா என மனம் ஏங்கியது. முப்பது வருஷத்தில் அவர்கள் எத்தனை முறை ஸ்ரீரங்கம் வந்தார்களோ, நான்தான் பல முறைகள் இங்கு வர முயன்றும் தட்டிப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கோயில் போய் ரங்க தரிசனம் முடித்து வரலாமா? அதற்குள் நான் போக வேண்டிய இடத்தில் பூட்டுப் போட்டுவிட்டால்…?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருமாள் ஒன்றும் நினைத்துக்கொள்ள மாட்டார். அவரிடம் என் ஆசை நினைவுகளோடு போய் அசிங்கமாய் நிற்பதைவிட, அதைத் தீர்த்துக்கொண்டு செல்வதே உத்தமம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாத்திரக் கடைகள், மளிகைக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள், இனிப்புக் கடைகள், ஜவுளிக் கடைகளைக் கடந்து, பாதாள கிருஷ்ணன் கோயிலையும் தாண்டி விட்டேன். பூத்தட்டு (ரங்கநாதர்கோயிலில் தேங்காய் உடைக்கமாட்டார்கள்.பள்ளிகொண்டபெருமானின் உரக்கம் கலைந்துவிடும் என்று) விற்கும் கடையில் கீழ்த்தட்டில் நாலடிக்கு நாலடியில் கம்பிக்கூண்டு ஒன்று இருக்கும் அதில் புனுகுப்பூனை ஒன்று கேட் வாக் செய்தபடி இருக்கும், இப்போது அதைக்காணவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கடைக்கு வலப்புறமாயிருக்கிற அந்த இடத்திற்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை அந்த இடம் மாறவில்லை. தெற்கு வாசலின் பரபரப்பான சூழ்நிலையில் அமைதியான அந்த இடம் ரொம்பப் பெரியதில்லை; சிறு வீடு போலத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் சோகையாய் ஒரு பலகை. அதில் ’அரங்க பவன்’ என்று எழுதியிருக்கும். உற்றுப் பார்த்தாலே தவிர, அந்தப் பெயர்ப் பலகை பலர் பார்வைக்குத் தெரிய வராது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் அதே பலகைதான். இன்னமும் மரம் உளுத்துப் போய் எந்நேரமும் உடைந்து விழத் தயாராய் இருக்கிறது. அழுக்குத் தரையில் மிதியடியாக ஒரு கோணிப்பை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செருப்பைக் கழற்றிவிட்டு பாதம் தட்டி உள்ளே நுழைந்தால் வராண்டாவில் சிறு மேஜையும் நாற்காலியும், மேஜையின் இழுப்பறைதான் கல்லாப்பெட்டி. இப்போதும் அதை மேஜை, அதே நாற்காலி! மேஜை மீது கண்ணாடிச் சட்டத்திற்குள் ரத்ன அங்கியில் ரங்கநாதர். ஊதுபத்திப் புகை, பருவப் பெண்ணாய் நெளிந்து போய்க் கொண்டிருந்தது. கல்லாப் பெட்டியைத் திறந்தபடி நாற்காலியில்…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாற்காலியில் உட்கார்ந்திருப்பவரைக் கண்டதும் என் விழிகள் திகைப்பில் விரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-9GFscgNsGgE/Tt-9p6rIs7I/AAAAAAAAA0I/MU_-r_rNU2Q/s1600/Filter_Coffee.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300px" mda="true" src="http://4.bp.blogspot.com/-9GFscgNsGgE/Tt-9p6rIs7I/AAAAAAAAA0I/MU_-r_rNU2Q/s400/Filter_Coffee.jpg" width="400px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வாய் குதூகலமாய் கூச்சலிட்டது… “பாண்டு மாமா!’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நரைத்த தாடியை நீவிவிட்டபடி கண்ணை இடுக்கிக்கொண்டு நிமிர்ந்தார் பாண்டுரங்கன். அந்த அரங்க பவன் ஹோட்டலின் உரிமையாளர். இப்போது பாண்டு மாமாவுக்கு எழுபது வயதிருக்குமா? இருக்கும்… இருக்கும். என்னை நினைவிருக்கிறதோ, இல்லையோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“மாமா! நான்தான் ரங்காச்சூ! வடக்குச் சித்திரை வீதி ஆராவமுதன் பையன். சின்ன வயசிலேந்து என் இருபத்தி ஒன்பதாவது வயசு வரை தினம் உங்க ஹோட்டலில்தான் ரவா தோசை சாப்பிட வருவேன். உங்காத்து மாமிகூட என்னை ’ரவா தோசை ரங்காச்சு’ன்னு செல்லமாக் கூப்பிடுவாளே…?’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியா! நேக்கு நெனவில்லை. யாராரோ வரா…. போறா… வயசு வேற ஆறது…. ஒண்ணும் நெனவுல இருக்கறதில்ல…’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“முப்பது வருஷம் கழிச்சு உங்க ஹோட்டல் ரவா தொசையை சாப்பிட வந்திருக்கேன், மாமா!’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஓஹோ?’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டு மாமாவின் சுபாவம் இதுதான். ’வந்தா வா, போனாப் போ’தான். மாமா மாறவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டலுக்குள் போனேன். ஒரே இருட்டுக் கூடம். அதே இருபத்தி ஐந்து வாட்ஸ் பல்புதான். இன்றைக்கும். ஒரு ட்யூப் லைட் போட மாட்டாரோ? அந்தச் சின்னக் கூடத்தில் முன்பு இருந்த மாதிரி அதே ஆஸ்பத்திரி பெஞ்சும், அதையொட்டிய நீள மர மேஜையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூடத்தைத் தாண்டினால் சமையற்கட்டு. முன்பு அங்கு ஒரே புகை மண்டலமாய்த் தெரியும். இப்போது அது இல்லை. காஸ் அடுப்பு வைத்துக்கொண்டு விட்டார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளை, இல்லாவிட்டால் புகையில் மாமிதான் வெந்து நொந்து போயிருப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், எங்கே மாமியைக் காணோம் என நினைக்கும்போதே ’லொக் லொக்’ என்ற இருமல் சப்தம் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மடிசார் புடவையுடன் மாமி எதிரே வந்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“மா… மாமீ? நான் ரங்காச்சு வந்திருக்கேன். ரவா தோசை ரங்காச்சுன்னு சொல்வேளே… ஞாயகமிருக்கா?’’ என்றேன் ஆர்வமாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாமி தனது தேசல் உடம்பை லேசாய் நிமிர்த்தி சின்ன சிரிப்புடன், “வாப்பா… ஊரையே மறந்து போய்ட்டியா, இப்பதான் வரே… நன்னாயிருக்கியா?’’ என்று கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“உங்க ஆசீர்வாதம் மாமி ஷேமமா இருக்கேன். நீங்க எப்படி இருக்கேள்? உங்க பொண்ணு செஞ்சி லட்சுமிக்கு கல்யாணம் ஆகி &amp;nbsp;அவ இப்ப பாட்டிகூட ஆகியிருப்பாளே?&amp;nbsp; சின்னவ ஸ்ரீவரமங்கை எங்கே இருக்கா? உங்க கடைசிப் பையன் தேசிகன் எங்கே வேலை பார்க்கறான்?’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுக்கடுக்காய் நான் கேட்ட கேள்விகளுக்கு மௌனமே பதிலாக வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“மா… மீ?’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஒண்ணும் சொல்றாப்படி இல்லே ரங்காச்சு. மாமா பிடிவாதம் அப்படியே இருக்கு. அவர் மாறினாத்தான் எங்க வாழ்க்கை மாறும். ஸ்ரீரங்கத்துல இப்போ இந்த இடம் கொள்ளை விலை போகும். இதை வித்திருந்தா செஞ்சிய யாருக்காவது ரெண்டாம் தாரமா கொடுத்திருக்கலாம். ஸ்ரீவரமங்கையை ஒரு டிகிரி படிக்க வச்சு நல்ல உத்தியோகத்துக்கு அனுப்பியிருக்லாம். தேசிக்கு என்ஜினீயரிங் படிப்புக்கு உதவியிருக்கலாம். ஒண்ணும் பண்ணல. அதனால எல்லாரும் அப்படியே இருக்கோம்’’ என்று மாமி விரக்தியாய் முடித்த போது எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஸாருக்கு என்ன வேணும்? பொங்கல், இட்லி, ரவா, தோசை?’’ கேட்டபடி மடித்துக் கட்டிய வேட்டியும், மார்பில் காசித் துண்டுமாய் வந்த இளைஞனிடம்…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“தேசீ! ரவா தோசை இரண்டு மொறு மொறுன்னு வார்த்துடுடா… ரங்காச்சு அதுக்குத்தான் நம்ம ஹோட்டலுக்கு வந்திருக்கான்… தப்பு தப்பு…. வந்திருக்கார்… நான் அசடு மாதிரி அன்னித்து ரங்காச்சு மாதிரியே பேசறேன்’’ என்று கைகளைப் பிசைந்தாள் மாமி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“மாமி! நான் என்னிக்கும் ஒரே ரங்காச்சுதான் மாமி இல்லேன்னா டவுன்லேந்து இங்கே ஓடி வருவேனா, உங்க கையால ரவா தோசை சாப்பிட?’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழை இலை விரித்து; தோசை போடப்பட்டது. தொட்டுக்கொள்ள கெட்டிச் சட்னி. கடப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு தோசை சாப்பிட்டதும் வயிறு நிரம்பிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பொங்கல், இட்லி சாப்பிடலயா?’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வேண்டாம் மாமி…. ரொம்பிடுத்து வயிறு…’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“காப்பி?’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சரி.. அரை லோட்டா சாப்பிடறேன். இப்பல்லாம் அதிகம் காபி சாப்பிடறதேயில்லை. அதான்…’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சேர்த்து பில் ஏழு ரூபாய் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஏழு ரூபாயா? ஏழே ரூபாயா மாமி? தப்பா கொடுத்துட்டேளா?’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லையே… ஒரு தோசை மூணு ரூபா. காபி ஒரு ரூபா.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தக் காலத்திலும் இப்படியா வியாபாரம் இங்கே? ஸ்டார் ஹோட்டல்ல இது எழுபது ரூபா மாமி!’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இது அதே சாதா ஹோட்டல் தானப்பா. நாங்களும் அதே சாதாரண மனுஷாள்..’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“மாமி சாதாரணமாயிருப்பது சாமான்யக் காரியமில்லை. ஊர் உலகம் மாறினாலும் மாறாத உங்க கொள்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கே. என் ஆசையும் பூர்த்தியாச்சு. நான் வரட்டுமா?’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கையலம்பி விட்டு, பாண்டு மாமாவின் கல்லாப் பெட்டிக்கு வந்து பில்லோடு ஐந்நூறு ரூபாய் நோட்டை வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாமா நோட்டை முகத்துக்கு நேராய் விரலால் தட்டிப் பார்த்துவிட்டு, “ஐந்நூறு ரூபா நோட்டா? சில்லறை இல்லே… சில்லறையா கொடு’’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல மாமா சில்லறை. எல்லாமே ஐந்நூறு ரூபாய் நோட்டா இருக்கே…’’ – பர்ஸைப் பிரித்தபடி சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்குத் தெரியாது. சில்லறையாத் தந்துட்டு வெளில போ…’’ அழுத்தமாய் பாண்டு மாமா சொல்லவும், உள்ளிருந்து மாமி, “ஏழு ரூபா தானே? விடுங்கோ. நம்ம ஊர்ப் பையன்’’ என்றாள், தயங்கிய குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“எந்த ஊர்ப் பையனா இருந்தா எனக்கென்னடி? ஏழு ரூபாயை வச்சுட்டு அந்தண்டை போகச் சொல்லு.’’ .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் சட்டென, “மாமா! ஐந்நூறு ரூபாய்க்கு சில்லறை மீதம் இல்லேன்னா பரவால்ல.. நீங்களே வச்சுக்கோங்க…’’ என்றேன், இந்த சாக்கில் அவர் குடும்பத்திற்கு உதவலாமென நினைத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான் பாண்டு மாமா ஓர் உஷ்ணப் பார்வையுடன் நோட்டை வீசி என் மீது எறிந்துவிட்டு…“உள்ளே மாமி புலம்பினாளாக்கும்? உதவ வந்துட்டியா இப்போ? ஒண்ணும் தேவையில்லே. ஏழு ரூபாயைக் கொண்டு வச்சிட்டுப் போய்ச் சேரு…’’ என்றார் உரத்த குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சரி மாமா… பக்கத்துக் கடைல மாத்திண்டு வந்து தரேன்…’’ என்று வெளியே வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’சுள்’ என்று வெயில் முகத்தில் அடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்த்து வானத்தைப் பார்த்த போது சூரியனாக பாண்டுரங்க மாமா தெரிந்தார்.&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-spGy4AkvSkI/Tt-6H2n84YI/AAAAAAAAA0A/TaKDYT1Nl8E/s1600/renganatha_festival.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240px" mda="true" src="http://1.bp.blogspot.com/-spGy4AkvSkI/Tt-6H2n84YI/AAAAAAAAA0A/TaKDYT1Nl8E/s320/renganatha_festival.jpg" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?feature=endscreen&amp;amp;v=nCk3swsgV7c&amp;amp;NR=1"&gt;http://www.youtube.com/watch?feature=endscreen&amp;amp;v=nCk3swsgV7c&amp;amp;NR=1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சுட்டியில்&amp;nbsp; ஸ்ரீரங்கம் காட்சிகள் சில இருக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/goog_1310482165"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பின்குறிப்பு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2008ம்வருஷம் இலக்கியபீடம் பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-5663497630689409549?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/5663497630689409549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=5663497630689409549&amp;isPopup=true' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/5663497630689409549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/5663497630689409549'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/12/blog-post_08.html' title='அரங்கபவன்.(சிறுகதை)'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-9GFscgNsGgE/Tt-9p6rIs7I/AAAAAAAAA0I/MU_-r_rNU2Q/s72-c/Filter_Coffee.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-8752138528986121074</id><published>2011-12-03T15:24:00.001+05:30</published><updated>2011-12-03T15:25:41.538+05:30</updated><title type='text'>நடை உடை பாவனை!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;u&gt;அனிதா வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“டாட்! இந்த 2020வருஷத்திலும் கையில் வச்சிட்டு புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லயே&amp;nbsp;2011ன்&amp;nbsp;ஆப்பிள் மறைந்து&amp;nbsp;&amp;nbsp;தமிழ்ப்பெண்&amp;nbsp;ஆ.ரஞ்சனா என்பவர்&amp;nbsp;கண்டுபிடிச்ச&amp;nbsp;&amp;nbsp;ஆரஞ்ச் இருக்குதே அதுலபடிக்கவேண்டியதுதானே?” என்றாள், தனது பேனாபோன்ற ஒரு சாதனத்தைத் திறந்து அதில் ஃபேஸ்(புக்)பார்த்தபடி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“என்னதான் சொல்லும்மா புஸ்தகம்னா நாங்க அந்த நாள்ள குமுதம் விகடன்லாம் கைல எடுத்துவச்சிட்டு ஆழ்ந்து படிக்கிற சுகம் இருக்கே அதுக்கு ஈடு ஆகாதுஅனிதா…” என்று ஆரம்பித்தவரைக் குறுக்கிட்டாள் அனி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘கால் மீ ‘அனி’ டாட்! நான் இதை முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷை(லஜா ஆண்ட்டி)கிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்…இந்த 2020ல அ, னி , தா ன்னு இவ்ளோ பெரிய பெயரை யாராலும் கூப்பிடமுடியாதுன்னுதான் நான் அனி ன்னு மாத்திக்கிட்டேன்..இன்ஃபாக்ட் இருபத்தி ரண்டு வருஷம் முன்னாடி எனக்கு நீங்க உங்க மாம் பெயரான அபிதகுசலாம்பரி என்கிற பெயர் வைக்க நினச்சிங்களாமே?அம்மாதான் பிடிவாதமா அனிதான்னு வச்சதா கேள்விப்பட்டேன்.ரெடிகுலஸ் என்ன இதெல்லாம்? அந்தகாலம் மாதிரியே பெண் அடிமைகளா இருப்பாங்கன்னு நினச்சீங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகள் போட்ட போட்டில் பெரியசாமி பேசாத சாமியாகி விட்டார்.ஆடவர்மலரில் ‘என் சோகக்கதையக்கேளு ஆண்குலமே ‘என்ற தலைப்பில் ஏகப்பட்ட ஆண்கள் கண்ணீர்வடித்து எழுதிய கதைகளைப்படிக்க முடியாமல் போனதில் தானும்கண்ணீர்வடித்தார்.&lt;br /&gt;ஆரஞ்சில் டமில் ஸ்மெல்&amp;nbsp; (தமிழ்மணம்)&amp;nbsp;&amp;nbsp;முகர அமர்ந்தார்.மனம் அதிலும் லயிக்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குதிருமணம் ஆகும் முன்பு எப்படி இருந்தோம் என நினைத்துப்பார்க்க ஆரம்பித்தார்… &lt;br /&gt;&lt;br /&gt;அசைபோடும் பழைய நினைவுகளேஅவரது தனிமைக்குத் துணை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச் டாட் காமில் மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு டிவியை ஆன் செய்தார்… &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்ஷியட் நெட் ஒர்க்ஸ் சானலில் பனிக்கால உடையில்உடல்&amp;nbsp;முழுக்க மூடி இருந்த &amp;nbsp;நடிகர்தனுஷ் &amp;nbsp;கடும்கோடைகால உடையிலிருந்த&amp;nbsp;&amp;nbsp; ஸ்ருதிஹாசனை நினைத்துப்பாடிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒய் திஸ் கொலைவெறிடி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டெனத்திரும்பின அனிதா டிவியைப்பார்த்து அலறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ மை காட்!&amp;nbsp; டிவில ஏன் இப்படி பழையபடமாவே வைக்கிறாங்க? டாட் இதெல்லாம் உங்ககாலப் படம்!நீங்கதான் பாக்கணும்! நான் பப்க்குப்போகப்போறேன் ..மாம் வந்தா பிஸ்ஸாஅல்லது ஸ்பெக்கடி&amp;nbsp;சமைச்சிவைங்கஇல்லேன்னா ஹாங்காங் நுடுல்ஸ் செய்யுங்க… மாம்ஸுக்கு அதான் பிடிக்கும்…. ஆமா எங்கபோனான் என் அருமைத்தம்பி டாம்?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“தாமோதரனா? என்னம்மா அவன்பெயரையும் இப்படி சுருக்கிட்டே? எங்கப்பா நினைவாய் வச்சபேரு.. இப்போ அவன் டென்த் க்ரேட் ஆச்சேம்மா சின்சியரா படிக்க ப்ரண்ட்வீடுபோனான்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘வாட் ?மணி ராத்திரி பத்தாகுது இன்னும் டாம் வீடுவரலையா? என்ன டாட் நீங்க பொறுப்பே இல்லாம இருக்கீங்க? ஒரு வயசுப்பையன் இருட்டி இவ்வளோநேரம் வெளில இருக்கான்னு கவலையே இல்லையா? மம்மி ஆபீஸ்போய் உழைப்பாங்களா இல்ல டாம் பத்தி கவலப்படுவாங்களா? நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல… நைட் மம்மி வந்ததும் உங்களுக்கு நல்ல டோஸ் இருக்கு….சரி நான் கிளம்பறேன், பப்ல ஜீ(வா), ஜா(னி) ஜோ(தி) ரி(ஷி) எல்லாம் வெயிட் செய்துட்டு இருப்பாங்க..பை டாட்’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனி அந்த சொகுசுக் காரில் ஏறி உட்கார்ந்து ரிமொட்டை எடுத்துக்கொண்டாள்.. நகரப் போக்குவரத்து சந்தடி ரிமோட்டை ஆஃப்செய்யவைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.”ச்சேசே ப்ளடி ட் ராஃபிக்…..” என்று அவளே ட்ரைவ் செய்ய ஆரம்பித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்கணிணித்திரையில் தர்ம் சிரித்தான்… “ ஹாய் ஹண்ட் சம்!மை ப்ரின்ஸ்! என்றைக்காவது நீ என்னை ஏறெடுத்துப்பார்த்து ஐலவ்யூ சொல்லத்தான் போறேடா? என்கிட்ட என்ன இல்ல,…பழைய நடிகை&amp;nbsp; அனுஷ்கா &amp;nbsp;மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே! ஐஞ்சடி அஞ்சங்குல உயரமும் இந்த ரோஜாப்பூநிறமும், கடைஞ்சிஎடுத்த தேகமும் எல்லா காளைகளையும் மயக்கும்போது நீ மட்டும் என்னடா விஸ்வாமித்ர தபஸ் செய்றே? நான் மேனகையா மாறணும்னு நீ எதிர்பார்த்தா ஐயாம் ரெடி யார்!”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரை நோக்கி பறக்கும் முத்தமிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனி யின் புத்தபுது ஜப்பானிய டொகொமோ மாடல்&lt;br /&gt;&lt;br /&gt;7&amp;nbsp;ஜிசெல்போன் திரையில் ஜோ(தி) வந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வாட்ஸ் அப் டீ?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஹேய் அனி…உன் ஆளு , இங்க மர்லின் மால் வந்திருக்கான்..அவன் காரை நான் பார்த்திட்டேன்....அன்பேசிவம்னு காரின் பின் கண்ணாடில கொட்டையா எழுதி இருக்கு, கார் ஜன்னல்ல&amp;nbsp; பட்டை பட்டையா விப்பூதிதான் அடிக்கல..சாட்சாத் அவனேதான்..'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ரியலி?'&lt;br /&gt;&lt;br /&gt;”யெப் உடனே இங்க வா அனி"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*********************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மர்லின்மாலுக்குள் அனி நுழையும்போது மெக்டொனால்ட்ஸ் வாசலில்&amp;nbsp;ஆனியன் ரிங்சுடன்&amp;nbsp;வந்து வழிமறித்தான் வா(சன்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தெடிக் இழைகள்மின்னும் உடையுடன் தெரிந்தான் சராசரிக்கும் அதிகமான உயரம் ஆனால் ஆண்மையின் கம்பிரம் அதில் அதிகமாகவே இருந்தது.முகவெட்டில் பழைய நடிகர்சிம்பு. சிரிப்பில் பழம்பெரும் நடிகர் விஜய்,துறுதுறுப்பில் பழையசூர்யா மொத்தத்தில் 2020ன் புதுமுகம் சாகர் போல அட்டகாசமாய் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ ஹேய் அனி உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்றான் போதையான குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“முதல்ல வழிவிடு…நான் அர்ஜண்டா போகணும்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அனி மை ஹனி!மை ப்ரெட்டி கேர்ல்! என் இனிய அழகுதேவதையே…!எவ்வளவு காலம் ஆனா என்ன தமிழ்ப்பெண்களுக்கு என்றுமே தனி அழகுதான்.உன் நினைவில் தான் நான் இருக்கேன் !அனி !இன்னும் நான் யார்கூடவும் டேட்டிங் வச்சிக்கல… பிகாஸ் உன்கூடத்தான் வாழணும்னுதான்..அனி!நான் டேட்டிங் கேட்டால் உடனே ஓடி வர ஆயிரம் பேர் இருக்காங்க ஆனா எனக்கு அவங்க வேண்டாம்.லுக் அனி ! நான் நாலுகோடி(டாலர்) சொத்துக்கு ஒரே வாரிசு.என்னை ஏன் நீ கல்யாணம்செய்துக்கக்கூடாது?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஹலோ ஹலோ கொஞ்சம் அடங்கு….நான் தான் தர்மை லவ்பண்றேன்னு உனக்கு தெரியுமில்ல?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அதனால் என்ன அனி~ இ து&amp;nbsp; 2020… அவனைக் காதலிச்சிக்கோ.. என்கூட டேட்டிங் வச்சிக்கயேன்..”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வா! நான் மாடர்ன் கேர்ல்தான்… ஆனா உண்மையான காதலை மதிக்கிறவள். இன்னிக்கு விஞ்ஞானம் அசுரவேகத்துல வளர்ந்து மனித உறவுகளை சீரழிச்சிட்டிருக்கு… ஆண் பெண் இணைப்பை பயாலஜிகல் ஈவெண்ட்டா பாக்றாங்க ஆனா நான் மனசோட சம்பந்தப்படுத்திப் பாக்றேன் எனக்கு ட்ரூ லவ் தான் பெருசு என்னால் உன்மனசு கெட்டுருந்தா ஸாரி..குட்பை”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாசனை ஒருவழியாய் கழற்றிவிட்டு ஜோதியை&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;ஐபோனில் கூகுளில் சர்ச்சில் போட்டு&amp;nbsp;தேடினாள்.&amp;nbsp; அவள் அப்போதுதான் ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஜோ! நான் 'டாய்ஸ் ஆர் அஸ்' கடைவாசலில் நிக்கறேன்” தகவல் கொடுத்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“யா யா…என் செல்லுல நானும் உன்னைப்பார்த்துட்டேன்.. அங்க வரேன் இரு”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜோ வந்ததும்&lt;br /&gt;&lt;br /&gt;“அனீ….இந்த காம்ப்லெக்சில் தர்ம் இருகிற இட ம் சின்னகோயில் .அதுக்கு கார்லதான் போகணும்டி ..24வது மாடி”என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”கூகுளில்&amp;nbsp;கோயிலைத்தேடினியா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“தேடி அங்க அ வ னைப் பார்த்தும் ஆச்சி… வா போகலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹைட்ரஜன் திரவஎஞ்சினை இருதயப்பகுதியில் தாங்கி இருந்த அந்த அதிநவீன சொகுசுக்கார் வேகமாக மேல் தளம் ஏறியது. பார்க்கிங் ஸ்லாட்டில் காரை செருகிவிட்டு இருவரும் மூச்சிறைக்க வந்தார்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே இருந்த சின்ன பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து நெற்றியில் விபூதிப்பட்டை,இடுப்பில் பட்டு வேஷ்டியுடன் பாலும்தெளிதேனும் தருவதாகவும் பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் தரும்படியும் மெய்மறந்து பி்ள்ளையாரிடம் கேட்டுக்கொண்டிருந்தான் தர்ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஹாய் தர்ம்?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் இந்த கணபதி பூஜையில் கரடி என அதிர்ந்து நிமிர்ந்தான் தர்ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனிஅவன் அருகில் சென்றாள்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுஜோ&amp;nbsp; சின்னதாய் விசில் அடித்தாள்.&amp;nbsp;’மச்சி(னி) நான் ஜூட் விட்டுக்கறேன். மாப்பிள்ளையை அமுக்கிடு’&amp;nbsp; என்று கூறி &amp;nbsp;நகர்நதாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“தர்ம்&amp;nbsp;&amp;nbsp;ஐ லவ் யூ..&amp;nbsp;நம்ம கல்யாணம் எப்போன்னு சொல்லேன் ப்ளீஸ்?” அனாவசியமாய் சுற்றி வளைக்காமல் நேராய் கேட்டுவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“லுக் மிஸ் அனிதா…எனக்கு இந்தக்கண்டதும்காதலில் நம்பிகை இல்ல…உன் பார்வைல நான் முப்பதுவருஷம் முன்னாடி இருந்திருக்கவேண்டிய மனுஷன் தான்..அப்படியே இருக்கட்டும்…என்னால உங்க மாடர்ன் லைஃபுக்கு ஈடுகொடுக்கமுடியாது…இதை பலதடவை சொல்லியும் இப்படி நான் எங்கே போனலும் தொடர்ந்து வந்து இப்படிக் கேட்டுதொல்லை பண்றீங்களே?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“தர்ம் .நீ இல்லாம என்னால் வாழவே முடியாது உன் உருவம் என்மனசிலயே பதிஞ்சிருக்கு அங்க வேற யார்க்கும் இடம்இல்லை”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த வசனமெல்லாம் பழைய தமிழ்சினிமாக்கு லாயக்கு… என்னைவிடு தாயே !நான்போறேன் “ &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்டு வேஷ்டிதடுக்கத் தடுக்க எழுந்த தர்ம் வேகமாய் எஸ்கலேட்டரில் இறங்கி ஓடி பேஸ்மெண்ட்டிலிருந்து காரில் ஏறிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனிதா திகைப்புடன் அப்படியே நின்றவள் தன் செல்போனில் அவன்கார்போகும்பாதையை கவனித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார் ஜெய்நகர் பகுதியில் பத்மஜா வீட்டுவாசலில் நிற்கவும் அதிர்ந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வாட் த ஹெல் இவன் கார்போய் அவ வீட்ல நிக்குது?’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்மஜா மௌண்ட்கார்மல் கல்லூரியில் அனியுடன் படித்தவள்.பக்கா பட்டிக்காடு. பாவாடை தாவணி என்று அணிந்து பாவயாமி ரகுராமம் பாடிக்கொண்டிருப்பாள். தன் பெயரை யாராவது பத்து என்று அழைத்தால்,"அபசாரம் ...சுவாமிக்கு ஆகாது" என்று புலம்புவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள்வீட்டிற்கு தர்ம் ஏன் போகிறான்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பத்தாவது நிமிடம் அனி ,தர்ம் முன் ப்ரசன்னமானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“தர்ம் திஸ் ஈஸ் டூ மச் .இந்த bad m a ja க்காகவா என்காதலை நீ நிராகரிச்சே ?இவ என்னைவிட எதில உ சத்தி ? பலூன் மாதிரி இருக்கா இந்த பேட்மஜா?” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பத்மஜா என்றால் பத்மமான தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகள்.என்று பெயர் .உனக்கு செம்மொழி தமிழும் சரியா தெரியாது தேவமொழி சம்ஸ்க்ருதமும் புரியாது…நுனிநாக்குல ஆங்கிலம் பேசும் நவநாகரீக மங்கை நீ!” தர்ம் சீண்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ ஏய், பேட்மஜா! என் ஆளுடிஅவன் விடு அவனை” என பத்மஜாவை பிடித்துத்தள்ளினாள் அனிதா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ மிஸ் அனிதா இதப்பாருங்க….நான்பொறுமையான ஆண்பிள்ளைதான் ஆனா என் காதலிமேல யார் கைவச்சாலும் வெட்டிடுவேன் ஆம்மா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தர்ம் உறுமவும் அனிதா அவமானத்தில் முகம் சிவக்க வீடுவந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மறுநாளே ஒரு விபரீதமுடிவெடுத்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;***************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர்மாதத்திய பனிப்புகை, சாலையில் பரந்து சூழ்ந்திருக்க&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நடுநிசியில் அனி, காரில் ஏறி புறநகர்ப்பகுதியில் இருந்த அந்த மேலைநாட்டுவாசனை கொண்ட காலனிக்குள் காரை செலுத்தினாள் தர்ம் வீட்டுவாசலில் காரை ஓசைப்படாமல் நிறுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல காம்பவுண்டுக்குள் குதித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளை வள்கம் சொல்லும் நாய்கள் ஏதுமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லிய கான்வாஸ் ஒலியோடு இருபக்கமும் கண்களைத் துழாவினாள், ஹாலின் ஜன்னல் வெண்டிலேட்டரின் கண்ணாடிகளை ஓசையின்றி அகற்றினாள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல உள்ளே உடலை நுழைத்து வளைந்து இறங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ட்ராயிங் ஹால் ரீடிங் ஹால் அடுத்து வீடு நடுவில் தெரிந்த மாடிக்குச்செல்லும் படிகளில் ஏறி சன்ன நீல நிற வெளிச்சம் தெரிந்த பெட்ரூமுக்குள் போனாள். அங்கு கட்டிலில் கழுத்துவரை கம்ஃபர்ட்டரைப் போர்த்திக்கொண்டு தர்ம் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனி அவன் அருகில்வந்து நின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஹேய் ஹாண்ட்சம் .தூக்கத்திலயும் நீ அழகுடா செல்லம்!இந்த அழகு எனக்குக்கிடையாதா?அப்படி என்றால் அந்த பேட்மஜாக்கும் கிடைக்கக் கூடாது ,, காதலுக்காக கொலையும் செய்வா அனிதா.,ஆமா.. ஒழி நீ செத்துப்போ உனக்கு என்கையால்தான் முடிவு”&lt;br /&gt;&lt;br /&gt;குனிந்து பலத்தையெல்லாம்திரட்டி கைகளை அவன்கழுத்தில் வைக்கும்போது அவள் கழுத்தை ஒரு வலியகரம் சட்டெனப் பற்றியது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அவுட்ச்!” சன்னமாய் கூவியபடி திரும்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளைஅப்படியே ஓசைப்படாமல் வரும்படி ஜாடைகாட்டி அடுத்த அறைக்கு இழுத்துப்போன உருவம் அங்கு லைட்போட்டது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சதில் அனிபார்த்தாள். அது ஒரு பெண். ஜீன்ஸும் டிஷர்ட்டும் அணிந்து நரைத்தபாப்தலைக்கு கணிசமாய் டை அடித்திருந்தாள்.வயது அறுபதுகளில் இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பெரியசாமி அந்த நாளில் தான் மிகவும் சிலாகித்துரசித்ததாய் சொன்னதால் அனிதா ’நெய்ல்டாப்’பில் கஷ்டப்பட்டுப்பார்த்த ஏய் படத்து நடிகை நமீதாபோலவும் கணிசமாய்த் தெரிந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நான் தர்ம்மின் மாம்..நீ யார்?” என்றாள் அதட்டும்குரலில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நான் ,நா…ன்…” திணறினாள் அனி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பார்த்தா நல்லபடிச்சபொண்ணா தெரியற… நீ காரைநிறுத்தி உள்ளகுதிச்சி ஹால்ஜன்னல் கண்ணாடிகளைநகர்த்தி என் சன்னோட ரூம் போகிற வரை நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன் ..இங்க எல்லாஇடத்திலும் அலார்ம் இருக்கு..விரல அமுக்கினா போலீஸ் வந்துடும் ..செக்யூரிடி துப்பாக்கி உன்மேல நீண்டுடும ஆ னா நான் செய்யல பிகாஸ் உன் துணிச்சல் எனக்குப்பிடிச்சிருக்கு. ப்ரேவ்கேர்ல்! உன்னைமாதிரி நானும் துணிச்சல்காரிதான்&lt;br /&gt;&lt;br /&gt;சரி எதுக்குவந்தே ?ஏன் என் பையனைக்கொலைசெய்ய நினச்சே?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனி தயங்கிப்பிறகு விவரம் சொன்னாள்.கடைசியில்&lt;br /&gt;&lt;br /&gt;“அத்தை என்னைப் புரிஞ்சுக்குங்க உங்க மகனை உயிராகக் காதலிக்கிறேன்…தர்ம் இல்லேன்னா எனக்கு வாழ்வேஇல்ல”கண் பனித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ரொம்பதமிழ் சினிமா பார்த்திருக்காங்க உன் அம்மா,நீ வயத்துல இருக்றப்போன்னு நினைக்கிறேன்..தர்ம் மீது நீ கொண்ட காதலை நான் மதிக்கிறேன் …சரி இப்போ என்னோடுவா” என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளோடு அந்த அறையில் நுழைந்த அனி, அங்கு நிறைய சோதனைகுழாய்கள் பிப்பெட்டுகள்,ப்யூரெட்கள் இருப்பதையும்பார்மலின் நெடி அடிப்பதையும் உணர்ந்தாள். .கண்ணாடிஜாடிகளில் ரசாயனதிரவத்தில் தவளைகள் மிதந்தன சதைத்துணுக்குகள் பாலிதீன்பைகளில் ..மூட்டைமூட்டைகளாய்.&lt;br /&gt;&lt;br /&gt;குரங்கு ஒன்று விட்டத்திலிருந்து க்ர்ர் என்று அசிங்கமாய் சிரித்தது. கேரட்டைக்கடித்துக்கொண்டு வெள்ளை முயல்கள் இரண்டும் கூண்டிற்குள் ஓட்டப்பந்தயம்&lt;br /&gt;&amp;nbsp;நட த்தின. ஒரமாய் சின்ன மேஜைமீது சாதுவாய் வெள்ளைஎலி சுகமாய்த் தூங்கிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“மேடம் நீங்…. நீங்க?”குழப்பமும் திகைப்புமாய் அனி கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நான் ஒரு சயின்டீஸ்ட் பேர் குந்தளா தேவி.செல்லமா’குந்த்!’ அனி! என்கதை ரொம்ப சோகமானது&amp;nbsp; எனக்கு கல்யாணமாகி&amp;nbsp; பிறந்த குழந்தை இறந்துபோனது அதில் ரொம்பமனம்&lt;br /&gt;&amp;nbsp;உடைஞ்சிபோனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அ ப்போது என் கவனத்தை திசைமாற்ற க்ளொனிங் துறையில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் இதுக்கு சம்மதித்தார். என்னோட ரண்டாவது குழந்தையை க்ளோனிங் முறைலதான் பெற்றேன் அவன்தான் தர்ம்… அடுத்து அர்ஜ் ,பீம் .நகுல், சகா ன்னு மொத்தம் &lt;br /&gt;அஞ்சுபையன்கள் எனக்கு .&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருமே ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருப்பாங்க .அதனால குழப்பம் வேண்டாம்னு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஊ ர்ல அனுப்பி படிக்கவச்சிட்டேன். தர்ம் மட்டும் இங்க பெங்களூர்ல என்கூட இருக்கான்..வருஷம் ஒருமுறை எல்லாரும் இங்க வருவாங்க.. ஒருவாரம் வீட்லயே இருப்பாங்க சேர்ந்து வெளில போக மாட்டாங்க…..இப்போ இங்க தான் இருக்காங்க….&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனி! உனக்கு தர்ம் கிடைக்கலேன்னா என்ன, மீத நாலுபேர்ல யாரையாவது செலெக்ட் செஞ்சிக்கோயேன்? எல்லாருமே தர்ம் போலவே க்ளோனிங் கைஸ்! ஒரே வார்ப்புல செய்த பொம்மைகள் மாதிரி இருப்பாங்க.. அவங்களில் ஒருத்தனுக்கு பழையநடிகை ஐஸ்வர்யாராய் மாதிரி இருக்கற உன்னைப்பிடிச்சிடும். நான் கல்யாணம் செஞ்சிவைக்கிறேன்…”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குந்தளாதேவி இபடிச்சொல்லும்போது, “ஹாய் மாம் யாரோட பேசிட்டு இருக்கிங்க?’ எனக்கேட்டபடி வந்த நால்வரையும் பார்த்தாள் அனி, அடுத்தகணம் மயக்கம்போட்டு விழுந்தாள்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-N7-6RRLyzpc/TtlfD6QlH9I/AAAAAAAAAz4/G3NEePp16W4/s1600/nishaagarwal4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" dda="true" height="320px" src="http://2.bp.blogspot.com/-N7-6RRLyzpc/TtlfD6QlH9I/AAAAAAAAAz4/G3NEePp16W4/s320/nishaagarwal4.jpg" width="212px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;*****பிகு:)************************************************************&lt;br /&gt;இது பழைய பதிவு புதிய காப்பி!!&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஓண்ணு ரண்டுவார்த்தைகள்+தலைப்பில் மட்டும் மாற்றம் செய்து மீள்பதிவு! . &lt;br /&gt;&lt;br /&gt;படத்திலிருக்கிற பெண் அழகா இருந்தா நன்றி&amp;nbsp;&lt;a href="http://philosophyprabhakaran.blogspot.com/" target="_blank"&gt; பிலாசபி பிரபாகரனுக்குத்தான்&lt;/a&gt;&amp;nbsp; நைசா அவர் பதிவிலிருந்துதான் சுட்டேன்!!!&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-8752138528986121074?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/8752138528986121074/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=8752138528986121074&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/8752138528986121074'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/8752138528986121074'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/12/blog-post_03.html' title='நடை உடை பாவனை!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-N7-6RRLyzpc/TtlfD6QlH9I/AAAAAAAAAz4/G3NEePp16W4/s72-c/nishaagarwal4.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-5993464783274393375</id><published>2011-12-01T06:24:00.000+05:30</published><updated>2011-12-01T06:24:22.495+05:30</updated><title type='text'>புன்னகைக்கும் மத்தாப்பு!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;போதுமுந்தன் பொல்லாப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகைக்கும் மத்தாப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூவை யார் திறப்பதுவாம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொழுதையார் விரிப்பாராம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மோதுகின்ற மேகமெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் கவிழ்ந்தாலும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்னப் பறவையின்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறகுச் சீண்டலினால் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் கவிழ்ந்து கதிர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்தாய் இறைத்துவிடும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூடிவிட்ட இமைகளோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடங்கிவிட்ட மனமோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்தத்தால் இதயம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகையவிழ்ந்து நிற்பதுபோல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மன்னவனின் வருகையது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்மகள் கண்ணிற்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சத்தமின்றித் தன்னாலே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சடுதியில் நடக்கவேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவன் வருவதும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை பிறப்பதுவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மௌனத்தின் ஜனனத்தில்.!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னதங்கள் அவையென்று&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகமும்தான் அறிந்திடுமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-OvKnzGJ0i3g/TtbBkTYsc_I/AAAAAAAAAzw/9IkgdpI14iY/s1600/7_Gering_E_Photography-Digital_The%252520Rising%252520Sun.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" dda="true" height="300px" src="http://3.bp.blogspot.com/-OvKnzGJ0i3g/TtbBkTYsc_I/AAAAAAAAAzw/9IkgdpI14iY/s400/7_Gering_E_Photography-Digital_The%252520Rising%252520Sun.jpg" width="400px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VtYYw4wYfwM/TtanXhVpvtI/AAAAAAAAAzg/iKGNyEtHerQ/s1600/buds.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" dda="true" src="http://4.bp.blogspot.com/-VtYYw4wYfwM/TtanXhVpvtI/AAAAAAAAAzg/iKGNyEtHerQ/s1600/buds.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Ohb1S6dXx_8/TtbBI2cdFKI/AAAAAAAAAzo/EZk4tqMAUPI/s1600/Writing-.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" dda="true" height="268px" src="http://3.bp.blogspot.com/-Ohb1S6dXx_8/TtbBI2cdFKI/AAAAAAAAAzo/EZk4tqMAUPI/s400/Writing-.jpg" width="400px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-5993464783274393375?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/5993464783274393375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=5993464783274393375&amp;isPopup=true' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/5993464783274393375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/5993464783274393375'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/12/blog-post.html' title='புன்னகைக்கும் மத்தாப்பு!!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-OvKnzGJ0i3g/TtbBkTYsc_I/AAAAAAAAAzw/9IkgdpI14iY/s72-c/7_Gering_E_Photography-Digital_The%252520Rising%252520Sun.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-7967313076803865234</id><published>2011-11-30T07:09:00.004+05:30</published><updated>2011-11-30T07:36:52.801+05:30</updated><title type='text'>இடைச்சாதி நான் என்றான்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ijKL6QgXLdc/TtUtFrqL6aI/AAAAAAAAAyw/7YTNHjApcME/s1600/copyofmahabharat_000798_420x315.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" dda="true" height="480px" src="http://3.bp.blogspot.com/-ijKL6QgXLdc/TtUtFrqL6aI/AAAAAAAAAyw/7YTNHjApcME/s640/copyofmahabharat_000798_420x315.jpg" width="640px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பாரதியின் எங்கிருந்தோவந்தான் இடைச்சாதி நான் என்றான் என்னும் பாடலை அறியாதவர்கள் இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடைச்சாதி என்ற சொல்லாட்சி பாரதியை வெறுமனே அளித்திருக்கமாட்டார். அவர்கண்முன் கண்ணன் இப்படியெல்லாம் வந்திருக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மும்மூர்த்திகளில் இடையன்(ப்ரும்மா விஷ்ணு சிவன்)&lt;br /&gt;&lt;br /&gt;முத்தொழில்களில் இடையன்(படைத்தல் காத்தல் அழித்தல்)&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாற்கடலில் ஆதிசேஷனுக்கும் கடலுக்கும் இடையில் பள்ளிகொள்ளும் இடையன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேகத்தின் உள்ளுக்கும் புறத்துக்குமான ஆத்மாவில் உறைபவன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலராமனுக்கும் சுபத்ரைக்கும் இடையில் பிறந்தவன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடையர்குலத்தில்பிறந்தவன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசுக்களின்கூட்டத்திலிடையிலிருந்தவன்&lt;br /&gt;&lt;br /&gt;யசோதையால் இடையில் கட்டுண்டவன்&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டுமரங்களுக்கு (யஷர்கள்) இடையில் சென்றுமோட்சமளித்தவன்)&lt;br /&gt;&lt;br /&gt;காளியனின் சிரசில் ஐந்துதலைகளுக்கு இடையில் நர்த்தனமாடியவன்&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில்தூது சென்றவன்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Ew2bWpmpsKw/TtUv_DRYTOI/AAAAAAAAAy4/DbWBOTpIVJA/s1600/360194740_e24da9ea80.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" dda="true" src="http://2.bp.blogspot.com/-Ew2bWpmpsKw/TtUv_DRYTOI/AAAAAAAAAy4/DbWBOTpIVJA/s1600/360194740_e24da9ea80.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;முதலில் வரும் உறவைவிடவும் இடையில் வரும் நட்பை (குசேலர்)மதிப்பவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட பாரதிக்கு அதிகம்&amp;nbsp; தோன்றி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொய்யோ எனும் இடையாளொடும் இளையானோடும் போனான்..என்கிற, கம்பன் பாடலிலும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்றுவெளியிடைக்கண்ணம்மா என்கிறது பாரதியின் பாட்டிலும் வரும் இடைபற்றியும் யோசிக்கவேண்டிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கம்பனின் பொய்யோ எனும் இடைக்கு அர்த்தம் புரிகிறது. இல்லையோ என்று பொய் சொல்லும்போன்ற இடைகொண்டதாலேயே சீதை இடையாள் ஆகிறாள். பிடி இடை என்பார்கள் .பிடி என்றால் யானையையும் சொல்வதுண்டு:)&lt;br /&gt;&lt;br /&gt;காற்றுவெளியிடைகண்ணம்மா என்கிறாரே பாரதி,.என்ன அது?&lt;br /&gt;&lt;br /&gt;காற்றுபோல கண்ணுக்குத்தெரியாத இடைகொண்ட கண்ணம்மாவா &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்றுவெளியினில்&amp;nbsp; கண்ணம்மா என்றிருந்தால்&amp;nbsp;காற்று சூழ்ந்த வெளி&amp;nbsp; என பொருள் கொள்ளலாம்.காற்றுவெளியிடை என்பதற்கு யாராவது நல்ல விளக்கம்&amp;nbsp; கொடுங்களேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; இடைவேளைக்குப்பிறகு வரேன்:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-7967313076803865234?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/7967313076803865234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=7967313076803865234&amp;isPopup=true' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/7967313076803865234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/7967313076803865234'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/11/blog-post_30.html' title='இடைச்சாதி நான் என்றான்!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ijKL6QgXLdc/TtUtFrqL6aI/AAAAAAAAAyw/7YTNHjApcME/s72-c/copyofmahabharat_000798_420x315.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-7567384664128768590</id><published>2011-11-29T06:04:00.000+05:30</published><updated>2011-11-29T06:04:05.559+05:30</updated><title type='text'>மெய் மறந்த  காதல்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ப்ரபாகர் ப்ரபாகர்' என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அழைக்கும் பவித்ரா&amp;nbsp; இரண்டுநாட்களாய்&amp;nbsp;மௌனவிரதம் இருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அழுத்தக்காரி ....அவளோடு்&amp;nbsp;லேட்டஸ்டாய் &amp;nbsp;வித்தகன் &amp;nbsp;சினிமா போகாமல் &lt;a href="http://madhavan73.blogspot.com/" target="_blank"&gt;மன்னைமாதவனோ&lt;/a&gt;டும் &lt;a href="http://pesalamblogalam.blogspot.com/" target="_blank"&gt;அனந்து&lt;/a&gt;வோடும் சேர்ந்து &amp;nbsp;போய்விட்டேன் என்று கோபம் போலிருக்கு..' வேலாயுதம் கூட்டிப்போய்&amp;nbsp;&amp;nbsp; வேண்டியமட்டும் வாங்கிக்கட்டிக்கிட்டேன் அதான்&amp;nbsp; வித்தகனுக்கு மல்டிப்ளசுக்கு வரசொல்லவில்லை. படம் பவித்ராக்குப்பிடிக்கலைன்னா&amp;nbsp;&amp;nbsp; கல்யாணம் ஆகுமுன்பே&amp;nbsp;&amp;nbsp; டைவர்ஸ் செய்துவிடுவாள் என்கிற பயம்தான்! செல்போனை செல்லாதபோனாய் ஆக்கிவிட்டாள்.எப்போதும் ஸ்விட்ச்ட் ஆஃப் என்கிறது அது!&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்தபடி&amp;nbsp;உன்னோடு பேசாத கணங்கள் என்ற தலைப்பில் ப்ரபாகர் &amp;nbsp;புதுக்கவிதை எழுதப்பார்த்தான்.வரவில்லை. கோபமாய் ஐபோனில் யு ட்யூப்பில் எதையோதேடினான்.. ஒய்திஸ்கொலைவெறிடி என்றார் தனுஷ். &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; அடப்ப(பா)வி! என்கூட பேசாமலே இருக்கியே..&amp;nbsp; ஒய் திஸ் கொலைவெறிடி?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் காதலிக்க ஆரம்பித்த புதிதில் தசாவதாரம் சினிமாவிற்கு&amp;nbsp; ப்ரபாகர் போய்விட்டான் என்று கோபித்துக்கொண்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;. கொஞ்சம் (தசா)&amp;nbsp;அவதாரகாலத்துக்குப்போய்வரலாம் வாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று....&lt;br /&gt;&lt;br /&gt;" லுக் பவித்ரா...என்னதான் நாம மாஞ்சுமாஞ்சு லால் பாக்குலயும் ,·'ஃபோரம்'லயும் கருடாமால்லையும் கோபாலன் மால்லையும் சுத்திசுத்திவந்து காதலிச்சாலும் நமக்குக் கல்யாணம் ஆகிறவைக்கும் என்னோட சில கொள்கைகளை நான் விடமுடியாத நிலைமை. அதன்படி புதுப்படம் ரிலீஸாகிற தினம் முதல்நாள் முதல் ஷோ போகத்தான் போறேன்.. இதுக்காக என் பிராஜக்ட் மேனேஜர் கிட்ட ஆபீஸ்ல அனுமதியும் வாங்கிட்டேன். நீ வர்றதுன்னா வா.. எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா நீ வரலேன்னா உடனே நான் போகாம இருக்க மட்டும் முடியாது ,பிகாஸ் என்னோட இருபத்திநாலு வருஷப்பழக்கமிது...எங்கம்மா வயித்துல இருந்த நாளிலிருந்து இது பழக்கமாயிடிச்சி..&amp;nbsp;ஸாரி பவி" என்று விவரமாய் சொல்லிவிட்டுத் தான் சினிமாபார்க்கப் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;இடைவேளையில் மெக்டொனால்ட்டில் விரல் வறுவல்(ஃபிங்கர் சிப்ஸ்)&amp;nbsp;&amp;nbsp;சாப்பிடும்போது் பவித்ரா போன் செய்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;்" ஹாய்&amp;nbsp; பவி...!" ஆசையாய் அழைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ப்ப்ரப்ப்பாக்கர்ர்ர்.!.சரியா எனக்கு ஆஃபீஸ்ல அப்ரைஸல் நேரம். நீ இப்படி செய்வது நல்ல்லாவே இல்லை ...&amp;nbsp; ஆம்ம்ம்மா” என்றாள்.பவித்ராவிற்குக்கோபம் வந்தால் மெய்யெழுத்துக்கள்&amp;nbsp; பட்டாசாய் வெடிக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;பவி தொடர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;உன்னைப்பழிவாங்க நைட் என் ஹாஸ்டல்ரூம்போனதும்&amp;nbsp; என் ஃபேவரிட்&amp;nbsp;ஆக்டர் Tom Cruise&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடிச்ச &amp;nbsp;ஒரு ஹாலிவுட்மூவி பாக்கப்போற்ற்றேன்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" அதெல்லாம் எங்க தல படம் முன்னாடி ஜுஜுபி ..இது செம சூப்பர் படம் பவி! அதிலும் அசின் வர்ற சீன் இருக்கே.... 12.ம் நூற்றாண்டில் தையல்காரர்கள் இலலையோ என்னவோ என யோசிக்கவைக்கும் இந்த சீன்ல... அசின் லுக்ஸ் ஆ...ஆ.........awesome!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஹேய் அசின்(ங்)கமா பேசாத..... shutup yaar!" சிரித்தபடிதான் போனை வைத்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;அன்பில் அட்லாண்டிக்,பாசத்தில் பசிபிக்எனபவித்ரா,&amp;nbsp; ப்ரபாகரிடம்&amp;nbsp;உயிராய் பழகுபவள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்டவளிடமிருந்து&amp;nbsp; இப்போது ஒருபோன்கால் இல்ல, மின்மடல் இல்லை ...குறுஞ்செய்தி இல்லை!முக நூலில் ட்விட்டரில் என்று எங்கும் தேடி பவியைக்காணா மனமும் வாடுதே என்று ப்ரபாகர் பாடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;.'என்னாச்சு பவித்ராவுக்கு?&amp;nbsp;&amp;nbsp; இப்போ நிஜமாவே கோவிச்சிட்டுதா கிளி்,'இன்னிக்கு விட்றதா இல்ல நேராய் அவள்வேலைசெய்யும் ஆபீஸ்போய் கேட்டுடறென்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரபாகர்&amp;nbsp; கிளம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அங்கே கிடைத்த தகவல் அவள் ஆபீசுக்கேஇரண்டுநாளாய் வரலையாம்............ லீவ் போட்டிருக்காளாம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ உடம்புதான் சரி இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;உன் செல்போனை தூக்கவும் சக்தி இல்லையா பெண்ணே? அதனால்தான்&amp;nbsp; ஆஃப் செய்து வைத்திருக்கிறாயா? &lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதுதான் ஆபீஸ் வாசலில் அவள் தோழி அகிலாவைப்பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகிலா!அகிலா! " என்று நேருக்குநேர் படத்துப் பாடலாய்க் கூவி அழைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அகிலா சட்டென திரும்பவில்லை அவளால் அதுமுடியாது 99.5கிலோ எடை தி.மகால்!&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லத்திரும்பியவள், ப்ரபாகரைக்கண்டதும் கண்மலர" ப்ரபாகரா! ச்சென்னாகிதீரா?' என்றாள். மண்ணின்மகள்..கன்னடமே பேசுவாள்,.ரொம்பவும்' ஞே 'என விழித்தால் மட்டும் ஆங்கிலத்தை அனுமதிப்பாள்..&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு பவித்ராவின் காதலன்&amp;nbsp;ப்ரபாகர் என நன்கு தெரியும் .&lt;br /&gt;&lt;br /&gt;்"ச்சென்னகிதினி.. அதாவது நல்லாருக்கேன்..இதுக்குமேல&amp;nbsp;கன்னடத்துல&amp;nbsp;பேச வச்சி&amp;nbsp;என்னை சோதிக்காதீங்க சிஸ்டர்.. ஆங்கிலம் அந்நியமொழி என்று இந்தியர்களிடம் கதைக்காத நீங்க, கொஞ்சமே கொஞ்சம் .தெரிஞ்ச உங்க மைசூர்தமிழ்லயாவது பதில் சொல்லுங்க எங்கே பவித்ரான்னு?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" ஆமாவா ? பவித்ரா ஆபீஸ் வந்த் கொண்டில்லா.. .நீங்க லேடீஸ் ஹாஸ்டல் பக்கம்&amp;nbsp; வர்முட்யாது. அதுக்கே நான் வேணா அவ ஹாஸ்டல்ரூம் போயி&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;தேடிக்கொண்டு வந்ததா சொல்லி அவளை மத்யானா மூறு கண்ட்டேக்கே லால்பாக் கண்ணாடிமனைகே வரச்சொல்லட்டுமா?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புண்ணியமாப்போகும்! உன் பொன்னுடலும் சற்றே குறையும்!மூணு மணிக்கு லால்பாக் க்ளாஸ் ஹவுசுக்கு அவளை வரச்சொல்லு.&amp;nbsp;மாடு(செய்) அகிலா மாடு”என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நாட்டிபாய்! மாடுன்னா கன்னடத்துல செய்..ஆனா&amp;nbsp; தமிழ்ல&amp;nbsp; என்னன்னும் தெரியுமே..யானைன்னு சொல்லாதவரை ஒல்லேது(நல்லது) என்று நகர்ந்த அகிலா செய்த ஏற்பாட்டில் லால்பாக் வந்தாள் பவித்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றும் இளைப்பாய் தெரியவில்லை.அனுஷ்கா உயரத்தில் ஆப்பிள் கன்னத்தில் ஜோதிகா கண்களில் துறுதுறுவென்றே தெரிந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ என்ன மேடம்! ஃபோன்ல பேசமாட்டிங்களாக்கும்? என்னை நினைவு இருக்குதா? என்பேரு ப்ரபாகர். மூணுவருஷமா உன்னை துரத்தித்துரத்தி காதலிக்கறேன், கூடிய சீக்கிரம் நமக்கு பெத்தவங்க சம்மதமோட சென்னைல கல்யாணமும் நடக்க திட்டம் நடக்குது இந்த நிலைமைல உன்கிட்ட சொல்லிட்டு நான்&amp;nbsp;வித்தகன் சினிமா போனால் அதுக்கு நீ&amp;nbsp;இப்படி மெத்தனமா&amp;nbsp; நடந்துக்கணுமா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சத்தமேயின்றி மௌனமாய் பார்த்தாள் பவித்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அடப்பாவி பவி!&amp;nbsp;48மணிநேரமா பாக்கலயே! இப்ப கண்டதும்&amp;nbsp;ப்ரபாகர்னு&amp;nbsp;ஓடிவந்து&amp;nbsp;கட்டிப்பேன்னு நினச்சா என்னவோ சிலைமாதிரி நிக்கற?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பவித்ரா தயக்கமுடன்,”அது அது....”என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னாச்சு பவித்ரா? பொறுமை போகுது எனக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது அது...எனகு பேசவே வரல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அதான் பேசறியே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழுத திருதமா&amp;nbsp; நாக புரட வரல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாட்? என்ன மொழி பேசறே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தமிதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தமிதாவா? நமிதாதான் எனக்கு தெரியும்.ஹ.. இப்போ நமீதா போயி லஷ்மிராய் வந்தாச்சி! &lt;br /&gt;&lt;br /&gt;ஐயொ&amp;nbsp;பெரபாகர பெரபாகர&amp;nbsp;எனகு&amp;nbsp; பேசவரல முனபோல..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ல கூழாங்கல்லா அதை கடாசிட்டு ஒழுங்கா பேசு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல இல&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இலை? ஓ வெற்றிலையா உன் வாய்ல? நோ ப்ராப்ஸ்! அந்த புல் ஓரமா துப்பிடு...அப்புறமாவாவது உன் பேச்சு எனக்குப் புல்லரிக்கட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;எபடி சொலவே பெரபாகர?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பவி இது? ஆர் யூ மேட்? சரிஎழுதிக்காட்டு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பையிலிருந்து தேடி&amp;nbsp;ஏதோ&amp;nbsp;துணிக்கடை&amp;nbsp;பில்லை எடுத்தாள் அதன் பின்பக்கம் பேனாவில் ஏதோ எழுதித் தந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதில் அவள் எழுதி இருந்ததை படித்ததும் ஆச்சரியமாய்,&lt;br /&gt;&lt;br /&gt;" அப்படியா? ரியலி? ஸடனா உனக்கு மெய்யெழுத்தெல்லாம் சிக்கிக்கொண்டு விட்டதா,ஹாரர் மூவி பார்த்த அதிர்ச்சியிலா ஆனது இப்படி?&amp;nbsp; போன் செய்யாதகாரணமும் இதுதானா, குறுஞ்செய்தி&amp;nbsp; மின்மடல் எல்லாம் அனுப்ப மனசு&amp;nbsp; தயங்கி குறுகுறுத்ததால்&amp;nbsp; எதுவும் அனுப்பலையா?&amp;nbsp;அடப்பாவமே மெய்மறந்த மேனகை பவித்த்ரா?",&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா ரொப பயகரமான பட அது... நடுல அயோ நு வீறிடேன் அபோ இபடி ஆசு&lt;br /&gt;&lt;br /&gt;வெல்!இந்தவியாதிக்கு என்ன மருந்து? ஒருபாட்டில் நிறைய மெய்எழுத்தை எழுதிப்போட்டு குலுக்கி உன் வாய்ல ஊற்றட்டுமா அல்லது புலவர் &lt;a href="http://pulavarkural.blogspot.com/" target="_blank"&gt;சா.&amp;nbsp;ராமானுசம்&lt;/a&gt; அவர்களிடம்&amp;nbsp; உன்னை நல்ல தமிழ்கற்றுக்கொள்ள அனுப்பட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனகு&amp;nbsp; என&amp;nbsp; நெலமை&amp;nbsp;புரியாதா&amp;nbsp;?&amp;nbsp;&amp;nbsp; இதுகுதான் நா எதுவு சொலல ரடு நாளா உனகிட....&lt;a href="http://minminipoochchigal.blogspot.com/" target="_blank"&gt;சகதிபிரபா&lt;/a&gt;&amp;nbsp; கிட&amp;nbsp; சொனபோ அவ ஆறுதலா&amp;nbsp; யு விலபி ஆலரைடுன்னு இதமா&amp;nbsp; சொனா..நீ&amp;nbsp; கிடல் செயறே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோச்சிக்காத டியர் சரி வாவா..எனக்குத்தெரிஞ்ச நல்ல டாக்டர் மல்லேஸ்வரத்துல இருக்காரு, உடனே போகலாம் பைக்ல ஏறி உக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பைக்கை ஸ்டார்ட் செய்தான் ப்ரபாகர். ஆனால் அது ஸ்டார்ட் ஆகாமல்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ எதுல வந்தே பவி?உன் ஆக்டிவாலயா?&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இல..அது ரிபே(ர்) அகிலா அவ&amp;nbsp;(ஸ்க்)கூ(ட்)டில&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;லாலபாகல கொடு விடு போயிடா&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;லால்பாக் வாசல் வரை&amp;nbsp; இருவரும் நடந்துவந்து வெளியே பார்த்தால் பெட்ரோல்விலை ஏறினதை முன்னிட்டு பெங்களூர்ல ஆட்டோ ஸ்ட்ரைக்காம், ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென எதிரில் மல்லேஸ்வரம் என்று போர்டுபோட்டு வந்த பஸ்சில் ஏறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில்லறையா இல்ல என்கிட்ட, எல்லாம் ஐநூறா இருக்கு..பவி நீயே டிக்கட் வாங்கிடு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் பஸ்களின் சிஸ்டம்படி பெண்கள் செல்லும்முன்பக்கமாய் ஏறிய பவித்ரா , கண்டக்டர்" டிக்கட் எல்லிகே?"என்றதும் "மலெசுர" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டக்டர் குழம்பிப்போனவராய்," மலே ஜுரா? (மழைஜுரமா?) மையல்லி ஜுரானா?(உடம்புல ஜுரமா) அதுக்கே டாக்டரத்தர ஹோகி.(டாக்டர்கிட்டபோங்க)." என்றார் கிண்டலாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேலையாய பின்புறம் இதனை கவனித்து&amp;nbsp;ப்ரபாகர் ஓடிவந்து அவள்கையிலிருந்த ரூபாய்நோட்டை வாங்கி சமாளித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;"தாஙஸ பெரபாகர? என்று பவித்ரா சொன்னதை ஏதோ அயல்நாட்டு மொழி என பஸ்ஸில் அதிசயமாய் சிலர்பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பவித்ரா இங்க நீ ஏதும் பேசாமல் வாயேன் ப்ளீஸ்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எபடி இல&amp;nbsp; எபடிகற?&amp;nbsp;சாபிடாம இருகலா பேசாம இருகலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்டம்தான் உனக்கு.. ம்ம்...கலகலன்னு நீ பேசினாலேஅந்த அழகே அழகு..இதுக்குத்தான் காதலன் தசாவதாரம் சினிமாபோனால்,வித்தகன் கண்டுவந்தால்&amp;nbsp;கனிவாய் வாழ்த்து சொல்லி இருந்திருக்கணும் என்கிறது...நனவில்அழுத்திப் பேச முடியாத உனக்கு கனவு மெய்ப்படவேண்டும்...ஹ்ம்ம்....முத்தைத்தரு பத்தித்திரு&amp;nbsp;என்கிற அருணகிரியார் பாடலை இப்போ உன்னைப்பாடசொல்லி யாரும் கேட்டிடக்கூடாது..ஹஹ்ஹா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;்ஹே சிரிகாத..&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அவளை பரிசோதித்துவிட்டு " இது'மெய்யோ போ·பியா'என்ற நோய் .அதாவது பயங்கரமான மயிர்க்கூச்செறியும் ஹாரர் படம்பார்க்கும்போது சிலருக்கு கண்முழி பிதுங்கி,முற்றிலும் தொண்டைஅடைத்து மெய் எழுத்தெல்லாம் சிறைபட்டுப்போயிடும் .... "&amp;nbsp; என்று வழக்கம்போல் மூக்குக்கண்ணாடியைக் கழற்றியபடியே டாக்டர் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;”இதற்கு என்னசிகிச்சை டாக்டர்? அமெரிக்கா போயித்தான் ஆபரேஷன் செய்யணும்னு சினிமா டாக்டர் மாதிரி சொல்லிடாதீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;நோ நோ...இது ஒருமனபிராந்தி&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ பீர் அல்லது நல்ல ப்ராண்டி குடிக்க சொல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;யூ நாட்டி பாய்! இது ஒரு மனப்ரமைன்னேன்..தானே சரியாய்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போ டாக்டர்? இன்னும் மூணுவாரத்துல எங்களுக்குக் கல்யாணம் வேற!&lt;br /&gt;&lt;br /&gt;\"ஆமா டாகடர!! கலயாணதுகு நீ(ங்)க வா(ழ்த்)த வ(ந்)துடு(ங்)க ,க(ட்)டாய (ம்)" என்றாள் பவித்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா அதுகென .. வதுடா போசு"என்ற டாக்டர் "ஐயாம் சாரி ..இந்த வியாதி கண்டேஜியஸ்தான் பாருங்க ஒருக்கணத்துல எனக்கும் தொத்திக்கிச்சு' என்றார் தமாஷாய்.&lt;br /&gt;&lt;br /&gt;பவித்ராவை அழைத்துக்கொண்டு&amp;nbsp;ப்ரபாகர் தன்அறைக்கு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பெரிய படம் அது?&amp;nbsp;காஞ்சனா படத்தைவிடவா? படுபயங்கரமான&amp;nbsp; அந்தப்படத்தை&amp;nbsp;&amp;nbsp; என் ஃப்ரண்ட்ஸ்&lt;a href="http://madhavan73.blogspot.com/" target="_blank"&gt; ராஜேஷ்&lt;/a&gt; &lt;a href="http://www.blogger.com/"&gt;&lt;span id="goog_141121298"&gt;&lt;/span&gt;சசிகுமார்&lt;span id="goog_141121299"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&amp;nbsp; &lt;a href="http://vaazhveperaanantham.blogspot.com/" target="_blank"&gt;ரசிகன்&lt;/a&gt;லாம் கூட&amp;nbsp;பார்க்கமுடியாதுப்பான்னு&amp;nbsp;ஓடிட்டாங்க..&amp;nbsp;ஆனா நான் தனியா &amp;nbsp; சிடிலபார்த்தேன்..அப்படி&amp;nbsp;ஒருவீரன்கிட்ட நீ&amp;nbsp;&amp;nbsp; பேசிட்டு இருக்கே&amp;nbsp;பவி! அச்சம்தவிர் தெரிஞ்சுதா? ம்ம்ம் இன்னிக்கு..ரண்டுல ஒண்ணு பாத்துடறேன்.. ஆமா .நீயும் மறுபடி அந்தப்படம் பாக்கபோறே என்கூட இப்போ, சம்ஜே? மனசிலாயீ? கொத்தாயித்தா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானா? நோ&amp;nbsp; நோ... பய பய எனகு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அட! ச்சும்மா இப்படி வந்து இந்த மதுரைவீரன் பக்கத்துல உக்காரு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தயங்கிஅவன் அருகில் உட்கார்ந்துகொண்டாள் பவித்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-s0BQMK3rU_A/TtL2AkF_i_I/AAAAAAAAAyo/7uHtleOqkIM/s1600/1408poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" hda="true" height="320px" src="http://3.bp.blogspot.com/-s0BQMK3rU_A/TtL2AkF_i_I/AAAAAAAAAyo/7uHtleOqkIM/s320/1408poster.jpg" width="216px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&amp;nbsp;பவித்ரா " வேடா வேடா " என்றாள்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&amp;nbsp;வேடா?யார் வேடன்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல...மூவி பாக வேடா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் பாக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாஆமா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பாக்கணும்..நீ வேணும்னா கண்ண மூடிக்கோ.."&lt;br /&gt;&lt;br /&gt;டிவிடி ப்ளேயரில் 1408&amp;nbsp;என்னும்&amp;nbsp; அந்தப்&amp;nbsp;பேய்ப்படம்&amp;nbsp; ஆரம்பமானது.ஸ்டிஃபன்கிங் எழுதியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஹ என்ன பெரிய ஹாலிவுட்படம்னா&amp;nbsp; உடனே பயப்படணுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; ப்ரபாகர் கிண்டலாய் சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில நிமிடங்களில் அவனுக்கு முகம் வியர்க்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில நிமிடங்கள் ஆனதும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாடியோவ்...பயங்கரமா இருக்கே... பிசாசு இங்கயே வந்துட்டமாதிரி இருக்கு? உடம்பெல்லாம் ந நடு டுங்குதே..ஆ...ஐயொ..அம்மா... ரத்தவாந்தி எடுத்துடுவேன் போலிருக்குதே.....&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;என்று அலறினான்.அப்படியே மயக்கமாகி சோபாவில் சரிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பவித்ரா&amp;nbsp; படத்தில் ல்யித்திருந்தவள் திரும்பினாள்.&lt;br /&gt;" ஐய்யெய்யோ.என்னாச்சு ப்ரபாகர்&amp;nbsp;ஏன்&amp;nbsp;இப்படிகூச்சல்போடறே,முத&amp;nbsp;தடவை பயமாத்தான் இருக்கும்&amp;nbsp;ஆனா&amp;nbsp; இப்போ நான்&amp;nbsp; சுத்தமா பயப்படாம ரசிச்சி &amp;nbsp;பாக்கறேன்..ஆமா என்ன&amp;nbsp;பயந்துட்டீயா நீயும்?"என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான்&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென தனக்கு மெய்யெழுத்துக்கள் மீண்டுவந்ததை உணர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ்வ்வ்வ்வ்வ்! ஐ காட் இட் யா"என்று கைதட்டிக்கூவினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயக்கம் சற்று தெளிந்த ப்ரபாகர் கண்விழித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;,"பவிரா! எனகு பயமா இருகு....இபடி ஒரு சினிமா, என வாகல பாததில.. முதல அத நிறுது...வேடா வேடா ...நிறுது நிறுது"என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஐய்யோ..ப்ரபாகர் உனக்கு&amp;nbsp;என்னாச்சு ? எனக்கு சரியாயிடிச்ச்ச்சே...உனக்கு இப்போ மெய்யெழுத்துப்போச்சே ஓ மை &amp;nbsp;காட்!. இப்போ நீமாட்டிக்கிட்டியா...&amp;nbsp; “&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-7567384664128768590?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/7567384664128768590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=7567384664128768590&amp;isPopup=true' title='59 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/7567384664128768590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/7567384664128768590'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/11/blog-post_29.html' title='மெய் மறந்த  காதல்!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-s0BQMK3rU_A/TtL2AkF_i_I/AAAAAAAAAyo/7uHtleOqkIM/s72-c/1408poster.jpg' height='72' width='72'/><thr:total>59</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-7822207787620631907</id><published>2011-11-21T22:52:00.000+05:30</published><updated>2011-11-21T22:52:02.157+05:30</updated><title type='text'>அகமும் புறமும்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-W6f6CY74i24/TsqFhzpRRaI/AAAAAAAAAyg/Dyja2-k84Sw/s1600/9060847-baby-playing-with-flower.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" hda="true" height="426px" src="http://4.bp.blogspot.com/-W6f6CY74i24/TsqFhzpRRaI/AAAAAAAAAyg/Dyja2-k84Sw/s640/9060847-baby-playing-with-flower.jpg" width="640px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆபீசிற்குள் நுழைந்த அரைமணியில் செல்போன், 'நீ நடந்தால் நடை &lt;br /&gt;அழகு’&amp;nbsp;என்கிறது.பழையபாட்டுதான் ஆனால் அழகென்ற சொல் பலமுறைவருவதால் எனக்கு இந்தப்பாட்டுப்பிடிக்கிறது.&amp;nbsp; அழகின் ரசிகன் நான்!&lt;br /&gt;&lt;br /&gt;'காபி'னைவிட்டு நழுவி காரிடருக்கு நடந்தபடியே போனில்,"விஜி! வீட்டைவிட்டு புறப்படறப்பவே சொன்னேன் இல்ல, இன்னிக்கு முக்கியமான மீட்டிங்னு? இன்னும் பத்து நிமிஷத்துல நான் அதுக்குத் தயாராகணும்..இப்பொ எதுக்கு போன் செய்றெ? என்கிறேன் கொஞ்சம் கோபத்துடனே.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஏற்கனவே காலை ஆபீசிற்குப் புறப்பட காரை எடுத்து வெளியே வந்தபோது, சாலையில்&amp;nbsp; ஃப்ளாட்டின் எதிர் மரத்தடியிலிருந்து அந்த தொழுநோயாளி ஓடிவந்துகார் கதவின் ஜன்னல் அருகே வந்து &amp;nbsp;என்னிடம் பிச்சைக்குக் கை ஏந்தியபோது 'போபோ'என்று சீறிவிழுந்ததின் தாக்கம் இன்னமும் முற்றிலுமாய் மறையவில்லை.&amp;nbsp; அசிங்கம் பிடித்த அந்த தொழுநோய்க்காரனைப்பார்க்கவே பிடிக்கவில்லை.எனக்கு எல்லாமே&amp;nbsp; என்னைப்போல் சுத்தமாய் அழகாய் இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்முனையில் அழகி- என்மனைவி- பேச ஆரம்பிக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியுங்க .ஆனாலும் முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்ட்டேன்.. உங்கப்பா ஊர்லேந்து கொஞ்சநேரம் முன்னாடி வந்துட்டாரு.."&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் அன்னிக்கே போன்ல சொல்லி இருந்தாரே ' மகேஷ் பிறந்த நாளுக்கு சென்னைக்கு முதநாளே வந்துடறேன்'ன்னு?'..இத சொல்லவா போனு?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ..அவர்மட்டும்வரலேங்க கூடவே அந்தபொம்பளயும் வந்திருக்காங்க"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஜி இப்படிச்சொன்னதும்"வ்வாட்?" என்கிறேன் எரிச்சலாய். உடனேயே விஜி குறிப்பிட்ட அந்தப்பெண்ணின்முகம் கண்முன் வந்து நிற்கிறது. அந்த தீய்ந்துபோனகன்னங்களும் மோவாயும் , எரியும் நெருப்பில் உருக்குலையும் ப்ளாஸ்டிக் தாளாய் கழுத்தும் ,சிதிலமானநெற்றியும் ....ய்யக்...நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளைப் போய் எதுக்கு கிராமத்திலிருந்து இழுத்திட்டுவந்திருக்கிறார் அப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;போனமாதம் கிராமத்துக்கு வாரவிடுமுறைக்கு நான் மட்டும்&amp;nbsp; சிலமணிநேரங்கள் தங்கிவருவதற்காக போனபோது அவளை வீட்டுவாசலில் திண்ணையில் பார்த்தேன். .குமட்டிக்கொண்டு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"யாருப்பா அவங்க கோரமா, பாக்கவே அருவெறுப்பா இருக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"வேண்டப்பட்டவங்கதான் ரவி"&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அண்மையில் ஓய்வுபெற்ற பள்ளி வாத்தியார் .அதிகம் பேசமாட்டார் அதுவும் நாலுவருஷம்முன்பு அம்மா போனதிலிருந்து பேச்சையே குறைத்துவிட்டார். அப்பா பார்க்கவும் அழகாயிருப்பார். பலர் என் அண்ணன் என்று நினைத்துக்கொண்டு அப்பாவிடம் பேச ஆரம்பிப்பார்கள்! நேர்மை நாணயம்&amp;nbsp; அன்பு&amp;nbsp; இரக்கம்&amp;nbsp; போன்ற குணங்களால் ஒரு மனிதனின் முகம் பொலிவாக இருக்கும் என்றால் அதற்கு என் அப்பாவையும்&amp;nbsp; உதாரணமாய் சொல்லலாம்!என்னோடு சென்னைக்குவந்து தங்கச்சொல்லி பலமுறை கெஞ்சிப் பார்த்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வீடு நிலம் இருக்குதேப்பா..எல்லாத்தியும் கவனிச்சிட்டு நான் உடம்புக்கு&amp;nbsp;முடியறவரைக்கும் இங்கயே இருக்கேன்,, ஏதும் விசேஷம்னா உன் இடத்துக்கு அவசியம் வரேனே?'என்றார் .&lt;br /&gt;&lt;br /&gt;வற்புறுத்த முடியவில்லை .அப்பாவின் முடிவுகளில் அர்த்தம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனாலே அப்பாவிடம் அந்தப் பெண்மணிபற்றி அதிகம் கேட்கவும்தயக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் போனவாரம் கிராமத்திலிருந்து என்னைப்பார்க்க வந்த என் பள்ளி நண்பன் ப்ரகாஷுடன் பேசும்போது தெரிந்தது அந்தப்பெண்மணி இன்னமும் அப்பாவோடுதான் இருக்கிறாள் என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;விஜி கூட கிண்டலாய் ,"உங்கப்பாவோட அந்த நாள் கேர்ல் ஃப்ரண்டோ என்னவோ ?வயசு காலத்துல அந்தம்மா அதிரூப சுந்தரியா இருந்திருக்கலாம்... இப்பொ பழய நெனப்புல இழைய வந்திட்டாங்க போல இருக்கு...ஆனாலும் அறுபதுவயச நெருங்குற உங்கப்பாக்கு புத்தி இப்டிபோகவேணாம் ?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜி சொல்வது நிஜம்தானோ?&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, நீ போனை வை..நான் வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட பேசிக்கறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் லீவுபோட்டுவிட்டு&amp;nbsp;&amp;nbsp; அதிரடியாய்&amp;nbsp;வீட்டிற்குவருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அழைப்புமணியை அடித்தேன் கதவுதிறந்தது கதவுக்குபின்னால் ....&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கோரமுகம் கண்டு எரிச்சலுடன்முறைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"விஜ்ஜீஈஇ எங்க தொலைஞ்சே?" எட்டூருக்குக் கேட்கிற மாதிரி கத்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க ?"என்று விஜி ஓடிவருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"குழந்தயக் குளிப்பாட்டிகிட்டு இருந்தேன் ..காலிங்பெல் சத்தமே கேக்கல எனக்கு... உங்கப்பா ரூம்ல தூங்கறார் போல்ருக்குது...?"&lt;br /&gt;&lt;br /&gt;நான் எரிச்சலுடன் அப்பா படுத்திருந்த அறைக்குள் நுழைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னதாய் குறட்டைவிட்டபடி தூங்கிக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி," என்னப்பா இதெல்லாம் தேவையா உங்களுக்கு?" என்று கடுப்புடன் கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா இடுப்பு வேஷ்டியை இறுகக் கட்டியபடியே எழுந்து உட்கார்ந்தவர்,&lt;br /&gt;&lt;br /&gt;"அடடே ரவி வந்திட்டியாப்பா ?சாயந்திரம்தான் நீ வருவேன்னு விஜி சொன்னா..சரி ,குட்டிதூக்கம் போடலாம்னு படுத்தென் .நாளைக்கு உன்பையன் பிறந்தநாளுக்கு நான் ஃப்ரெஷா சுறுசுறுப்பாத்தெரியணுமில்ல?" என்கிறார் புன்னகைத்தபடி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ! ரொம்பவே சுறுசுறுப்பாத்தான் தெரியறீங்க !வாலிபம் திரும்புதில்ல உங்களுக்கு? ஏன்ப்பா, தெரியாமத்தான் கேக்கறேன் அந்த பொம்ளைய எதுக்கு இங்கயும் கூட்டிவந்தீங்க? இதெல்லாம் ஸோஃபிஸ்டிகேட்டட் ஃப்ளாட்ஸ்.ரொம்ப டீசண்ட்டான ஜனங்க வசிக்கறஇடம் .இங்க&amp;nbsp; அந்த தீஞ்சிபோன அசிங்க&amp;nbsp;முகத்துக்காரப் பொம்பளை எதுக்கு வந்திருக்கா?”&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி..அவங்க வரேன்னு சொல்லலப்பா...நாந்தான் அழைச்சிட்டுவந்தேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;"விலைகொடுத்து வாங்கற பொருளோட சில நேரங்களில் ஒட்டிக்கிட்டு வருமே ஒண்ணு , அதுமாதிரி இலவச இணைப்பா? இலவச இணைப்பெல்லாம் எனக்குத்தேவைஇல்லை.”&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி! விலை மதிப்பில்லாத பொருள் கூட ஒட்டிக்கிட்டு வந்திருக்கிற இலவச இணைப்பு நாந்தான்ப்பா”&lt;br /&gt;&lt;br /&gt;”என்ன உளற்றீங்க ?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி... சொல்லாம இனியும் மறைக்கமுடியாது. சில தர்மங்களை நிலை நிறுத்தணும்னா கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியாம போகக்கூடும்னு சொல்வாங்க..இப்போ அது நிஜம்னு நிரூபணமாகுது..ஆமாம்ப்பா... முப்பதுவருஷம்முன்னாடி உங்கம்மா பிரசவத்துல வயித்துலேயே இறந்துபோன குழந்தையைத்தான் பெத்தெடுத்தா..&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேகுழந்தை பிறக்க வாய்ப்பில்லைனு டாக்டர்சொல்லிய அந்த நேரத்துல உங்கம்மாவோட சிநேகிதி கமலா ,'என் புருஷன் மூணுமாசம் முன்னாடி ,குழந்தைவயத்துல இருக்கறப்போவே செத்துட்டாரு.நானும் அனாதை உறவுன்னு யாருமில்ல..&amp;nbsp;இப்போ உன் குழந்தையை நீ இழந்த சமயத்தில எனக்கும் குழந்தை பொறந்திருக்கு இது இனி உன்குழந்தையா வளரட்டும்..நான் அம்மான்னு சொந்தம் கொண்டமாட்டேன்..நீங்க ரண்டு பேரும் தான் குழந்தைக்கு அப்பா-அம்மா.இதை&amp;nbsp; நாம் எல்லாருமே சத்திய வாக்கா &amp;nbsp;நினைச்சிக்கணும் ".ன்னு சொல்லி எங்க கைல உன்னைக் கொடுத்தா...பாலூட்டி உன்னை வளர்க்க கூடவே இருந்தா...&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஒன்றரைவயசு குழந்தையா இருக்கறப்போ&amp;nbsp;கார்த்திகை&amp;nbsp;தீபம் அன்னிக்கு&amp;nbsp;விளக்குல விளையாட்டா நீ ஏதோ செய்யப் போக&amp;nbsp; உன்னைக் காப்பாத்த செய்தமுயற்சில கமலாவோடநைலக்ஸ் சேலைல நெருப்பு பிடிச்சி வேகமா பரவி தலையிலிருந்து பாதம் வரைக்கும் உடம்புதோல், தீக்கு இரையாயிடிச்சி. அவங்க உயிரைத்தான் எங்களால காப்பாத்தமுடிஞ்சிது. ஆனா ஆஸ்பித்திரிலிருந்து திரும்ப வீடுவராமல் எங்ககிட்ட எதுவுமே சொல்லாம,எங்கயோ போனவளை போனவாரம் திருச்செந்தூர்ல கோயில் வாசல்ல பிச்சை எடுத்துட்டு நிற்கிறபோது பாத்தேன்.”மன்னிச்சிடுங்க அண்ணா...இந்தமுகத்தோட உங்கவீட்ல இருக்கக்கூடாது குழந்தை பயப்படுவான்னுதான் சொல்லாம ஓடிப்போனேன்”ன்னா...வற்புறுத்தி கிராமத்துவீட்டுக்குஅழைச்சிட்டு்ப்போனேன்.’உன்&amp;nbsp;பேரனுக்குப்பிறந்தநாள்வரப்போகுதும்மா..&amp;nbsp;பேரனை ஒருவாட்டிப் பாத்துட்டுப்போ'ன்னுசொன்னேன் தயங்கித்தான் கமலாவும்-அதாவது-உன் அம்மாவும் &amp;nbsp;வந்திருக்கா இங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா நீண்ட நேரம் பேசிய களைப்பில் பெருமூச்சு விடுகிறார். விஜி திகைப்புடன் என்னையே பார்க்கிறாள்.நான் வேதனையுடன்," என்..&amp;nbsp;&amp;nbsp; என்னைப்பெத்த&amp;nbsp;&amp;nbsp;தா...&amp;nbsp;தாயா அவங்க?&amp;nbsp;ஐயோ&amp;nbsp;கடவுளே!" என்று கதறி நிமிர்ந்தபோது&amp;nbsp; அந்த அறையின் நடுசுவரில் அலங்காரத்திற்காக&amp;nbsp;மாட்டப்படிருந்த அழகிய நிலைக் கண்ணாடி. புறம் காட்டியதாய் தெரியவில்லை. என அகத்தின் அழுக்கை&amp;nbsp; தான் பிரதிபலிக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;பரிதவிப்புடன் ஹாலிற்கு ஓடிவருகிறேன், அங்கே என் அம்மா இல்லை.வீட்டில் எங்குமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே சாலைக்கு வேகமாய் வந்த என்னைப் பார்த்ததும், எதிரே மரத்தடியில் உட்கார்ந்திருந்த அந்த தொழு நோயாளி பயத்துடன்&amp;nbsp;&amp;nbsp; வேறுபக்கமாய் நகர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் , அவனைத் தொடர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;**************************************************************** &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-7822207787620631907?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/7822207787620631907/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=7822207787620631907&amp;isPopup=true' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/7822207787620631907'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/7822207787620631907'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/11/blog-post_21.html' title='அகமும் புறமும்.'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-W6f6CY74i24/TsqFhzpRRaI/AAAAAAAAAyg/Dyja2-k84Sw/s72-c/9060847-baby-playing-with-flower.jpg' height='72' width='72'/><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-691299341518804871</id><published>2011-11-18T19:56:00.002+05:30</published><updated>2011-11-18T20:24:15.446+05:30</updated><title type='text'>குலம் தரும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wJJxWVodz4I/TsZqwj35ZRI/AAAAAAAAAx0/1-EgjM-PEpQ/s1600/Rajagopuram.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" hda="true" src="http://4.bp.blogspot.com/-wJJxWVodz4I/TsZqwj35ZRI/AAAAAAAAAx0/1-EgjM-PEpQ/s1600/Rajagopuram.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;விளையாட்டுப்போல ஆறுவருடங்கள்.! இரண்டாயிரம் நாட்கள்.!காலக்கணக்கை விட்டுத்தள்ளுங்கள் ஒரு மாபெரும் கனவல்லவா நனவாகி விட்டிருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;மணவாளனுக்கு அந்தக் கோபுரத்தை பார்க்கிறபோது அதன் நீள அகல பௌதீகப் பரிமணங்களை எல்லாம் தாண்டி மஹாபலிக்கு முன்னாலே திருவிக்ரமனாக நெடிதுயர்ந்து நின்ற நெடுமாலே நினைவுக்கு வந்தார். இருநூற்று முப்பத்தாறடி உயரத்தில் பதிமூன்றடுக்கு கோபுரம்! ஊரில் உள்ள 21 கோபுரங்களுள் இதன் சிகரப்பகுதி மட்டும் மொட்டையாக நின்றது.. இன்று ராஜகோபுரமாய் விண்ணைத் தொட்டு நிற்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்னதிலிருந்து ஒரு பெருசு. விதைக்குள்ளிருந்து விகசித்துக் கொண்டு விருட்சம் வெளிப்படுகிறதே அதுபோல்!&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனுக்கு லட்சியம் என்று ஒன்று இருக்கணும் அந்த லட்சியம்-இலக்கு- உன்னதமாக இருக்க வேண்டும் இருந்துவிட்டால் அது நிறைவேறியே தீரும் அதற்கு சாட்சி இந்தக் கோபுரம் மணவாளன் பெருமூச்சு விடுகிறான். அவனுக்குக்கூட ஓர் ஆசை,ஒருகனவு ,ஒரு லட்சியம் இருக்கிறது ரொம்பக் காலமாக இருக்கிறது அதை வாய்விட்டு யாரிடமும் அவனால் சொல்ல இயலவில்லை சொல்லி என்ன பயன்? ஏழை கனவு காணக்க்கூடாது அவனுக்கு அந்த உரிமை இல்லை அவன் அப்பாகாலத்தில் குடும்பம் ரொம்ப செழிப்பாகத்தான் இருந்தது அந்தப் பரம்பரையில்வந்த தோஷம்-ஒருவேளை-அதுவே வியாதியாகப்போயிற்றோ?&lt;br /&gt;&lt;br /&gt;மணவாளனுக்கு இன்னமும் எட்டுக்கல் விட்டெறிகிற நினைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"மணவாளா! கோபுரத்திருப்பணிக்கு ஒரு சீட்டு வாங்கிக்கிறியா? "கேட்டவர் இளையாழ்வார்&lt;br /&gt;&lt;br /&gt;தபாலாபிசில் வேலை பார்த்து சமீபத்தில் ரிடையர் ஆனவர் எந்த நேரமும் அவர் கையில் நன்கொடை ரசீதுடன் ஊரில் வளைய கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்கணும் சாமி கட்டாயம் வாங்கணும்" என்றான் மணவாளன்.&lt;br /&gt;"பத்துருவா தான் ஒருசீட்டு கிழிக்கட்டுமா?'&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பொ வேண்டாம் சாமி கையிலே பணமில்லை,,ஒரு சீட்டு என்ன சாமி நூறு சீட்டு வாங்கறதா நேர்ந்துட்டு இருக்கேன்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளையாழ்வார் தபாலாபீசில் சேமிப்புக்கணக்கு இன்ஷ¥ரன்ஸ் எல்லாம் வரவு செலவு செய்பவர் அவர் மனசு கணக்கு போட்டது ஓராயிரம் ரூபாயாவது இவன் இந்த ஜன்மத்தில் சேர்க்கிறதாவது?அப்பன் பாட்டன் காலத்திலே வகையாய் வாழ்ந்துடாங்க இல்ல அந்த நினைப்பு விடல்ல... பாவம் மணவாளன்..&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வேறு ஆள் பார்க்க நகர்ந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிக்கு சொல்லியாயிற்று இளையாழ்வாரிடம் ..ஏண்டா அப்படிச் சொன்னோம் என்று மணவாளனுக்குத்தோன்றவே இல்லை ஆயிரம் ரூபாய் என்பது பெரிய தொகையா?பெரிய பெருமாள் மனசு வச்சா தாயார் கடைக்கண் பார்த்தா ஆயிரம் என்ன லட்சம் கூட தீயினில் தூசாகும்!&lt;br /&gt;திருமங்கை மன்னர் ஒருராத்திரியிலெயே மதில் கட்டினாராம&lt;br /&gt;அம்மாடியோவ்! அவங்க எல்லாம் மனுஷங்க இல்ல...தெய்வம்!&lt;br /&gt;&lt;br /&gt;மணவாளன் பெருமூச்சு விடுகிறான்&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போவ்" &lt;br /&gt;&lt;br /&gt;கனவு கலைகிறது&lt;br /&gt;&lt;br /&gt;எதிரே மகள், பெயர் நப்பின்னை இதுலே எல்லாம் குறைச்சல் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;வாய்த்தபெண்டாடியின் பெயர் நாச்சியார் மகன் நம்பி-தாத்தாவின் பேர் கடைகுட்டி வகுளாபரணன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நம்பிப்பயல் ஸ்டேட் ·ப்ஸ்ட் வருவாவானென்று மணவாளன் கனவு கண்டான் கடைசியில் என்னவென்ரால் அவன் நம்பரே பேப்பரில் வரவில்லை ஒருதடவை இரண்டுதடவை உஹும் அவன் நம்பர் வரவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் நம்பி டூரிஸ்ட் பஸ் ஏதும் வராதா யாராவது வடநாட்டுக்காரன் அதிர்ஷ்டவசமாய் வெளினாட்டு ஆசாமி கிடைக்க மாட்டானாஎன்று அலைகிற டூரிஸ்ட் கைடாகப் போய்விட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;தானாகக் கைவந்த கலை-கேட்டுக்கேட்டுப் பழகிய பழம் பெருமைகளை புது மெருகுடன் உடைசல் ஆங்கிலம் தெலுங்கு இந்தியுடன் சமயத்திற்குத்தக்கவாறு எடுத்துச் சொல்லி ஒருநாளில் அதிக பட்சம் முப்பதுரூபாய் சமபாதித்து காலத்தை கழித்துவருகிறான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போவ்' மறுபடி கூவினாள் நப்பின்னை&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா?'&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்கூல் ·பீஸ் கட்டணும் நாலைக்கு கட்டாட்டி பேரை அடிச்சிருவாங்களாம்.."&lt;br /&gt;&lt;br /&gt;மணவாளன் அவளை நிமிர்ந்து பார்த்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நப்பின்னையின் கண்கள் அழகாய்ப் பெரிதாய் காதளவு நீண்ட கண்கள்-அவனைப்போலவே அவளும் கனவு காண்கிறாள் என்பதை நினைவூட்டின&lt;br /&gt;"நாளைக்குத்தானேகட்டணும் கட்டிட்டாப் போச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;"போங்கப்பா! நீங்க இப்படித்தான் சொல்வீங்க ஆனா முடியலன்னு கடேசில கட்டமாட்டிங்க" சிணுங்கியபடியே அவள் நகர்ந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பெண்கூட என்னை எவ்வளவு நன்றாக எடை போட்டு வைத்திருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;நம்பி அவசரவசரமாக வந்தான்&lt;br /&gt;"அப்பா இருபது ரூபா குறையுது,,, உங்கிட்ட இருக்குமா?; என்று கேட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா என்ன விஷயம்?"&lt;br /&gt;&lt;br /&gt;நம்பி பதில் சொல்வ்சதற்குள்"நமஸ்காரண்டி" என்றபடியே ஒரு நடுத்தரவயது மனிதர் உள்ளே நுழைந்தார்&lt;br /&gt;&lt;br /&gt;"பாவம்பா..ஆந்திராக்காரராம்..நம்ம ஊருக்கு வந்த இடத்துல இவர் பையை எவனோ திருடுட்டானாம். கோயில்ல மண்டபத்துல தவிச்சிடிருந்தாரு...யாரும் இவர லட்சியம் செய்யல.. நாந்தான் பாத்து விவரம் கேட்டேன்...என் கையிலே இருபது ரூபா இருக்குது நீங்க ஒரு இருபது ரூபா கொடுத்தா டிக்கட் வாங்கி சொந்தக்காரங்க ஊருக்கு- பக்கத்துலதானாம்- போயிட்றராம் ..ஊரு போயிச் சேர்ந்ததும் பணம் திருப்பிடுறேங்கறாரு.."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணவாளன் பெருமூச்சு விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிக்குப்ப்பிறந்தது பூனையாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்போலவே நீயும் பைத்தியக்கரானாய் இருக்கியேடா? அவனவன் ஆளுகிடச்சா தேட்டை போட்றான் நீ என்னடான்னா கைக்காசை எடுத்து தானம் கொடுக்கிறேங்கறே.... வம்சாவளிடா எல்லாம் வம்சாவளி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் மௌனம் மகனுக்குப் புரிந்து போனது&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் அந்த ஆந்திரவாடு இருபதுருபாயோடுதான் புறப்பட்டுப்போனார்&lt;br /&gt;&lt;br /&gt;கும்பாபிஷேகத்துக்கு நாள்கூட வைத்துவிட்டர்கள் இப்போது மணவாளன் அந்த ஆயிரம் ரூபாயை கோபுரத்திருப்பணிக்குச் செலுத்திவிட பரபரக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திண்ணையில் படுத்தபடியே ஆகாயத்தைப் பார்த்தவனுக்கு ஒருவழியும் புலப்படவில்லை. இந்தத்திருப்பணிக்கு எங்க வம்சத்துக் காணிக்கை எப்படியாவது போய்ச்சேரணும் பணம் செலுத்தறதா நேர்ந்துட்டிருக்கக்க்கூடாது அப்படி நேர்ந்துக்கிட்ட பிறகு அதை செலுத்தாம இருந்தா அது பேரன் பேத்திகாலம் வரைக்கும் தொடர்ந்துகிட்டு இருக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகியமணவாளா! நம்பெருமாளே! உன் திரு உள்ளம் என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'குலம் தரும் செல்வம் தரும்&lt;br /&gt;&lt;br /&gt;அடியார்படுதுயராயினவெல்லாம்..'&lt;br /&gt;&lt;br /&gt;வாய் பாசுரம் முணுமுணுத்தபடி இருக்க கண் மூட ஆரம்பித்தது ஆனால் இனந்தெரியாத துயரம் ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;பெருமூச்சாய் வெளிப்பட்டு அதுவே மெல்ல மெல்ல விம்மலாகி உள்ளேயே அமிழ்ந்து நெஞ்சை அடைக்க ஆரம்பித்துப் பிறகு தூக்கத்தில் கொண்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை நேரமாயிற்றோ திடீரெனத் தன்னை யாரோ வந்து உலுக்கவும் விழித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் என்ன தூக்கம் இன்னமும்?'&lt;br /&gt;&lt;br /&gt;குரல் மிக அருகாமையி;ல் அவனைக்கிட்டத்தட்ட அணைத்துக் கொண்டு ரொம்பவும் அந்நியோன்னியமாய் அதட்டியது மனவாளன் அந்தகுரலைத் துழாவிப்பார்த்தான் எங்கோ கேட்ட குரல்! ஆத்மாவை ஊடுருவும்குரல் !அந்தக்குரலுக்குள் பழமை நெடி வீசிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் என்னைதெரியல....மணவாளா என்னடா,என்ன முழிக்றே?'&lt;br /&gt;&lt;br /&gt;மணவாளன் எழுந்து உட்கார்ந்தான் இப்போது அவனுக்குத்தெரிந்து போயிற்று&lt;br /&gt;&lt;br /&gt;"நீ நீ ...குல சேகரன் இல்ல?"என்ற்வன் சட்டென குதூகலமாகிப்போனவனாய் மனைவியை அழைத்து," ஏய் நாச்சி இங்க வாயேன் இது யார் தெரியுமில்ல,,, குலசேகரன் முழுப்பேரு குலேசுதான் நான் கூப்டுவேன்... நாச்சி !நானும் இவனும் அந்தநாளில் அடிச்சிருக்குற கொட்டம் கணக்கு வழக்கில்ல .."என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடி குலேசைப்பார்த்து," குலேசு பம்பாய்க்கில்ல போனே? எப்படி இருக்கே புள்ளை குட்டிங்க சுகமா?" என்று கேட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" எல்லாரும் நலம்...மணவாளா!உன்னை இவ்ளவு நாள் கழிச்சிப்பார்க்கிறபோது எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா? நம்ம ஊரே மாறிப்போயிருக்குடா இப்போ... ஆனா நீமட்டும் மாறவே இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணவாளன் மெல்லச் சிரித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;"சரி கிளம்பு ?"என்றான் குலசேகரன்&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கே?"&lt;br /&gt;&lt;br /&gt;"முதலிலே கொள்ளிடத்திலே குளிக்கணும்.. எம்பெருமான் சேவை பண்ணீக்கணும் அப்புறமா கோபுரத்திருப்பணிக்காக ஒரு சின்னத்தொகை கொண்டுவந்திருக்கேன் அதை செலுத்திடணும் அவ்வளவுதான் மணவாளா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ!புறப்படலாமே? நாச்சி! மதியத்துக்கு சாப்பாடு தயார் செய்துவை." என்றவன் ஏதோ நினைவு வந்தவனாய் உட்புறம் சென்று சமையற்கட்டில் மனைவியிடம் "வராதவன் வந்திருக்கான், ஒருபாயசம் படைச்சாதான் மரியாதை.." என்று நெளிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாச்சியாரம்மாள் தலையை அசைத்தாள். ஆனல் அவள் எப்படி பாயசம் வைப்பாள் என்பது மணவாளனுக்குப் புரியாத புதிராக இருந்தது பிள்ளையாண்டானோ கிடைத்த இருபதை அந்த ஆந்திரக்காரனுக்கு தானம் வார்த்து விட்டான், தானும் பைசா காசு கொடுக்கவில்லை&lt;br /&gt;செப்படிவித்தை செய்தாலே ஒழிய அடுப்பில் பால் பொங்கவே வழி இல்லை ஆயினும் நாச்சியார் தலை அசைத்ததிலிருந்து ஒருபாரம் நீங்கிய நிம்மதி நண்பர்கள் கொள்ளிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வழிநெடுக பழைய கதையெல்லாம் குலசேகரன் விவரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பம்பாயில் சொந்தவீடு ஒரு கார் மகன் அமெரிக்காவில் படிக்கிறானாம்...&lt;br /&gt;&lt;br /&gt;கேட்கக்கேட்க மணவாளனுக்குப் பெருமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருகாலத்தில் கோபுரமாயிருந்த தன்னுடைய வம்சம், குப்பை மேடாகிவிட்டதையும் ஒருகாலத்தில், குப்பைமேடாயிருந்த் குலசேகரனின் வம்சம் இப்போது கோபுரமாகி விட்டதையும் எண்ணிப்பார்க்கிறபோது அந்த வியப்பு பெரிய வினாக் குறீயாக மாறிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;"மணவாளா! ஒரு பத்தாயிரம் ரூபா கோபுரத் திருப்பணிக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன் ஆனாலும் பாருடா எனக்கு உன்னைப் பார்த்தா பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் கூட இருக்கு. என்னால தரமுடிஞ்சதெல்லாம் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் ..ஆனா நீ, உன் உழைப்பை ரத்தத்தை வேர்வையை மூச்சை என்று எல்லாத்தியும் ஆத்மார்த்தமாய் பெருமாளுக்குச் செலுத்தி இருக்கியேடா!நானெல்லாம் காசுபணம் என்று ஊரைத் துறந்து போனவன் ஆனால் நீ அப்படி இல்லடா....பொறந்தமண்ணை மதிச்சி அதுக்கு உயிரைக்கொடுக்க வாழ்ந்திட்டு இருக்கிறவன்.”&lt;br /&gt;&lt;br /&gt;மணவாளனுக்கு இந்தப்பேச்சு சற்று சமாதானமாக இருந்தாலும் நேர்ந்துகிட்டதை தன்னால் நிறைவேற்றமுடியாது என்பதால் ஏற்பட்ட ஏக்கம் பெருமூச்சாக வெளிப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;"மணவாளா !என்னால இந்தப் பத்தாயிரம் ரூபா இப்போ கொடுக்கமுடியுதுன்னா அதுக்கு யார் காரணம் தெரியுமா?"&amp;nbsp;தொடர்ந்து &amp;nbsp;வினவினான் குலசேகரன்&lt;br /&gt;&lt;br /&gt;மணவாளன் விழித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;"நீதான் காரணம், உங்ககுடும்பம் காரணம் ! நீங்க ஏத்தி வச்ச விளக்கு கார்த்திகை தீபமாய் எரியுதுடா.."&lt;br /&gt;&lt;br /&gt;"குலேசு, நீ என்ன சொல்றே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டா? மறந்திட்டியா? அப்போ நான் பம்பாய் போகிறபோது உங்கப்பா என்னை ஆசிர்வாதம் செய்து பணம் கொடுத்தாரே,ஞாபகமில்லயா உனக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா? இருக்கலாம்... அவர் காலத்தில் செயலாய் இருந்தாரு கொடுத்தாரு.."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தப்பணத்தில் தாண்டா என் வாழ்க்கையே உன்னதமான நிலைக்கு வந்தது..அட..பணத்தைவிட்டுத்தள்ளு.. உங்கப்பாவிடம் பெற்ற ஆசிர்வாதம் தான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டுவிட்டிருக்குதடா.... மணவாளா..உங்க குடும்பத்துக்குப்பட்ட கடனை எப்படி அடைக்கபோறேனோ தெரியல... பெரியவர்களுக்குச் செய்தால் அதுவே பெருமாளுக்குச் செய்தமாதிரி என்பார்கள். உங்கப்பா பெரியவர் உயர்ந்தவர் அவரோட குடும்பத்துக்குப் பட்ட கடனை இப்போ நான் செலுத்தபோறேன்.. என்னால தரமுடிஞ்சது பணம்தான் அதை உன்னிடம் தருகிறேன் நீ அதை உன் அப்பா பெயரில் கோபுரத்திருப்பணிக்கு செலுத்துவியாடா?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணவாளனுக்கு கண்களில் நீர் சுரந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய தெய்வம் தனது கோபுரத் திருப்பணிக்கு அவன் நேர்ந்து கொண்டதை எவ்வளவு அழகாய் கணக்காய் வசூல் செய்து கொள்ளத் திட்டமிட்டுவிட்டது?&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-eY30Hf3tQto/TsZpwVRT1jI/AAAAAAAAAxs/YkBM8h3c3v4/s1600/srirangam.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" hda="true" src="http://4.bp.blogspot.com/-eY30Hf3tQto/TsZpwVRT1jI/AAAAAAAAAxs/YkBM8h3c3v4/s1600/srirangam.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;எதிரே குலசேகரன், கோபுரமாய், தன்னுடைய கனவின் நனவாய், ஆதர்சமாய் நிற்கக் கண்டான்.&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;***************************************************************************************************************&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;(&lt;strong&gt;கல்கியில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் சிறப்புமலரில் பிரசுரமான&amp;nbsp; (நான் எழுதிய கதைகளில் கொஞ்சம் எனக்கேப்பிடித்த கதை)இது!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-691299341518804871?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/691299341518804871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=691299341518804871&amp;isPopup=true' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/691299341518804871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/691299341518804871'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/11/blog-post_18.html' title='குலம் தரும்!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-wJJxWVodz4I/TsZqwj35ZRI/AAAAAAAAAx0/1-EgjM-PEpQ/s72-c/Rajagopuram.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-2229714494781615635</id><published>2011-11-14T08:25:00.000+05:30</published><updated>2011-11-14T08:25:03.505+05:30</updated><title type='text'>மழலை உலகம் மகத்தானது!(தொடர் பதிவு)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;strong&gt;&lt;span style="background-color: orange;"&gt;'ரோஜாவின் ராஜா’&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-xfZrq7sesQQ/TsBOiZ3K2gI/AAAAAAAAAxU/I7ez4kNn664/s1600/Pandit%252520Jawaharlal%252520Nehru.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="269px" nda="true" src="http://1.bp.blogspot.com/-xfZrq7sesQQ/TsBOiZ3K2gI/AAAAAAAAAxU/I7ez4kNn664/s320/Pandit%252520Jawaharlal%252520Nehru.jpg" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-G2yrhnCOItQ/TsBNmt4LPoI/AAAAAAAAAxM/FNsiXNO9loo/s1600/rainbow-roses05.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="284px" nda="true" src="http://4.bp.blogspot.com/-G2yrhnCOItQ/TsBNmt4LPoI/AAAAAAAAAxM/FNsiXNO9loo/s320/rainbow-roses05.jpg" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&amp;nbsp;ஆசிய ஜோதி !&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;டிஸ்கவரிஆஃப் இந்தியாஎழுதிய எழுத்தாளர்&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;மகத்தானபணிகள் செய்திட்ட மனிதருள்மாணிக்கம்&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;குழந்தைகளால் மாமா என்றழைக்கப்பட்ட மாமணி!&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;பஞ்சசீலக்கொள்கையை உருவாக்கிய சாணக்கியர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் இன்று.தன்பிறந்த நாளைக்குழந்தைகள் தினமாய் தாய்நாடு கொண்டாடவேண்டும் என்றவரைப்பற்றி&amp;nbsp; இன்று எத்தனை குழந்தைகளுக்குத்தெரியும்?&amp;nbsp; திரை நடிகநடிகைகளைத் தெரிந்துகொள்கிற ஆவல் நாட்டின் சுதந்திரவரலாற்றில் இடம்பெற்ற பலதலைவர்களைப்பற்றி அறிந்துகொள்ளமுடியாமல் அவர்களை திசை திருப்புவது எது?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-GTgQbTxAVYc/TsBNPLwS4yI/AAAAAAAAAxE/VuZWAndoh_s/s1600/3436600282_a2f9154d29_b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213px" nda="true" src="http://1.bp.blogspot.com/-GTgQbTxAVYc/TsBNPLwS4yI/AAAAAAAAAxE/VuZWAndoh_s/s320/3436600282_a2f9154d29_b.jpg" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவில் நன்மைகள் பல என்றால் தீமைகளும் சில இருக்கத்தான் செய்கின்றன.&lt;/div&gt;&lt;br /&gt;அவைகளில் முதலிடம் பெறுவது தொலைக்காட்சிப்பெட்டிதான். அமெரிக்காவில் எடுத்தகுறிப்பு் ஒன்றின்படி ஒரு குழந்தை ஒவ்வொருவாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன்பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களைப் பேச வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே செலவிடுவதாக&amp;nbsp; இந்த ஆய்வு தெரிவிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிகளில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் 1023 மணி நேரங்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுகின்றனர். உயர்நிலைப்பள்ளியை முடிக்கும் முன்பு 19 ஆயிரம் மணி நேரத்தை அவர்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுவதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;18 வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு குழந்தை 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் 10,000 வன்முறைகளையும் தொலைக்காட்சி வழியே பார்க்க நேரிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி வன்முறையை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சியை பார்க்கும் சிறுவர்கள் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றும் இதனடிப்படையில் அவர்கள் செயல்களில் இறங்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை என்றும், தொலைக்காட்சி ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல்,&amp;nbsp; சண்டைக்காட்சிகள், கொலை, கொள்ளை, காதல், வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள்.&amp;nbsp; இது பிஞ்சுமனங்களின் நெஞ்சில் நஞ்சாய்ப்பரவுகிறது இவை கற்பனை என்று&amp;nbsp;பெரியவர்களுக்குத்தெரியும் அந்தக்குழந்தைகளுக்கு என்ன&amp;nbsp;தெரியும்?&amp;nbsp;அவர்களின் கள்ளம் கபடம் இல்லா மனத்தினை&amp;nbsp; அசைக்கிறது இந்த காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டரில் வரவர குழந்தைகள் அதிகம் நேரம் செலவழிக்கிறார்கள் ஃபேஸ்புக் ட்விட்டர் எல்லாம் சர்வசகஜமாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவயதுக்குழநதை உணவுசாப்பிட&amp;nbsp; நிலவும் வானும் நினைத்தால் ஐபோனில் கிடைக்கின்றன. உலகத்தைதேடிக்குழந்தைகளைக்கூட்டிபோய் அந்தப்பயணத்தின் இனிமையை அனுபவிக்க வைத்தகாலம்போய் உலகமே குழந்தையின் கையில் வந்துவிட்ட விஞ்ஞானமுன்னேற்றத்தின் விளைவு இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலம் மாறிவிட்டது ஆண்களோடு பெண்களும் வேலைக்குப்போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது குழந்தைகளுடன்&amp;nbsp; இயந்திரங்கள் அதிகம் பேசுகின்றன.அதனை வாங்கி வீட்டில்வைப்பது நாம்தான்&amp;nbsp;..ஆனால் டிவி கம்ப்யூட்டர்&amp;nbsp;செல்போன் இல்லாமல் இருக்கமுடியாத காலமாக இருப்பதால்&amp;nbsp;அவைகளை அளவோடு உபயோகிக்க குழந்தைகளை பழக்கவேண்டும்.&amp;nbsp;ஏற்கனவே கூட்டுக்குடும்ப மறந்துபோய் உறவு எல்லை சுருங்கிவிட்ட நிலையில் இயந்திரங்களின்&amp;nbsp;ஆதிக்கம் குழந்தைகளை மிகவும்&amp;nbsp; பாதிக்கிறது.&amp;nbsp;இதனால் மழலைகளின் எதிர்காலத்தில் மானிட மாண்பே அவர்களுக்குதெரியாமல் வாழ்க்கை முற்றிலும் இயந்திரத்தனமாகப்போகும் அபாயம்&amp;nbsp;ஏற்படலாம்.அதைதவிர்க்க குழந்தைகளுடன் நாம்&amp;nbsp;நேரம் செலவழிக்கவேண்டும். அவர்களுடன் மனம்விட்டுப்பேசவேண்டும்.&amp;nbsp; விளையும் பயிரான குழநதைகளின் வேர்கள் நாம்தான் வேரிலே பழுதை வைத்துக்கொண்டு&amp;nbsp; விழுதுகளைகுறை சொல்லிப்பயனில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளின் மைனஸ்பாயிண்டுகளைமட்டும் ஏன் சொல்லவேண்டும்? இத்தனை&amp;nbsp;திசை&amp;nbsp;திருப்பும் சாதனங்கள் &amp;nbsp;இருக்கும்போதிலும் பலர் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதையும் மறுக்ககூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலவருடங்கள்முன்பு கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கரசுப்ரமண்யம் அவர்களுடன் ஒரு சிறுவர் நிகழ்ச்சிக்கு சென்றென் நிகழ்ச்சிமுடிவில் கீழாம்பூர் அங்கிருந்த அந்த பத்துவயது சிறுவர்கள் சிலரிடம்&amp;nbsp; இப்படிக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இவ்வளவு சினிமாபாட்டெல்லாம் பாடுகிறீர்கள் அதற்குஅபிநயித்து&amp;nbsp; நன்றாக ஆடுகிறீர்களே&lt;br /&gt;உங்களில் யாருக்காவது நம் நாட்டு &amp;nbsp;தேசியகீதத்தை முழுக்க பாடத்தெரியுமா அப்படிப் பாடினால் உடனே மேடைக்கு வந்து என் கையால் நூறுரூபாய் தருவேனே?”&lt;br /&gt;&lt;br /&gt;பல&amp;nbsp;குழந்தைகள் இரண்டே வரிகளுக்குப்பிறகு&amp;nbsp; விழித்துக்கொண்டு நன்றன.&amp;nbsp;ஒரே ஒருசிறுவன் முழுவதையும் நன்றாக&amp;nbsp; கூறி முடிக்கவும் ஆசிரியர் அகமகிழ்ந்து&amp;nbsp; மேடையிலேயே&amp;nbsp; 100ரூபாயை அவனிடம் கொடுத்துப் பாராட்டினார். &lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;விழாமுடிந்து நாங்கள் வெளியெ வந்தபோது அந்த சிறுவன கலைமகள் ஆசிரியரை நோக்கிஓடிவந்தான்.. “ரொம்பநன்றி சார் ,நான் தேசியகீதம்&amp;nbsp; பாடினதை பாராட்டினதுக்கு! தேசியகீதத்தை அறிந்திருக்கவேண்டியது்&amp;nbsp;&amp;nbsp; ஒவ்வொரு இந்தியனின் கடமைன்னு என் அப்பா சொல்வார்.நான் கடமையைத்தான் செய்தேன்,.&amp;nbsp; அதற்கு&amp;nbsp;&amp;nbsp; நீங்க&amp;nbsp;தந்த&amp;nbsp;&amp;nbsp;நூறுரூபாயை&amp;nbsp;&amp;nbsp;பொது மேடையில்&amp;nbsp; வேண்டாம்னு சொல்லி&amp;nbsp;மறுக்க தயக்கமாக இருந்தது. அது உங்களை அவமானப்படுத்தும்னு தோன்றியது. அதனால்&amp;nbsp; இங்கே வந்து கொடுக்கிறேன்..” என்று அந்த நூறு ருபாயை அவர்கையில்கொடுத்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;குழந்தைகளிடமிருந்து பலநேரங்களில் நாம் உன்னதமான விஷயங்களை&amp;nbsp; தெரிந்து கொள்கிறோம் என்பதுதான் எவ்வளவு உண்மை?&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அழைப்பு தந்து எழுதவைத்த&amp;nbsp; மின்னல்வரிகள் வலைப்பூவின் சொந்தக்காரர் &lt;a href="http://minnalvarigal.blogspot.com/" target="_blank"&gt;கணேஷு&lt;/a&gt;க்கு&lt;br /&gt;நன்றி கணேஷ் பதிவில் ஏதோ புதிர் போட்டு மின்னூல் பரிசு என்கிறார்..என்னன்னு போய்ப்பாருங்க!&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொல்லியபடி இது தொடர்பதிவு என்பதால் 2ஆண்பதிவர்கள் இரண்டு பெண் பதிவர்களை&amp;nbsp; அழைக்கிறேன். முடிவில் கவிதை ஒன்று எழுதலாமே! முடிந்தால் புதிர்க்கேள்வியையும்&amp;nbsp; எழுப்பலாம்&amp;nbsp;!!!&amp;nbsp;&amp;nbsp;ஏற்கனவே 11-11-11க்கு&amp;nbsp; 11 கேள்வி&amp;nbsp; நான் அனுப்பி பலரை டார்ச்சர் செய்தாகிவிட்டது ஆகவே&amp;nbsp; சின்னக்கவிதையோட முடிக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொம்மைகளை பரப்பிவைத்து&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விளையாடச் சொல்லிவிட்டு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நகர்ந்து செல்லும் தாயையே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பார்த்துக்கொண்டிருக்கிறது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குழந்தை&lt;/strong&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இப்போது நான் அழைப்பவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஆண்களில்.....&lt;a href="http://vaazhveperaanantham.blogspot.com/" target="_blank"&gt;&amp;nbsp;ரசிகன்&lt;/a&gt;&amp;nbsp; மற்றும்&lt;br /&gt;&amp;nbsp;&lt;a href="http://yaathoramani.blogspot.com/" target="_blank"&gt;ரமணி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களில்&amp;nbsp; &lt;a href="http://amaithicchaaral.blogspot.com/" target="_blank"&gt;அமைதிச்சாரல்&lt;/a&gt;&amp;nbsp; மற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://annaiboomi.blogspot.com/" target="_blank"&gt;சாகம்பரி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி நால்வருக்கும்&amp;nbsp; தாங்களும் இதேபோல பதிவு+ ஒரு கவிதை+ முடிந்தால் சின்ன புதிரோடு&amp;nbsp; முடித்து&amp;nbsp; நீங்கள்&amp;nbsp;&amp;nbsp;தொட நினைக்கும்&amp;nbsp;நால்வரை தொடர அழையுங்கள்! மழலைகள் உலகம்&amp;nbsp; பற்றிய&amp;nbsp; பரந்த சிந்தனையை பகிர்ந்துகொள்வோம்!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-2229714494781615635?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/2229714494781615635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=2229714494781615635&amp;isPopup=true' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/2229714494781615635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/2229714494781615635'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/11/blog-post.html' title='மழலை உலகம் மகத்தானது!(தொடர் பதிவு)'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-xfZrq7sesQQ/TsBOiZ3K2gI/AAAAAAAAAxU/I7ez4kNn664/s72-c/Pandit%252520Jawaharlal%252520Nehru.jpg' height='72' width='72'/><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-377937343030689648</id><published>2011-11-11T05:00:00.000+05:30</published><updated>2011-11-11T05:00:24.615+05:30</updated><title type='text'>11 பதிவர்கள் பற்றிய கிசுகிசு(இன்றைய ஸ்பெஷல்)!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-LjVn0vR1W-4/TrwsEZh00FI/AAAAAAAAAwQ/cLjM6kdFnVU/s1600/323499_305156466163503_100000074573184_1239144_2136836945_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="98px" nda="true" src="http://3.bp.blogspot.com/-LjVn0vR1W-4/TrwsEZh00FI/AAAAAAAAAwQ/cLjM6kdFnVU/s320/323499_305156466163503_100000074573184_1239144_2136836945_o.jpg" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;இன்று மேலே குறிப்பிட்ட நேரத்துல என்னென்வோ சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கப்போகிறதாம்!.நம்ம பங்குக்கு சில பதிவர்களைப்பற்றி&amp;nbsp; இப்படி எழுத தோன்றியது கிசுகிசு என்று சும்மா தலைப்பு கொடுத்தால்தான்&amp;nbsp; ஒரு 11பேராவது உடனே ஆஜராவீங்கன்னு தெரியும்! ஆனா&amp;nbsp; நிஜத்துல இது அது இல்ல. பின்ன என்னதுன்னு கேக்கறீங்களா கீழே போங்க&amp;nbsp; இந்த அழகுப்பாப்பாவைப்பார்த்தபடி ! பாப்பாக்கு வயசு 11க்குக்கம்மிதான் ஆனா க்யூட்!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-AX_bbEq7W8U/TrxWBZA3xiI/AAAAAAAAAwk/J2wsc5QPO_Q/s1600/for14th.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" nda="true" src="http://2.bp.blogspot.com/-AX_bbEq7W8U/TrxWBZA3xiI/AAAAAAAAAwk/J2wsc5QPO_Q/s320/for14th.jpg" width="232px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;strong&gt;&amp;nbsp;சரி, எல்லா கேள்விக்கும் சரியா பதில் சொல்றவங்களுக்கு &lt;span style="font-size: large;"&gt;11 மைசூர்பாக் வைத்த&lt;/span&gt; பார்சல் வரும்!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்குறிப்பு....... இதெல்லாம் பதிவர்பற்றிய கேள்விகள்.&lt;br /&gt;கேள்விகளில் இலைமறைவுகாய்மறைவா க்ளூ கொடுக்கப்படும்! &lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகள்&amp;nbsp; இங்கே! எல்லாரும் பரிட்சைக்கு ரெடியா?!&lt;br /&gt;&lt;br /&gt;1.இடி மழையுடன் வருவதில் வரிகளை எழுதுவாராம் .. ஷ்.....சரியா யூகிக்கணும்,யார் இவர்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2,நவரத்தினத்தில் ஒன்றை சரமாய்க்கோத்து பதிவில் போட்டிருப்பவர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3பேர்ல அம்பானால் என்ன பதிவுக(பாடல்)ளில் மலராய் வருடுவாரே!\.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4,திருமால்கோயில் தீர்த்தத்திலும் வாசம்,திருமேனியிலும் வாசம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5பதிவுலகினில் இவர்&amp;nbsp; வைகோ!.&lt;br /&gt;&lt;br /&gt;6இவரது வலைப்பூ கண்டால் சொல்வீங்க ஐ லைக் இட் ’வெரி’ மச் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7சிவனின் வாகனம் பெயரிலும் வலைப்பூவிலும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8,அல்லிக்கு எதுகையாய் அழகுப்பேர்கொண்ட அன்பான (அண்மை) பெண்நட்சத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9,உலகே மாயம் இவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10கல்லிடைகற்கண்டு ரொம்பவே குறும்பு உம்மாச்சிதான் இவரக் காப்பாத்தணும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11கோவலனின் காதலியை பந்தலில் அழைச்சிருக்கிறார்!&lt;br /&gt;******************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: magenta;"&gt;*(இன்று என் மகளின் பிறந்த நாளும்கூட!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: magenta;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: magenta;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-377937343030689648?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/377937343030689648/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=377937343030689648&amp;isPopup=true' title='96 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/377937343030689648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/377937343030689648'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2011/11/11.html' title='11 பதிவர்கள் பற்றிய கிசுகிசு(இன்றைய ஸ்பெஷல்)!'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-LjVn0vR1W-4/TrwsEZh00FI/AAAAAAAAAwQ/cLjM6kdFnVU/s72-c/323499_305156466163503_100000074573184_1239144_2136836945_o.jpg' height='72' width='72'/><thr:total>96</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-116045841171000724</id><published>2011-11-02T05:26:00.001+05:30</published><updated>2011-11-02T05:43:05.064+05:30</updated><title type='text'>மயில்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-SXCXghJVn68/TrCFmXKUEBI/AAAAAAAAAt8/RSBd84HNnIY/s1600/peacock.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ida="true" src="http://3.bp.blogspot.com/-SXCXghJVn68/TrCFmXKUEBI/AAAAAAAAAt8/RSBd84HNnIY/s1600/peacock.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அக்காவின் குழந்தைக்கு ‘மயில்’என்று தான் பெயர் வைக்கவேண்டும் என்று ஆஸ்பித்தி்ரிலேயே சொல்லிவிட்டான் செந்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;"தங்கமயில்னு வைக்கலாம்டா. வெறும் மயிலுன்னா கூப்பிட சரியா இருக்காது. நம்மவீட்டுக்கு இதான் முதப்பேரகுழந்தை..ஆணோ பெண்ணோ தங்கமயில் என்கிற பேருதான் பொதுவா பொருத்தமா இருக்கும்” என்றாள் அவன் அம்மா கோமதி.&lt;br /&gt;&lt;br /&gt;" அதெல்லாம் இல்ல...மயில்தான் சரி. “ செந்தில் பிடிவாதம் பிடிக்கவும் கற்பகம் ,”மயில்தான் உன் மருமக பேரு போதுமா? உங்க மாமாவும் சரின்னுட்டாரு..” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நொடிக்கு&amp;nbsp; நூறு மயில் சொல்லி மருமகளை அழைப்பான் செந்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிற்று மயிலுக்கு ஆறுமாதமாகிவிட்டது மனைவியை அழைத்துப்போக துரை வந்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா அக்கா! திரும்ப மயிலுகூட ஊருக்கு போறப்போ என்னையும் உங்க&amp;nbsp; ஊருக்குக் கூட்டிப் போறியாக்கா?" &lt;br /&gt;&lt;br /&gt;தன் சேலை முந்தானையைத் தொட்டுக் கெஞ்சும் தம்பியை கற்பகம் அதிசயமாய்ப் பார்த்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;பத்து வயது தன்னைவிட இளையவனான தம்பி செந்தில் அவளுக்குக் குழந்தை மாதிரி. செந்திலின் வயதும் பத்துதான். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் குழந்தைத்தனம் விலகாத முகம். பேச்சில் கூட சில நேரங்களில் மழலை வந்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;கடைக்குட்டி என்பதால் சில செல்லச் சலுகைகள்.அந்த உரிமையில்தான் கல்யாணமாகி புகுந்தவீடு போன போது கூடவே செந்திலும் போய்விட்டான்.ஒருமாதம் அந்த கிராமத்தில் உல்லாசமாய் தங்கி வந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;"லே செந்திலு...அதான் கண்ணாலம் ஆன கையோட கற்பகம் பின்னாலயே குடித்தனம் வைக்கப் பெரிய மனுஷனாட்டம் நீயும் அம்மா அப்பா கூட போயிட்டு வந்தியேடா? மறுபடி எதுக்குப் போவணுமாம்?" கற்பகத்தின் முதல் தம்பி அருணாசலம் கிண்டலும் கடுப்புமாய்க் கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் அவனை ஒண்ணும் சொல்லாதடா..பச்சைபுள்ள" கற்பகம் மடியில் தன்குழந்தையை போட்டுக்கொண்டு சின்னத் தம்பியையும் வாரி அணைத்துக் கொண்டாள். கை விரல்களால் தலைமுடியைக் கோதிவிட்டாள் . &lt;br /&gt;&lt;br /&gt;" அவன் பச்சப்புள்ளதான் இன்னமும்.. காலைல எழுந்ததும் புஸ்தகத்தை பிரிச்சி மயில் இறகை எடுத்துகிட்டு கன்னத்துல தேச்சிக்கிறான். அதென்னாவோ மயில் படம் ஏதாச்சிம் புஸ்தகத்துல பாத்தா பரவசமாயிடுறான். நேத்து டீவில ஒரு மயில் டான்ஸ் காட்டினாங்க 'ஆ'ன்னு வாயப் பொளந்துகிட்டு வேடிக்க பாக்கிறான். அதுவும் உன் ஊருக்கு போயிட்டு வந்த பொழுதிலிருந்து, பயலுக்கு மயிலுதான் ஞாபகம்..”&lt;br /&gt;&lt;br /&gt;“அதெல்லாம் இல்ல....அக்காவோட மாமனாரு மாமியாரு வீட்டுக்காரரு எல்லாரும் நான் அங்க போனா சந்தோஷப்படுவாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா..அத்தினி செல்வாக்கு உனக்கு அங்க..என்ன சொக்குப்பொடி போட்டியோ அங்கிட்டு?” அருணாசலம் முணுமுணுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;”செந்திலுக்கு எப்பவும் உங்க ஊர் மலைல நிறைய மயிலு பாத்தகதையே தான் பேச்சு..”&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா இப்படிச் சொல்லவும் கற்பகம்,"அவனும் குழந்தையோட நான் எங்கவீட்டுக்குப்போறப்போ வரட்டுமேம்மா.. என்ன பெரிய பட்டணமா எங்க ஊரு? சாதாரண கிராமத்துக்கு ஆசையா வரேன்னு ஒரு பையன் சொல்றதே அபூர்வம்.. மேலும் அப்போ லீவுதானே பள்ளிகூடத்துக்கு? செந்திலுக்கண்ணா நீ எங்கூட வாடி செல்லம்.. நான் கூட்டிப்போறேன். என் மாமனார் மாமியாருக்கெல்லாம் செந்திலுன்னா உசுரும்மா.. 'என்னா துடிப்புடி உன் தம்பிக்கு? முருகன் பேரை வச்சிக்கிட்டு அவன மாதிரியே அழகாவும் இருக்கான், நாளைக்கு இவன் வளந்து பெரியவனான பிறவு ஆயர்பாடி கண்ணனை சுத்தினமாதிரி பொண்ணுங்க இவனை சுத்தவாங்க'ன்னு சொல்றாங்க...செந்திலு நான் பார்த்து பொறந்த பையன் கடைக்குட்டி அதான் அக்காக்கிட்டயே ஒட்டிக்குவான் அவ்வளோ பாசம்! என்றாள் குரலில் பெருமை வழிய. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் உனக்காக ஒண்ணும் உன் ஊருக்கு வரல.. உங்க ஊரு அஞ்சுமலைப் பாறைமேல உக்காந்துட்டிருக்கிற மயில் கூட்டம் பாக்கத்தான் வரான்." &lt;br /&gt;&lt;br /&gt;"வரட்டுமே, என்ன இப்போ? ஆசைப்படுறான் பாவம். செந்தில் எங்க ஊருக்கு வரட்டும். என் தங்கச்சிக்கு அடுத்த வாரம் நிச்சய தாம்பூலம் வச்சிருக்குதில்ல அதுக்கு நீங்க வரப்போ அவனைக் கூட்டி வந்துக்கலாம். அதுவரைக்கும் அவனும் ஆசையா வளத்த அக்காகூடத்தான் இருக்கட்டுமே?"'மருமகப் பிள்ளை துரையும் இப்படிச் சொல்லவும் கற்பகத்தின் அம்மா வெட்கமும் சிரிப்புமாய் செந்திலைப் பார்த்தபடி சொன்னாள், "சரிப்பா போயிட்டு வா...அக்கா வீட்டு மனுஷங்ளுக்குத் தொல்ல தராம நல்லதனமா நடந்துக்க...புரிஞ்சிச்சா?" &lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் பலமாய்த் தலையை ஆட்டினான். அவன் நினைத்தே பார்க்கவில்லை தன்னை அம்மா அக்காவுடன் அவளுடைய ஊருக்கு அனுப்புவாள் என்று. &lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சுமலை! &lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊரின் பெயருக்கு ஏற்ற மாதிரி ஐந்து சின்ன மலைகளை அருகருகே அடக்கிய சிறு ஊர் அது. மலை என்பதைவிட பெரிய கற்பாறை எனலாம். நெருக்கமாக பெருசும் சின்னதுமான உருண்டை வடிவப் பாறைகள். மூன்று பாறைகள் நெருக்கமாகவும் அதன் இடுக்குகளில் இரண்டு பாறையுமாய் இன்னும் ஒரு பாறை உச்சியில் இருந்தால் முக்கோண வடிவில் தெரியும்படியான அமைப்பிலுமான மலை அது. &lt;br /&gt;&lt;br /&gt;மரமும் செடியுமாய் அதனைச் சுற்றிலும் பரவிக் கிடக்கும். மழையிலும் வெய்யிலிலும் கிடந்ததினால் பாறைகளில் ஒருவிதக் கறுப்பு நிறம் பரவி இருக்கும் இடுக்குகளில் ஏதேதோ செடிகொடிகள் பின்னித் தலை காட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கற்பகத்தின் மைத்துனர் மகன் குமாருடன் செந்தில் அங்கே போனான். குமார் இவனைவிட நாலைந்து வயது மூத்தவன். அவன்தான் சொன்னான் அஞ்சுமலைப் பாறைமேல் நிறைய மயில்கள் கூட்டம் கூட்டமாய் வந்து உட்காருவதாக. &lt;br /&gt;&lt;br /&gt;மயில் இறகிற்கே உயிரை விடும் செந்திலுக்கு அத்தனை மயில்களையும் குமாருடன் நேரில் போய்ப் பார்த்தபோது மூச்சே நின்றுபோனது. "ஏ அப்பா! எத்தினி மயிலுங்கப்பா! " என்று வாய்விட்டுக் கூவிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;குமார், "முதல்ல நாலஞ்சி மயிலுதான் இருந்திச்சி இப்போ மூணு மாசமா மத்துக் கணக்குல பெருகித் தொலைச்சிடிச்சி.." என்றான் வெறுப்புடன். &lt;br /&gt;&lt;br /&gt;குமாருக்கு மயில்கள் பிடிக்காதோ என்னவோ? செந்தில் கேட்க நினைத்தான் கேட்கவில்லை அவன் பிடிக்காதென்று சொல்லிவிட்டால் தனக்கு தாங்கிக் கொள்ள முடியாதென்று தோன்றியது. மயில்களைப் பிடிக்காதவர்கள் இருக்கமுடியுமா? அதன் தோகை அழகில் மயங்காதவர்களும் உண்டோ? &lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் மலையிலிருந்து அங்கும் இங்குமாய் ஓடித்தேடி நாலைந்து மயிலிறகுகளை சேகரித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். &lt;br /&gt;வண்ணங்கள் அமைந்த அந்த இறகுகள் அவனை பிரமிக்க வைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;மயில் இறகைப் பெண்கள் தலையில் பூப்போலச் சூட்டிக்கொண்டால் என்ன என நினைத்தான். வீட்டில் ஒரு கிருஷ்ணர் படத்தில் மட்டும் அவரது தலையில் மயிலிறகைச் சூட்டி வைத்ததைப் பார்த்திருக்கிறான். மலைவாழ் மக்கள் ஒருவேளை தலையில் பறவைச் சிறகுகளை செருகிக் கொள்வதுபோல இதையும் செருகிக் கொள்வார்களோ என்னவோ? மயில்தோகையின் அழகை அவ்வளவாக யாருமே விபரமாகக் கூறவில்லையோ அல்லது தான்தான் அதிகம் படிக்கவில்லையோ எனத் தோன்றியது செந்திலுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;குமாருக்கு அந்த மலையும் மயில்களும் பிரமிப்பை ஏற்படுத்தவில்லை என்பது அவனது பேச்சிலிருந்து செந்தில் உணர்ந்து கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;செந்திலுக்கு, முதல் முறை போனபோது அந்த ஊரில் தன்னைப் போன்ற பையன்கள் பள்ளி விடுமுறை நாளில் விவசாய வேலையை கவனிப்பதும் விறகு சேகரிப்பதும் சாணம் பொறுக்கி உரம் சேர்ப்பதும் பால் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிப்போவதும் கண்மாயில் அவைகளைக் குளிப்பாட்டுவதும் என்று பொறுப்பாக இருந்தது வியப்பாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;குமார்தான் சொன்னான், "ஆமாடா, எல்லாரும் இங்க ஏழை எளிய ஜனங்க..அதான் எல்லாருமே உழைச்சிட்டு இருப்போம்" இருந்த இரண்டு நாட்களிலும் அவனோடு செந்தில் ஊரைச் சுற்றிக் கொண்டேதான் இருந்தான். "மயில் முட்டை பாத்திருக்கியா நீ?" அன்று குமார் இப்படிக் கேட்டதும் உதட்டைப் பிதுக்கினான் செந்தில். &lt;br /&gt;&lt;br /&gt;"மூணு கோழிமுட்டை சைசுல இருக்கும். நீரு காணாத காஞ்ச இடத்துலயோ கொழைதழை நடுவிலியோதான் மயிலுங்க முட்டையிட்டுவைக்கும்.. அதை எடுத்தாந்து இங்க சில ஜனங்க பொறிச்சி திம்பாங்க.. சோத்துக்கு வெஞ்சனமாவும் வச்சிக்குவாங்க..' &lt;br /&gt;&lt;br /&gt;" அய்யே..மயிலு தேசியப் பறவை ஆச்சேடா குமாரு? மேலும் அது முருகனின் வாகனம் இல்லியா அதைப்போயி திங்கலாமா?" &lt;br /&gt;&lt;br /&gt;"அதுசரி சேவல் கூடத்தான் சாமி கொடில இருக்குது?.." கெக்கெக் என குமார் சிரித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;செந்திலுக்கு சிரிப்பு வரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"மயிலு குஞ்சுக பொறக்க விடமாட்டாங்க இங்க. ஆமா... செந்திலு மயிலு குரலு கேட்டதுண்டா நீ? கர்ணகொடூரம்டா எனக்கு மயிலு பிடிக்காத காரணத்துல அதுவும் ஒண்ணு" &lt;br /&gt;&lt;br /&gt;"தோகை அழகு தெரியலியாம், குரலைப் பத்தி விமர்சனம் செய்யவந்துட்டான்.. போடா டேய்." மனசுக்குள் செந்தில் அவனைத் திட்டிப் பார்த்தான். &lt;br /&gt;&lt;br /&gt;"சரி..நான் ஊரு பெரியய்யா வீட்டு புஞ்சையில போயி மயிலுகளை விரட்டிட்டு வரேன்.. ஒரு நாளைக்குக் கூலி அம்பது ரூபா தராங்க இதுக்கு எனக்கு.." &lt;br /&gt;&lt;br /&gt;"மயில விரட்றதா.. ஆயிர ரூவா கொடுத்தாலும் நான் செய்யமாட்டேன்" &lt;br /&gt;&lt;br /&gt;"அதுசரி வயல்ல ஊனி வச்ச வெதைங்களை அதுங்க கொத்தித் தின்னிட்டு போயிட்டா வெள்ளாமையே நடக்காது தெரியுமில்ல?" குமார் கிண்டலாய்க் கேட்டபடி போனதும் அமுதா வந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;அமுதா குமாரின் அத்தை பெண்; பதினாலு வயதிருக்கும்; இரட்டைச் சடையை விரல்ல மாட்டி ஆட்டிக்கிட்டே செந்தில் பக்கத்துல வந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;"என் தாய்மாமனுக்கு நீ சின்ன கொழுந்தனாப்பா?" என்று பாசமாய் கேட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;அக்கா பேசுற மாதிரியே இருக்கவும் செந்தில் மகிழ்ச்சியாய் தலையை ஆட்டினான். "ஆமா" என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;"என் பேரு அமுதா, என் தாய்மாமனுக்கும் உங்க அக்காக்கும் நடந்த கல்யாணத்துக்கு உங்க ஊருக்கு நான் வரமுடில்ல.. அப்போ என்னைய பாம்பு கடிக்க..." முடிப்பதற்குள் செந்தில்,"பாம்பா?" என அலறிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;அமுதா சட்டென்று, "கடிக்க வந்திச்சி செந்திலு.....வயல்ல நடந்துண்டிருந்தவ காலுமேல சரசரன்னு ஏறிடிச்சி..அய்யோன்னு அலறினேன் பாரு, அப்போ பாத்து மயிலு ஒண்ணு வந்திச்சி..பாம்பைக் கொத்திப் பிடிங்கி சாகடிச்சிடிச்சி..நான் பிழைச்சேன், ஆனா பயத்துல ஜுரம் வந்திடிச்சி..அதான் கல்யாணத்துக்கு வரல" &lt;br /&gt;&lt;br /&gt;"அப்படீன்னா மயிலுதான் உன்னைக் காப்பாத்திச்சா அமுதாக்கா?" &lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாப்பா... சினிமால வர மாதிரி எங்கிருந்தோ வந்து என்னைய காப்பாத்திடிச்சி" &lt;br /&gt;&lt;br /&gt;அமுதா விழி உயர்த்தி சொல்லவும் செந்திலுக்கு வியப்பானது. மயில் மீதிருந்த அவனது மதிப்பு கூடியது. "அமுதாக்கா நீ என் கூட வரியா? மயிலு பாக்க மலை ஏறிப் போலாமா?" &lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் மலைநோக்கி நடக்க ஆரம்பித்தனர். ‘மனமே முருகனின் மயில்வாகனம்' என அமுதா பாடிக் கொண்டே வந்தாள். செந்திலுக்கு உற்சாகம் பீறிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;“வேறென்ன மயில்பாட்டு தெரியும் ?பாடேன் அதையும்..”&lt;br /&gt;&lt;br /&gt;“மயில்போல பொண்ணு ஒண்ணு&lt;br /&gt;கிளி போல பேச்சு ஒண்ணு&lt;br /&gt;குயில் போல பாட்டு ஒண்ணு.கேட்டு நின்னு&lt;br /&gt;மனசு போன இடம் தெரியல.&lt;br /&gt;அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல!” அமுதா சுமாராய் பாடிவைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அழகா பாடறே அமுதாக்கா...”&lt;br /&gt;&lt;br /&gt;அமுதாவுக்கு மயிலைப்பற்றி பல விஷயங்கள் தெரிந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“செந்தில்!. வாரிசு உரிமை மூத்தவருக்குத்தான் சொல்வோம் இல்ல இந்தப்பாடத்தை நாம மயில்கள்கிட்ட காணலாம்..கம்பன் சொல்லுவாரு..’ மயில் முறைக்குலத்துரிமையை மனுமுதல் மரபை, செயிர் உறபுலச் சிந்தையால் என் சொனாய் தீயோய்’ அப்படீன்னு கூனி கைகேயிகிட்ட பரதனுக்கு பட்டம் ஏற்பாடு செய்ய சொல்கிறபோது கைகேயி&amp;nbsp;சீற்றமாய் கேட்பாளாம்.’என்னது மனு முதலாய் காத்துவருகிற மயில்முறைகுலத்தின் உரிமையை உன் கெட்டபுத்தில&amp;nbsp; இப்படி சொல்றியே&amp;nbsp;தீயவளே’ன்னு.ஆனா&amp;nbsp;அப்புறம் கதையே மாறிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அது என்ன மயில் முறைக்குலத்துரிமை? சொல்றேன் கேளு..மேலை நாட்டில் மயில்பண்ணைவைத்து ஆராய்ச்சி செய்தார், ஒருத்தரு...” என்று விவரம் கூற ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;’மயிலின் இயல்புகளை அவர் கூர்மையாககவனித்துவந்தாராம்.மயில்முட்டையிலிருந்து வந்த அதன் முதல் குஞ்சுக்கு அதன் காலில் பச்சைவண்ண நூலைக்கட்டினார். அடுத்த குஞ்சுக்கு சிவப்பு நூல் அதற்கடுத்ததற்கு மஞ்சள் நூல்என்று,அந்தவிபரங்களை தன் பதிவேட்டில்குறித்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மயில்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து தோகைவிரித்தாடிய சந்தர்ப்பத்தில் அந்த&lt;br /&gt;பச்சைக்கயிறுகட்டிய குஞ்சுதான் முதலில் தோகை விரிக்கத் தொடங்கியதை&lt;br /&gt;அவர்கவனித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் முட்டையிலிருந்து வெளிப்பட்டமுதல்குஞ்சு.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பர் குறிப்பிட்ட மயில்முறைக்கு இப்போது விளக்கம் கிடைத்துவிட்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம் முன்பே தமிழ்&lt;br /&gt;இலக்கியம் சொல்லிவிட்டது.ஆமாம் அந்த மயில்பண்ணை நடத்தியமேலைநாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது.&lt;br /&gt;'பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்&lt;br /&gt;கலாபம் புனைந்த களிமயில் மூத்தது...” அப்படீன்னு. நான் ஆர்வமா.தமிழ் இலக்கியம் படிக்கிறதால உனக்கு இப்போ மயில்பத்தி&amp;nbsp; பகிர்ந்துக்க முடிஞ்சது செந்தில்!”&lt;br /&gt;&lt;br /&gt;“அழகா இருக்கு விளக்கம்..சிலபேருகிட்ட பேசினா மனசு, துடைச்சிவிட்ட மாதிரி ஆகுது.அது அமுதாக்காகிட்ட எனக்குக்கிடைக்குது!”&lt;br /&gt;&lt;br /&gt;செந்திலுக்கு அமுதாவோடு பேசியதெல்லாம் நினைவிற்குவந்தன.இப்போது மறுபடியும் அஞ்சுமலைக்குப் போக வாய்ப்பு வந்ததில் செந்திலுக்கு மனசு குதியாட்டம் போட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை அமுதா ஊரிலிருப்பாளோ மாட்டாளோ? அவளுடைய பெரியப்பா வீட்டிற்கு மதுரைக்கு விடுமுறையில் போவதாய் முன்னேயே சொல்லி இருந்தாள் ஆனாலும் இனி அவனுக்குக் குமாரின் துணையே தேவை இல்லை. தனியாகவே மலைக்குப் போய்விடுவான். போனமுறை போனபோதே அந்தப் பகுதியெல்லாம் மனதில் அத்துப்படியாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஐந்து மலைப் பகுதியைச் சுற்றிலும் கரிசல் காடுதான். பெரும்பாலும் மலை சார்ந்த பகுதி என்பதால் பயன்படுத்த முடியாத நிலவெளி. ஒரு புறம் இறவைத் தோட்டங்கள்; இன்னொரு புறம் கண்மாய்க் கரைமரங்கள் என்று ஊர் அமைந்திருந்ததை செந்தில் கவனித்து வைத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை கற்பகத்துடன் ஊர் வந்ததும்,கொஞ்சநேரம் அக்காமகள் மயிலைக்கொஞ்சினான்.அவன் சொன்னதுபோலவே தங்கமயில் என்று அழைக்காமல் கற்பகத்தின் புகுந்தவீட்டிலும் எல்லாரும் குழந்தையை மயிலுக்குட்டி என்று கூப்பிட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;“அக்கா..நான் வீட்டு மயிலைஆசைதீர கொஞ்சிட்டேன் கொஞ்சம் போயி வெளில மயிலுங்களை கண்ணால பார்த்திட்டுவரேன்.. என்று சொல்லிவிட்டு தனியே புறப்பட்டுவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;இறவைத் தோட்டங்கள் உள்ள பகுதியில் காலாற நடந்தான். அவ்வழியேதான் மலையேறியாக வேண்டும். பெரிய பெரிய தோட்டங்களில் மிளகாய்ச் செடிகள் கொத்து கொத்தாகக் காய்த்துத் தொங்குவதையும், இன்னொரு தோட்டத்தில் கம்பங் கதிர்கள் பால் கோத்துக் கொண்டு செழிப்பாயிருப்பதையும் பார்க்கத் தோன்றாதவனாய் மலை ஏறி மயில் கூட்டத்தைக் கண்ணாரப் பார்க்கத் தவித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;மயில் ஆடுமாமே தோகையை விரிச்சிகிட்டு அதைப் பார்க்கமுடியுமா, இந்த வாட்டியாவது? அமுதாவுடன் போனபோதும் மயில் ஆட்டம் பார்க்க முடியவில்லை.. மயிலிறகு எட்டு பத்தாவது பொறுக்கிடணும். ஊருக்குப் போனா முத்து, ரமேஷ¤, வனஜா எல்லாருமில்ல என்கிட்ட கேக்கறாங்க?&lt;br /&gt;&lt;br /&gt;'அழகுமயில் ஆட அபிநயங்கள் பாட..' பாட்டை முணு முணுத்தபடி கால்களை எட்டப் போட்டு நடக்க ஆரம்பித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் சிலர் 'நாசமாப்போக' என்று ஓங்கிய குரலில் திட்டியபடி கற்களை எடுத்துக் கொண்டு ஓடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே போகிறார்கள் எல்லாரும் என்று செந்தில் திரும்பிப் பார்த்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே ஒரு தோட்டத்தில் பால் கோர்த்திருந்த கம்பங் கதிர்களையெல்லாம் மயில்கள் கூட்டமாய் வந்து மேய்ந்து கொண்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ அய்யோ பயிரு எல்லாம் திங்குதே இந்தப் பாழும் மயிலுங்க....இதை சுட்டுப் போடுங்களேன் யாராச்சும்? எங்க ரத்தத்தைத் தண்ணீராப் பாய்ச்சி கதிர வளத்தோமே..இப்படி எல்லாத்தியும் தின்னுப் போயிடிச்சே. வருஷத்துக்கும் சேத்து வச்சிக்க வேண்டிய சொத்து. எங்க உசுரு சீவன் எல்லாமே இதுதானே? அத்தினியும் கூட்டமா வந்து அளிச்சித்தின்னுடிச்சே...." எங்க வயித்துக் கஞ்சில மண்ணை வாரிப் போட்டுடிச்சே...பாவி மயிலுங்களோட தோகையில் நெருப்பு வச்சிக் கொளுத்துங்க.. அளகாயிருந்து என்ன அறிவு கெட்ட ஜன்மங்க.. எல்லாத்தியும்..ஒழிச்சிக் கட்டுங்க" அனைவரும் கைவிரல்களைச் சொடக்கி ஆத்திரமாய் சபித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மயில்கள் கதிர்கள் எல்லாவற்றையும் தின்று முடித்து கற்களுக்குள் தப்பித்து ஓடி ஓடி மலை மீது பறந்து போய் உட்கார்ந்துவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;"இந்த மயிலுங்களால தோட்டத்திலயும் காட்லயும் எத்தினி அழிவு.. அய்யோ சொல்ல ஆகலியே..." நெஞ்சில் அடித்துக் கொண்டு பலர் கதறினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சற்றுமுன்பு தான் பார்த்த கம்பங் கதிரெல்லாம் மொட்டை அடித்தாற்போல் இப்போது நிற்கவும் செந்திலுக்கும் சங்கடமாயிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மயில்கள் மக்காச் சோள முளைகளைக் கொத்திக் குதறி, சின்னாபின்னப் படுத்தியிருந்தன. சர்வமும் நாசமாகி அழிந்து பிரளயத்துக்குப் பின் கிடந்த பூமியாய் அந்தத் தோட்டம் கலவரமாயிருந்தது.. கல்லடிக்குத் தப்பிக்கும் பிரயத்தனத்தில் கதிர்களில் தோகை பட்டு ஊதாவும் பச்சையுமான வண்ணத்து மயில் இறகுகள் பயிர்பச்சை நடுவே விழுந்து கிடந்தன.. செந்தில் அவைகளையே பார்த்தான்.சாதாரண நேரங்களில் மயிலிறகுகளைப்பார்க்கிற போதே பரவசப்பட்டு நிற்பான். இப்போது இறந்த பயிர்களுக்கு மலர்வளையமாய் அவைகள் அவனை அச்சுறுத்தின. 'ச்சீ ' என வெறுப்பாக வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மலைப்பக்கம் போகாமல் திரும்பி நடந்தான். என்னவோ நெஞ்சு கனத்ததுபோல உணர்வு. &lt;br /&gt;&lt;br /&gt;'அய்யோ அய்யோ எல்லாம் போயிடிச்சே... ஏற்கனவே நாலுநாளா பசிபட்டினில துடிக்கற பச்சப் புள்ளைகளுக்கு இப்ப கம்பங் கஞ்சிக்குக் கூட வளி இல்லாம செஞ்சிடிச்சே இந்த நாசமாப் போவுற மயிலுக் கூட்டம்!". தீனமான குரல் அவன் நெஞ்சைப் பிசைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சட்டைப் பையிலிருக்கும் மயிலிறகுகளை மெதுவாய் எடுத்தவன் அவைகளை அப்படியே கீழே போட்டான்.. &lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப வீடு வந்தபோது,”மயிலு. மயிலுகுட்டி! எங்களை வாழவைக்க வந்த செல்வ மயிலு!&lt;br /&gt;அழகு மயிலு! அறிவு மயிலு...”என்று கற்பகத்தின் மாமியார் குழந்தையைப்பார்த்து குதூகலமாய் சொல்லிக்கொண்டு இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;செந்திலுக்கு நாராசமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/35738787-116045841171000724?l=shylajan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://shylajan.blogspot.com/feeds/116045841171000724/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=35738787&amp;postID=116045841171000724&amp;isPopup=true' title='50 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/116045841171000724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/35738787/posts/default/116045841171000724'/><link rel='alternate' type='text/html' href='http://shylajan.blogspot.com/2006/10/blog-post_116045841171000724.html' title='மயில்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)'/><author><name>ஷைலஜா</name><uri>http://www.blogger.com/profile/07546846810596031222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/_FrKYYmrlyCk/Soi62amOhzI/AAAAAAAAASQ/B98M_QMbM0I/S220/amazon-parrot.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-SXCXghJVn68/TrCFmXKUEBI/AAAAAAAAAt8/RSBd84HNnIY/s72-c/peacock.jpg' height='72' width='72'/><thr:total>50</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-35738787.post-1344999853279032478</id><published>2011-10-31T06:42:00.003+05:30</published><updated>2011-10-31T18:19:24.953+05:30</updated><title type='text'>வாழ்க்கைப்பாடம்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-P9vuASfVdvg/Tq3z9GfbbyI/AAAAAAAAAt0/RdoJ2FhBEMI/s1600/gold-chain.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="305" width="320" src="http://3.bp.blogspot.com/-P9vuASfVdvg/Tq3z9GfbbyI/AAAAAAAAAt0/RdoJ2FhBEMI/s320/gold-chain.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எதிர்பாராமல் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று  யாரும் என்னிடம் சொல்லாத பொழுதில் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது! நாளை எனக்கு  எண்பதாவது வயது பிறந்த நாள்  கொண்டாட்டத் திருநாளுக்கு வீட்டிற்கு உறவும் சொந்தமும் வந்து குவிந்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படி ஒரு அதிர்ஷ்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்தி இர
